சமணம்

சமணம் (Sramana) என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக் கோட்பாடுகளைக் குறிக்கும்.

சமணம் என்ற சொல் சிரமண (śramaṇa) என்ற வடமொழிச்சொல்லின் சிதைவு; சிரமண என்றால் தன்னை வருத்துகை என்று பொருள் பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே சைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பௌத்தம், அஞ்ஞானம், வேதாந்தம் போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.

சமணம் என்ற சொல்லின் பொருள்

திவாகர முனிவரால் பொ.ஊ. 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.

     சாவகர் அருகர் சமணர் ஆகும்;      ஆசீ வகரும் அத்தவத் தோரே                             - திவாகர நிகண்டு 

அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

     சாவகர் அருகர் சமணர் அமணர்      ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே                             - ஐயர் வகை, பிங்கல நிகண்டு 

சமணம்-சைனம் பொருட்குழப்பம்

இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,

  1. கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்
  2. கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக பௌத்ததையும்
  3. கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும் பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.

இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள சைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள சைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் சைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு சைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.

இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் சைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,

  1. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு
  2. பௌத்தர்களின் நெறி நூலான மச்சிமா நிகாயம்
  3. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்
  4. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய புத்தக் காப்பியம் மணிமேகலை
  5. பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி
  6. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்

ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் சைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி சைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,

  1. பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்
  2. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை

ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

சமணமதக் கொள்கைகள்

  • அகிம்சை
  • மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை
  • கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிருவாண நிலையை அடைவது (இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிர்வாண நிலையாகும்).
  • எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல்
  • நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு
  • மனிதர்கள் அனைவரும் சமம். சாதிகள் கிடையாது
  • முக்கியமான பாவங்கள் என்பவை பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல் போன்றவைகளாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சமணமத வளர்ச்சி

மக்களை அதிகம் கவர்ந்த மதங்களில் சமணமும் ஒன்றாகும். ஏனெனில் இம்மதக் கருத்துக்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின்பற்றுவதற்கும் எளிமையாக இருந்தன. மேலும் இம்மதத்தை அரசர்களும், பேரரசர்களும் பின்பற்றியதால் இந்தியா முழுமையும் இம்மதம் பரவியது. தமிழ்ச் சங்கங்கள் போல சமணமதமும் சமண அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டது.

சமணமத அழிவிற்கான காரணங்கள்

  1. கொல்லாமைக் கொள்கை
  2. திகம்பரர், சுவேதம்பரர் என்ற பிரிவுகளாக சமணமத உடைவு
  3. பல்லவர், சோழர், பாண்டியர்களின் தாக்குதல்
  4. சாதிப் பிரிவுகளின் தோற்றம்
  5. முடியைப் பிடுங்குதல், பட்டினி போன்ற கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகள்
  6. சைவ சமயம் மீண்டெழுந்தமை
  7. பிரபலமாகாத சீடர்கள்
  8. புத்த சமய வளர்ச்சி
  9. நாயன்மார், ஆழ்வார்களின் பக்தி நெறி

சமணமதக் கொடைகள்

  1. சமண இலக்கிய நூல்கள் பாலி, பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாயின.
  2. சமுதாயத்தில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைய ஆரம்பித்தன.
  3. கல்வி மறுக்கப்பட்டோருக்கு சமணக் கல்வி அளிக்கப்பட்டது.
  4. இராசத்தான் மவுண்டு அபுவில் உள்ள பில்வாரா ஆலயம் கட்டப்பட்டது.
  5. எல்லோரா, பண்டேல்கண்டு ஆகிய இடங்களில் உள்ள குகைக் கோயில்கள் கட்டப்பட்டன.
  6. விலங்குகள் பலியிடப்பட்டது குறைய ஆரம்பித்தது.

சமணர் கழுவேற்றம்

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

சமணம் என்ற சொல்லின் பொருள்சமணம் -சைனம் பொருட்குழப்பம்சமணம் சமணமதக் கொள்கைகள்சமணம் சமணமத வளர்ச்சிசமணம் சமணமத அழிவிற்கான காரணங்கள்சமணம் சமணமதக் கொடைகள்சமணம் சமணர் கழுவேற்றம்சமணம் இதனையும் காண்கசமணம் மேற்கோள்கள்சமணம்அஞ்ஞானம், வேதாந்தம்ஆசீவகம்சாவகம் (சமயம்)சைனம்ஜைனம்பொது ஊழிபௌத்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலுப்பிள்ளை பிரபாகரன்நிதிச் சேவைகள்எயிட்சுஇந்திய உச்ச நீதிமன்றம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பள்ளர்காடுஇராமர்யாழ்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்இந்திய ரிசர்வ் வங்கிசிவபெருமானின் பெயர் பட்டியல்நாடார்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்திசரண்யா பொன்வண்ணன்கஞ்சாபிரபஞ்சன்புரோஜெஸ்டிரோன்தேனீபதினெண் கீழ்க்கணக்குஅவுரி (தாவரம்)ஜிமெயில்பெண்களின் உரிமைகள்மரகத நாணயம் (திரைப்படம்)மயக்கம் என்னஆடை (திரைப்படம்)மு. கருணாநிதிமுலாம் பழம்புதுமைப்பித்தன்மறைமலை அடிகள்வாலி (கவிஞர்)திருமலை நாயக்கர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்முதலாம் உலகப் போர்வில்லிபாரதம்கணையம்போக்கிரி (திரைப்படம்)பீப்பாய்அணி இலக்கணம்கருக்காலம்நெடுஞ்சாலை (திரைப்படம்)அரவான்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்புறநானூறுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருவிழாஇடமகல் கருப்பை அகப்படலம்ரெட் (2002 திரைப்படம்)அருணகிரிநாதர்கவலை வேண்டாம்நஞ்சுக்கொடி தகர்வுகுண்டூர் காரம்ஆதலால் காதல் செய்வீர்முல்லை (திணை)சேமிப்புக் கணக்குஎல் நீனோ-தெற்கத்திய அலைவுநாளந்தா பல்கலைக்கழகம்கருக்கலைப்புசதுப்புநிலம்விந்துஉத்தரப் பிரதேசம்தேவாரம்விஸ்வகர்மா (சாதி)வேளாண்மைஜவகர்லால் நேருகர்மாகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மதுரை வீரன்இமயமலைவாணிதாசன்இந்தியன் பிரீமியர் லீக்தொல்காப்பியர்பிரீதி (யோகம்)குப்தப் பேரரசுசிவாஜி (பேரரசர்)🡆 More