கடையெழு வள்ளல்கள்

சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார்.

கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன; இதுவே கடையெழு வள்ளல்கள் ஆகும்.

சிறுபாணாற்றுப்படை காட்டும் தொகுப்பு

  1. பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன் (பொதினி -பழனி)
  2. பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன் (பறம்பு மலை)
  3. காரி - (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன் (councilman)
  4. ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் (பொதிகை மலை)
  5. அதியமான் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன் (தர்மபுரி)
  6. நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்
  7. ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.

பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 158 காட்டும் தொகுப்பு

  1. பாரி - பறம்பிற் கோமான் (பரம்புமலை அரசன், மூவேந்தரோடு போரிட்டவன்)
  2. ஓரி - கொல்லிமலை நாட்டை ஆண்டவன்
  3. காரி - காரி என்னும் குதிரைமேல் சென்று போரிட்டவன்
  4. மலையன் - 'மறப்போர் மலையன்', மாரி போல் ஈகைப்பண்பு கொண்டவன்.
  5. எழினி - குதிரைமலை நாட்டை ஆண்டவன் ("ஊராது ஏந்திய குதிரை"), கூவிளங்கண்ணி மாலை அணிந்தவன். கூர்வேல் கொண்டு போர் புரிபவன்.
  6. பேகன் - கடவுள் காக்கும் மலை (பொதினி என்னும் பழனி) நாடன்
  7. ஆய் - "மோசி பாடிய ஆய்"

தொகுப்பில் மாற்றம்

சிறுபாணாற்றுப்படையில் அதிகன் எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான்.
புறநானூற்றில் எழினி எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான்.

தலையெழு வள்ளல்கள்

  1. குமணன்
  2. சகரன்
  3. சகாரன்
  4. செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி)
  5. துந்துமாரி
  6. நளன்
  7. நிருதி

ஆகிய எழுவரைத் தலையெழு வள்ளல்கள் எனத் தொகுத்துக் காட்டுவர்.

இந்தத் தொகுப்பு வரலாற்றுக்கு முரணானது.
குமணன் கடையெழு வள்ளல்களின் காலத்துக்குப் பிற்பட்டவன்.
செம்பியன் எனக் குறிப்பிடப்படுபவன் சிபிச் சக்கரவர்த்தி எனப் பேசப்படுபவன்.
தந்துமாறன் என்னும் வள்ளலைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
நிடத-நாட்டு நளன் பற்றிய இலக்கியம் உள்ளது.
பிற மூவர் புராணக் கதை மாந்தர்.

இவற்றையும் காண்க

வள்ளல்

மேற்கோள்கள்

Tags:

கடையெழு வள்ளல்கள் சிறுபாணாற்றுப்படை காட்டும் தொகுப்புகடையெழு வள்ளல்கள் பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 158 காட்டும் தொகுப்புகடையெழு வள்ளல்கள் தொகுப்பில் மாற்றம்கடையெழு வள்ளல்கள் தலையெழு வள்ளல்கள்கடையெழு வள்ளல்கள் இவற்றையும் காண்ககடையெழு வள்ளல்கள் மேற்கோள்கள்கடையெழு வள்ளல்கள்எட்டுத்தொகைவள்ளல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்விருந்தோம்பல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)கன்னி (சோதிடம்)செங்குந்தர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்எஸ். ஜெகத்ரட்சகன்நெடுநல்வாடைகாடுவெட்டி குருநீலகிரி மக்களவைத் தொகுதிதிருநங்கைஈரோடு தமிழன்பன்நீக்ரோபகத் சிங்லோ. முருகன்மொழிபூக்கள் பட்டியல்கலாநிதி வீராசாமிகுருதிச்சோகைவீரமாமுனிவர்நவதானியம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)எடப்பாடி க. பழனிசாமிசிறுநீரகம்திருமால்சிவம் துபேகொன்றைஈ. வெ. இராமசாமிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)விக்ரம்பனிக்குட நீர்திருவிழாதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிமயங்கொலிச் சொற்கள்வாணிதாசன்பர்வத மலைமொழிபெயர்ப்புஅழகிய தமிழ்மகன்பரிபாடல்முதுமொழிக்காஞ்சி (நூல்)மகேந்திரசிங் தோனிசூரரைப் போற்று (திரைப்படம்)உத்தரகோசமங்கைமதீச பத்திரனதொகாநிலைத் தொடர்இன்ஸ்ட்டாகிராம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கார்லசு புச்திமோன்வல்லினம் மிகும் இடங்கள்ஈமோஃபீலியாந. பிச்சமூர்த்திதூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கொங்கு வேளாளர்தமிழ்த்தாய் வாழ்த்துதமிழர் கலைகள்தாவரம்தமிழ்நாடு காவல்துறைபாம்புகுமரிக்கண்டம்திருப்பூர் மக்களவைத் தொகுதிமுக்கூடற் பள்ளுஅருணகிரிநாதர்எட்டுத்தொகைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைவிண்ணைத்தாண்டி வருவாயாமதராசபட்டினம் (திரைப்படம்)விஜய் வர்மாநிதி ஆயோக்விளம்பரம்சோழர் காலக் கட்டிடக்கலைகாமராசர்நெருப்புதசரதன்இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்இந்தியன் பிரீமியர் லீக்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்🡆 More