லோ.
முருகன் (L. Murugan, லோகநாதன் முருகன்) ஓர் வழக்கறிஞர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆவார். இவர் தற்போது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.
லோ. முருகன் | |
---|---|
எல். முருகன் | |
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 ஜூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
அமைச்சர் | பர்சோத்தம் ரூபாலா |
முன்னையவர் | பிரதாப் சந்திர சாரங்கி |
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 ஜூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
அமைச்சர் | அனுராக் சிங் தாக்கூர் |
முன்னையவர் | ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
முன்னையவர் | தவார் சந்த் கெலாட் |
தொகுதி | மத்தியப் பிரதேசம் |
மாநிலத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு | |
பதவியில் 11 மார்ச் 2020 – 07 ஜூலை 2021 | |
முன்னையவர் | தமிழிசை சவுந்தரராஜன் |
பின்னவர் | அண்ணாமலை குப்புசாமி |
துணைத் தலைவர், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் | |
பதவியில் 2017–2020 | |
முன்னையவர் | ராஜ் குமார் வேர்க்க |
பின்னவர் | அருண் ஹால்டர் |
கலாச்சார பிரிவின் 2 வது மாநில தலைவர் தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | காயத்திரி ரகுராம் |
பின்னவர் | பதவியில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 29, 1977 கோனூர், பரமத்தி, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கலையரசி |
பிள்ளைகள் | தர்னேஷ் இந்திரஜித் |
பெற்றோர் | லோகநாதன் |
முன்னாள் கல்லூரி | டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை சென்னைப் பல்கலைக்கழகம் |
வேலை | • வழக்கறிஞர் • அரசியல்வாதி |
இவர் 1977 ஆம் ஆண்டு, மே 29 அன்று தெலுங்கு பேசும் அருந்ததியர் குடும்பத்தில் பிறந்தார். 1977இல் பிறந்த இவர், தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர். இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும். 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார்.
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அவர் இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 3 வது இடத்தைப் பெற்றார். அவர் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக ஆனார். மேலும் 2017 முதல் 2019 வரை இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார். 07 சூலை 2021 வரை அப்பதவியில் இருந்தார். அவர் அருந்ததியர் சமூகத்தில் இருந்து இந்த பதவியை வகிக்கும் முதல் நபர் ஆவார்.
அவர் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தாராபுரம் சட்டமன்றத் தொகுயில் போட்டியிட்டு திமுகவின் என். கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
07 சூலை 2021 அன்று மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். சுதந்திரத்துக்குப் பிறகு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முதல் இந்திய அமைச்சரவை உறுப்பினர் இவர்.
அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.
This article uses material from the Wikipedia தமிழ் article லோ. முருகன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.