திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவா்கள் வணங்கும் கடவுள்.
சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.
திருமால் | |
---|---|
மயிலாப்பூர் சீனிவாசப் பெருமாள் | |
அதிபதி | முல்லை (திணை) |
வேறு பெயர்கள் | அச்சுதன், அசிதன், அஞ்சன், அஞ்சனவண்ணன், அஞ்சனவுருவன், அரவணையான், அரவிந்தலோசனன், அரி, அரிந்தமன், அலகைமுலையுண்டோன், அனந்தசயனன், அனந்தன், ஆயிரநாமன், ஆயிரம்பெயரோன், ஆழியான், இந்திராபதி, இரங்கன், இராமன், இராகவன், இருடிகேசன், இருடீகேசன், உந்திபூத்தோன், உலகமளந்தான், உலகளந்தான், உவணகேதனன், உவணமுயர்த்தோன், உவணவூர்தி, ஓணப்பிரான், கடல்வண்ணன், கடற்கிடந்தோன், கடனிறவண்ணன், கருடாரூடன், கண்ணன், கள்ளழகர், கார்மேகவண்ணன், காசாம்பூவண்ணன், காப்புக்கடவுள், குந்தன், கேத்திரி, கேசவன், கொண்டல்வண்ணன், கோவிந்தன், கோவர்த்தனன், சக்கரபாணி, சக்கரன், சக்கராயுதன், சக்கவியூகன், சகத்திரநாமன், சகன்நாதன், சனார்த்தனன், சங்கபரணி, சங்கபாணி, சங்கமேந்தி, சதாவர்த்தன், சலபதி, சதுப்புயன், சம்பு, சலசலோசனன், சாரங்கன், சாரங்கபாணி, சாரநாதன், சாரதி, சிறீனிவாசன், சீயன், சுதர்சனன், சுந்தரராசன், சூரியநாராயணன், செங்கணான், செல்விநாதன், சேலவன், சௌந்தரன், சௌரி, தனுசாரி, தாமோதரன், திகிரியான், திதிகர்த்தா, திதிபரன், திரியம்பகன், திரிவிக்ரமன், திருவேங்கடன், திருமகள்கொழுநன், திருமறுமார்பன், திருமால், திருவாளன், துழாய்மௌலி, நாராயணன், நரசிம்மன், நந்தன், நட்சத்திரநேமி, நளினாபதி, நிலமளந்தோன், நீலமேகன், நீலமேனியன், நீலவண்ணன், பகவான், பச்சைப்பெருமாள், பச்சையன், பஞ்சாயுதபாணி, படிமுழுதிடந்தோன், படியளந்தோன், பர்க்கன், பரந்தாமன், பரமேட்டி, பரவாசுதேவன், பார்த்தசாரதி, பிரமம், புனர்வசு, பூதபாவநன், பூதரன், பூமிகொழுநன், பூமிநாயகன், பூவைவண்ணன், பூவராகன், பெண்டுருவன், பெரியபெருமாள், பெருமாள், பேரருளாளன், மகாவிஷ்ணு, மாலியன், மணிவண்ணன், மரகதமேனியன், மாயவண்ணன், மாதவன், முஞ்சகேசன், முஞ்சகேசி, முத்தன், மேதினிபடைத்தோன், வரையெடுத்தோன், வாமன், வரதன், விது, விலாசி, வெகுரூபன், வெங்கடாசலம், ஹரிஹரன் |
ஆயுதம் | சங்கு, சக்கரம், வில், வாள் மற்றும் கதாயுதம் |
துணை | திருமகள், பூமித்தாய் |
வாகனம் | கருடாழ்வார் |
தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோனை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடப்பெற்ற 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபடுகின்றனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article திருமால், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.