முதலாம் ஹரிஹரர்

முதலாம் ஹரிஹரர் (கி.பி.

விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646

1336-1356) விஜயநகரப் பேரரசை நிறுவியவர் ஆவார். ஹக்கா சங்கம மரபைத் தொடங்கியவருமான பாவன சங்கமரின் மூத்த மகனாவார். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவதாகும். ஆட்சிக்கு வந்த உடனேயே தற்காலக் கர்நாடகத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள பர்கூரு என்னுமிடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினார். இவர் 1339 இல் அனந்த்பூர் மாவட்டத்திலுள்ள குட்டி (Gutti) என்னும் தனது தலைமையிடத்திலிருந்து இன்றைய கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளை நிர்வகித்து வந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர் தொடக்கத்தில், ஹொய்சால அரசின் வடக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகத் தெரிகிறது. பின்னர் 1343 இல் ஹொய்சால அரசன் மூன்றாவது வீர பல்லாலனின் மறைவைத் தொடர்ந்து ஹொய்சாலம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

இவர் காலத்துக் கன்னடக் கல்வெட்டுக்கள், இவரை, கர்நாடக வித்யா விலாஸ் (மிகுந்த அறிவும், திறமையும் கொண்டவர்), ஆங்ரயவிபாடா (எதிர் அரசர்களுக்குத் தீ போன்றவர்), உறுதிமொழிகளைக் காப்பாற்றாத நிலப்பிரபுக்களைத் தண்டிப்பவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். இவருடைய தம்பிகளுள், புக்கா ராயன் பேரரசருக்கு இரண்டாவது நிலையில் இருந்தார். கம்பண்ண என்பவன் நெல்லூர் பகுதியையும், முட்டப்பா முலபாகலு பகுதியையும், மாரப்பா சந்திர குட்டியையும் நிர்வாகம் செய்து வந்தனர்.

இவருடைய தொடக்கப் போர்கள் மூலம், துங்கபத்திரை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவிக் கொண்டார். பின்னர் இவருடைய கட்டுப்பாடு படிப்படியாக, கொங்கண், மலபார் கரையோரங்களிலுள்ள சில பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இக்காலத்தில், மதுரை சுல்தானுடன் நிகழ்ந்த போரில் ஹொய்சாலத்தின் கடைசி அரசன் மூன்றாவது வீர பல்லாலன் இறந்தார். இந்த வெற்றிடம் அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு ஹரிஹரருக்கு வாய்ப்பாக அமைந்தது. முழு ஹொய்சால அரசும் ஹரிஹரரின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது.

மேற்கோள்கள்

Tags:

கர்நாடகம்கோட்டைசங்கம மரபுபோசளப் பேரரசுமூன்றாம் வீர வல்லாளன்விஜயநகரப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வட்டாட்சியர்தமிழ்நாடு அமைச்சரவைசாரைப்பாம்புநான்மணிக்கடிகைசுடலை மாடன்சிங்கம் (திரைப்படம்)கள்ளுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சுவாதி (பஞ்சாங்கம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இந்திய தேசிய காங்கிரசுஸ்ரீதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்மஜ்னுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇதயம்சுற்றுச்சூழல் மாசுபாடுமுலாம் பழம்பெண் தமிழ்ப் பெயர்கள்திருவாரூர் தியாகராஜர் கோயில்தென் சென்னை மக்களவைத் தொகுதிசெஞ்சிக் கோட்டைசேக்கிழார்விராட் கோலிகுதிரைஆறுமுக நாவலர்கரிகால் சோழன்சி. விஜயதரணிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிமுதலாம் இராஜராஜ சோழன்உன்னை நினைத்துஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஏலாதிமு. வரதராசன்மலையாளம்ஆற்றுப்படைதிருமூலர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)இசுலாமிய வரலாறுஉவமையணிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்ராதிகா சரத்குமார்அவிட்டம் (பஞ்சாங்கம்)திருவள்ளுவர்கருக்கலைப்புகள்ளர் (இனக் குழுமம்)தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வெள்ளியங்கிரி மலைகம்பராமாயணத்தின் அமைப்புடி. எம். கிருஷ்ணாவாக்குரிமைஇராவண காவியம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)செம்மொழிமாதவிடாய்பாரதிய ஜனதா கட்சிசிறுபஞ்சமூலம்விஜயநகரப் பேரரசுவரலாறுமருதமலைஆங்கிலம்ஆத்திசூடிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவெந்து தணிந்தது காடுவேலு நாச்சியார்பனைவானிலைஈ. வெ. இராமசாமிபிரேசில்சுப்பிரமணிய பாரதிபிரேமலதா விஜயகாந்த்அகழ்வாய்வுகுண்டூர் காரம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழர் கலைகள்🡆 More