ரமலான்

ரமலான் (Ramadan) (/ˌræməˈdɑːn//ˌræməˈdɑːn/; அரபு மொழி: رمضان‎ Ramaḍān, IPA: ; இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும்.

இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இசுலாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம்.

ரமலான்

ரமதான் என்ற அராபிய வார்த்தையானது ரமிதா அல்லது அர்-ரமத் (சுடும் வெப்பம் அல்லது உலர்தன்மை என்ற பொருளைத் தரக்கூடியது) என்பதிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும்.

நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் ஆகியோர் மட்டுமே நோன்பிருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர். மக்காவில் இருந்து மதீனாவிற்கு இசுலாமியர்கள் குடியேறிய இரண்டாம் வருடத்தில், ஷப்பான் மாதத்தில் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமான கடப்பாடாக இருந்தது. நள்ளிரவு சூரியன் அல்லது துருவ இரவு போன்ற இயற்கை நிகழ்வுடன் வாழும் முஸ்லிம்கள் மக்காவின் கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று பத்வாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன., ஆனால், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்னவென்றால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பகலிலிருந்து இரவை வேறுபடுத்த இயலக்கூடிய நாளிலிருந்து தமக்கு நெருங்கிய நாட்டின் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

விடியற்காலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருக்கும் போது, முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். தவறான பேச்சு (அவமதிப்பு, புறம்பேசுதல், சபித்தல், பொய் போன்றவை) மற்றும் சுய-பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்லாமல் பிறருடன் சண்டையிடுவது போன்ற பாவ காரியங்களில் ஈடுபட்டால் அவை நோன்பின் பலனைக் குறைத்து விடுமென்பதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் தங்கள் நடத்தையை தவிர்த்து விடுகிறார்கள். நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது ஸஹர் எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. நோன்பிற்கான ஆன்மீக வெகுமதி (தவாப்) மேலும் ரமலான் மாதத்தில் பெருக்கப்படும் என நம்பப்படுகிறது. ரமலான் மாதத்தில், பொதுவாக பிரார்த்தனைகளை அதிகப்படுத்துதல், திருக்குர்ஆனைப் பாராட்டுதல், பாராது ஒப்புவித்தல் மற்றும் நல்ல செயல்களையும் தொண்டுகளையும் அதிகரித்தல் ஆகியவை அறிவுறுத்தப்படுகிறது.  

நோன்பினால் விளையும் நற்பண்புகள்

நோன்பின் காலத்தில் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. ரமலான் நோன்பின் பலன்கள் குறித்து திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம் வசனத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" என்பதே அந்த வசனம் ஆகும்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

en:Help:IPA/Arabicஅரபு மொழிஇசுலாத்தின் ஐந்து தூண்கள்இசுலாமிய நாட்காட்டிஉதவி:IPA/Englishமுகம்மது நபிமுஸ்லிம்விக்கிப்பீடியா:ஆங்கில ஒலிப்புக் குறிகள்ஹதீஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அமைச்சரவைமணிமேகலை (காப்பியம்)மூவேந்தர்உணவுதிருவோணம் (பஞ்சாங்கம்)அருந்ததியர்கட்டபொம்மன்நாடகம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வெ. இராமலிங்கம் பிள்ளைஇந்திய உச்ச நீதிமன்றம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மண் பானைகுலசேகர ஆழ்வார்இந்தியக் குடியரசுத் தலைவர்திராவிடர்ஆனைக்கொய்யாபயில்வான் ரங்கநாதன்ஆற்றுப்படைகண் (உடல் உறுப்பு)சமணம்ஜே பேபிமுகலாயப் பேரரசுவெண்குருதியணுமுடியரசன்ஐக்கிய நாடுகள் அவைதிருமால்மரங்களின் பட்டியல்வீரமாமுனிவர்செக் மொழிஎலுமிச்சை108 வைணவத் திருத்தலங்கள்செங்குந்தர்வரலாறுபருவ காலம்நருடோசினேகாபிரியங்கா காந்திகட்டுவிரியன்குணங்குடி மஸ்தான் சாகிபுவேலுப்பிள்ளை பிரபாகரன்இந்தியக் குடிமைப் பணிஏப்ரல் 25கம்பராமாயணத்தின் அமைப்புந. பிச்சமூர்த்திபதினெண் கீழ்க்கணக்குநாளந்தா பல்கலைக்கழகம்உரிச்சொல்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சி. விஜயதரணிதமிழர் விளையாட்டுகள்ஜெயம் ரவிஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)சிவாஜி கணேசன்இந்தியாபெண்ணியம்நேர்பாலீர்ப்பு பெண்மக்களாட்சிஇரண்டாம் உலகப் போர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்வாணிதாசன்சித்ரா பௌர்ணமிகணையம்தமிழ்நாடுவிந்துதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்நற்றிணைமாரியம்மன்சிங்கம் (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழ் எண் கணித சோதிடம்ஓரங்க நாடகம்நினைவே ஒரு சங்கீதம்தமிழர் கலைகள்கருக்காலம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்அன்னை தெரேசா🡆 More