தற்கொலை முறைகள் என்பது ஒரு நபர் தானாக விரும்பி தற்கொலை செய்து கொள்ளும் முறையாகும்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தற்கொலை முறைகள் இருவகைப்படும். ஒன்று உடல் சேதப்படுத்தும் தற்கொலை மற்றொன்று இரசாயனங்களை பயன்படுத்துவது. மூச்சுக்காற்று மற்றும் நரம்புகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் உடலை சேதப்படுத்தும் முறையிலும், உயிர்மங்களின் சுவாசத்தை தடுத்தல் (cellular respiration) அல்லது பிற இரசாயன மாறுதல்களால் இறப்பதும் உள்ளடங்கும்.
அதிகமான குருதி உடலில் இருந்து வெளியேற்றி தற்கொலை செய்யும் முறை. இஃது இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவைகளுக்குத் தேவையான இரத்தத்தின் அளவு குறைவதால் ஏற்படும் மரணம். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்படுத்தி அதன்மூலமாக இரத்தத்தை வெளியேற்றுவதால் தற்கொலை செய்யப்படுகிறது.
மணிக்கட்டை வெட்டிக்கொள்ளுதல் காரணமாக அதிக இரத்தத்தினை வெளியேற்றுதல் இம்முறையாகும். பெரும்பாலான தற்கொலை முயற்சி தோற்றுப் போகின்றது. அவ்வாறு நிகழும்போது அதிக காயங்களுடன் உயிர்பிழைத்தாலும், சதைப்பகுதி மிகவும் புதையுண்டு காட்சியளிக்கும்.
நீரில் மூழ்கி உயிரிழத்தல் முறையில் நீரில் அல்லது ஏதேனும் ஒரு திரவத்தில் மூழ்குதால் மூச்சு விடுவது நின்று உயிர்விடும் செயலாகும். மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் இவ்வகையான மரணம் நிகழ்கிறது.
மூச்சுத்திணறல் என்பது ஆக்சிஜன் வாயுவை சுவாசிப்பதை நிறுத்துதலில் இருந்து மாறுபட்டு இருக்கிறது. ஹீலியம், ஆர்கன், நைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களை சுவாசிப்பதன் மூலமாக இவ்வகையான மரணம் நேருகிறது.
செயற்கையான முறையில், உடல் வெப்பத்தினை குறைத்து தற்கொலை செய்துகொள்ளும் முறையாகும். இம்முறையான தற்கொலையில் முதலில் உடல் நடுக்கம் ஏற்படும், பிறகு சித்தப்பிரமை, மாயத்தோற்றம், பின்னர் மனதில் ஒருங்கிணைப்பு இல்லாமல் போகும்; உடலில் போதுமான வெட்பம் இல்லாததால் இறுதியில் மரணம் நிகழும்.
மின்சாரத்தை உடலில் பாய்ச்சி, அதன் மூலமாக தற்கொலை செய்துக் கொள்ளும் முறையாகும். உடலில் மின்சாரம் பாய்வதால், இதயத்தில் ஏற்படும் இரத்த ஓட்டம் தடைபெற்று, உயிரிழப்பு நிகழும். உடலில் செலுத்தப்படும் மின்சாரத்தின் அளவினைப் பொருத்து, உடலில் தீக்காயங்கள் ஏற்படும்.
அதிகமான உயரமுள்ள மலை, கட்டிடம், அனை, பாலம், வீடு உள்ளிட்டவைகளில் இருந்து குதித்தலால் இவ்வகையான தற்கொலை முறையாகும்.
2006-ம் ஆண்டில் ஹாங்காங் பகுதியில், உயரத்தில் இருந்து குதித்து தற்கலை செய்யும் முறையை 52.1% கடைபிடித்துள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு பொதுவான முறையாக சுடுகலன்களைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெற்றிப்பொட்டிலோ அல்லது தலையின் பக்கவாட்டிலோ அல்லது வாயிலோ அல்லது கழுத்திலோ சுட்டுக்கொள்வது இத்தற்கொலை முறையாகும். ஆஸ்திரேலியாவில் இவ்வகையான தற்கொலைகள் 10% சதவிகிதமாக உள்ளது. அமெரிக்காவில் 53.7% தற்கொலையை செய்து கொள்பவர்கள் இம்முறையை கையாண்டுள்ளனர்.
தூக்கில் தொங்குதல், என்பது கயிறு அல்லது சேலை போன்றவைகளை உத்திரத்தில் அல்லது மரத்தில் அல்லது உயரமான இடத்தில் கட்டி அதில் கழுத்தை மாட்டிக்கொள்ளுதல் ஆகும். இதன் காரணமாக நாக்கு வெளியில் வருதல், பக்கவாதம் அல்லது இறப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தூக்கில் தொங்கும் வழக்கம், நகரங்களில் விட கிராமங்களில் மிகவும் அதிகமாக உள்ளது.
வண்டியின் முன்பு பாய்ந்து உயிரை இழக்கும் முறை இதுவாகும். புகை வண்டி அல்லது வேகமாக செல்லும் தானுந்து அல்லது சரக்கு வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முறையாகும்.
புகை வண்டி முன்பு பாய்தலால் 90% வரை தற்கொலை நிகழ்கிறது, இது மிகவும் அபாயகரமான தற்கொலை முறையாகும். இவ்வாறு தற்கொலை முயற்சி செய்து, அதில் தோல்வி அடையும் போது பெரிய அளவிலான புண், எலும்பு முறிவு, மற்றும் மூளை பாதிப்பு மற்றும் உடல் ஊனமுறுதல் போன்றவை நிகழ அதிக வாய்ப்பு ஊள்ளது.
நஞ்சு அருந்துதல் விரைவாக தற்கொலை செய்துகொள்ள உதவும் ஒரு முறையாகும். சையனைடு (hydrogen cyanide) அல்லது நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை உட்கொள்ளுவதால் மரணம் நிகழும். 1978-ம் ஆண்டு ஜோன்ஸ்டவுனில் ஜிம் ஜோன்ஸ் என்ற மதத் தலைவரின் கீழ் நடைபெற்ற பெருந்தற்கொலை(mass suicide) நிகழ்வில் சையனைடு அருந்தி அதிகமானோர் உயிரிழந்தனர்.
உலகமுழுவதும், 30% மக்கள் பூச்சிக்கொள்ளி மருந்துகளை அருந்துதல் மூலமாக தற்கொலை செய்துகொள்கின்றனர். ஐரோப்பிய பகுதிகளில் 4% மக்களும், பசிபிக் பகுதிகளில் 50% மேற்பட்டவர்கள் இம்முறையை தற்கொலை செய்துகொள்வதற்காகப் பயன்படுத்துகின்றனர்.
மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது மரணம் நிகழ்கிறது. இவ்வகையான மருந்து நோய்தீர்க்க உதவும் மருந்தின் அளவுக்கதிகமான பயன்பாடாகவோ அல்லது போதை தரக்கூடிய அல்லது தூக்கமளிக்கக்கூடிய மருந்தின் அளவுக்கதிகமான பயன்பாடாகவோ இருக்கலாம்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் நச்சுவாயுக்களை சுவாசிக்கும் போது மரணம் நிகழ்கிறது. பெரும்பாலும், தானுந்தில் இருந்து வெளிவரும் நச்சுவாயு கார்பன் மோனாக்சைடு கல்நதிருக்கும், இதனை அளவுக்கு அதிகமாக சுவாசிக்கும் போது மரணம் நிகழ்கிறது. தற்போது வருகின்ற புதிய தானுந்துகளில் 99% கார்பன் மோனாக்சைடு நீக்கப்பட்டுள்ளது.
உயிர் தியாகம் செய்தல், ஒரு சமய முறையாகவே இருந்துவந்துள்ளது. அஸ்டெக் நாகரிகம் மற்றும் மாயா நாகரிகம் இரண்டிலும், துறவிகளும் அரசர்களும் உயிர்தியாகம் செய்தல் ஓவியங்களில் பிற கலைவேடுப்பாடுகளிலும் காணப்படுகிறது. பெரும்பாலும், இவ்வகையான தியாகத்தில் கத்தில் அல்லது கோடரி மூலமாக தலையை வெட்டுதல் நடைபெறும்.
உண்ணாநிலைப் போராட்டம் மரணத்திற்கு வழிவகுக்க அதிகவாய்ப்புள்ளது. இவ்வகையான போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காக நடக்கின்றது.
இம்முறை தற்கொலையில் இறப்பு சில வாரங்களில் அல்லது பல நாட்களில் நிகழலாம். இம்முறையில் தற்கொலை செய்து கொள்ளும்போது அவர்கள் தங்களுடைய சுயநினைவை இழந்து பின்னர் இறக்கின்றனர். அதிகமான நீர் பருகாதபோது, தாகம் ஏற்படுகிறது. பின்னர், நா வரண்டு விடுகிறது. உடலில் நீர் வீக்க கோளாறு (edema) உள்ளவர்கள் தங்களுடைய உடலில் அதிக நீர் வருவதால் நீர் அல்லது திரவ உணவு உணவுகள் அதிகம் பருகாமல் இவ்வகையில் இறக்கிறார்கள்.
"தற்கொலைத் தாக்குதல்" தன்னை தானே விருப்புடன் சாவைத் தளுவி மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும். செப்டம்பர் 11, 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது நடைபெற்ற தாக்குதலும் இவ்வகையைச் சேர்ந்தவையே.
This article uses material from the Wikipedia தமிழ் article தற்கொலை முறைகள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.