உருசியா அதன் தென்மேற்கில் உள்ள உக்ரைனின் மீது பெரிய அளவிலான படையெடுப்பை 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கியது.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
இது 2014 இல் தொடங்கிய உருசிய-உக்ரைனியப் போரின் மிகப்பெரிய விரிவாக்கம் ஆகும். உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின், 1997-இற்குப் பின்னரான நேட்டோ விரிவாக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தது என்றும், உக்ரைன் நேட்டோ கூட்டணியில் சேர்வதை சட்டப்பூர்வமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினார். படையெடுப்பிற்கு முன்னதாக, 2021 இன் முற்பகுதி முதல் உருசிய இராணுவக் கட்டமைவு நெருக்கடி நீடித்து வந்தது. படையெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு, உருசியா கிழக்கு உக்ரைனின் எல்லைகளுக்குள் தனியெத்சுக் மக்கள் குடியரசு, இலுகன்சுக் மக்கள் குடியரசு ஆகிய இரண்டு சுயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலங்களை அங்கீகரித்தது. 2022 பிப்ரவரி 21 அன்று, உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள தொன்பாசு பகுதிக்குள் நுழைந்தன. பிப்ரவரி 22 அன்று, உருசியாவின் கூட்டமைப்புப் பேரவை நாட்டிற்கு வெளியே இராணுவப் படைகளைப் பயன்படுத்த பூட்டினுக்கு ஒருமனதாக அங்கீகாரம் அளித்தது.
2022 உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
26 ஏப்பிரல் 2024 இல் இராணுவ நிலைகள்: உக்ரைனின் கட்டுப்பாட்டில் உருசிய, உருசிய-சார்புப் படைகளின் கட்டுப்பாட்டில் | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
ஆதரவு:
| |||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
| ||||||
பலம் | |||||||
|
| ||||||
இழப்புகள் | |||||||
|
| ||||||
|
பிப்ரவரி 24 அன்று கி.ஐ.நே 05:00 (ஒ.ச.நே+2) மணியளவில், பூட்டின் கிழக்கு உக்ரைனில் "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" அறிவித்தார்; சில நிமிடங்களுக்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட உக்ரைன் முழுவதும் உள்ள இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடங்கின. உக்ரைனிய எல்லைக் காவல் படை உருசியா, பெலருஸ் உடனான அதன் எல்லைப் பகுதிகள் தாக்கப்பட்டதாகக் கூறியது. இரண்டு மணி நேரம் கழித்து, உருசியத் தரைப்படை உக்ரைனுக்குள் நுழைந்தது. இத்தாக்குதலுக்குப் பதிலளிக்கும் முகமாக, உக்ரைனியத் தலைவர் வலோதிமிர் செலேன்சுக்கி இராணுவச் சட்டத்தை அறிவித்தார். உருசியாவுடனான தூதரகத் தொடர்புகளைத் துண்டித்து, பொதுமக்கள் அணிதிரட்டலை அறிவித்தார். இந்தப் படையெடுப்பு பரவலான பன்னாட்டுக் கண்டனத்தைப் பெற்றது, உருசியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
உக்ரைன் நாட்டில் படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் 23,000 இந்தியர்களை போலாந்து, உருமேனியா, அங்கேரி, சிலோவாக்கியா, மல்தோவா நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டனர். கங்கா நடவடிக்கை மூலம் 26 பிப்ரவரி 2022 முதல் 11 மார்ச் 2022 முடிய, அந்நாடுகளிலிருந்து இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.
2 சூன் 2022 அன்றுடன் உக்ரைன் மீதான உருசியாவின் ஆக்கிரமிப்பு போரின் 100வது நாள் முடிவில், உக்ரைன் நாட்டின் 20% நிலப்பரப்புகள் உருசியா இராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
உருசியாவின் 100-வது நாள் ஆக்கிரமிப்பு போரின் முடிவில், 2 சூன் 2022 அன்று 1 கோடியே 20 லட்சம் உக்ரேனியர்கள் நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்துள்ளனர். மேலும் 68 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் போலந்து, உருமேனியா, அங்கேரி, மல்தோவா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாகச் சென்றுள்ளனர். போலாந்து நாட்டில் மட்டும் 36 இலட்சம் உக்ரைனிய அகதிகள் குடியேறியதால், அந்நாட்டின் மக்கள் தொகை 10% அதிகரித்துள்ளது.உருசியா மீது உலக நாடுகள் 5,831 தடைகளை விதிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயன்றது. உக்ரைன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர்வதால் உருசியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக அமையும் எனக்கருதிய உருசியா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர தடுத்தது. 2014-ஆம் ஆண்டில் உக்ரைனில் உருசிய மொழி பேசுபவர்களைக் கொண்டு உக்ரைனில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளை உருசியா தூண்டியது. இதனால் உக்ரைனின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேசத்தில் உருசிய மொழி அதிகமாக பேசும் குடியரசுகளான தனியெத்சுக் மக்கள் குடியரசு மற்றும் இலுகன்சுக் மக்கள் குடியரசுகள் 2014 செப்டம்பர் 5 அன்று தங்களை தனி நாடுகளாக அறிவித்துக் கொண்டன. இந்த நாடுகளுக்கு உருசியா 2022 செப்டம்பர் 21 அன்று அங்கீகாரம் வழங்கியது மேலும் உக்ரைனின் கிரிமியா மூவலந்த தீவுப் பகுதியை ருசியா ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. 2021-2022-ஆம் ஆண்டுகளில் உருசிய-உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து இப்போர் துவங்கியது.
உருசிய இராணுவம் கைப்பற்றிய உக்ரைனின் கிழக்கில் உள்ள கெர்சன் மாகாணம், தோனெத்ஸ்க் மாகாணம், லுகான்ஸ்கா மாகாணம் மற்றும் சப்போரியா மாகாணங்களை உருசியாவுடன் இணைத்துக் கொண்டதாக உருசிய அதிபர் புதின் 30 செப்டம்பர் 2022 அன்று அறிவித்தார். மேலும் இந்த 4 பகுதிகளில் இதற்கு முன்பாக இணைப்பு குறித்து பொது வாக்கெடுப்பை உருசியா நடத்தியிருந்தது. இந்த இணைப்பை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இச்செயல் சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. உக்ரைனின் 4 பிராந்தியங்களை உருசியா இணைத்ததை ஒப்புதல் வழங்க ஐக்கிய நாடுகள் அவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ருசியாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
This article uses material from the Wikipedia தமிழ் article 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.