விருபாட்ச ராயன் (கி.பி.
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
1404-1405) சங்கம மரபைச் சேர்ந்த, விஜயநகரப் பேரரசர்களில் ஒருவன் ஆவர். பேரரசனாக இருந்த இரண்டாம் ஹரிஹரன் இறந்த பின்னர், விஜயநகரத்தின் அரசுரிமைக்காக அவனுடைய மகன்களான முதலாம் தேவ ராயன், இரண்டாம் புக்கா ராயன், விருபக்ஷ ராயன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. முடிவில் விருபக்ஷ ராயன் அரசனானான் எனினும், இவனால் நீண்ட காலம் அரசாள முடியவில்லை. சில மாதங்களிலேயே அவன் கொலை செய்யப்பட்டார்.
விருபக்ஷ ராயனின் ஆட்சிக்காலம் மிகக் குறுகியதானதால், அவனது ஆட்சி பற்றிச் சொல்லுவதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை. ஆனால், இவர் காலத்தில், கோவா, சாவுல் (Chaul), டாபோல் (Dabhol) உள்ளிட்ட ஏராமான நிலப்பரப்பை விஜயநகரம் இழந்துவிட்டதாகப் பயணி பெர்னாவோ நூனிஸ் (Fernao Nuniz) குறிப்பிட்டுள்ளார். மேலும் விருபக்ஷ ராயன் கொடூரமானவனாக இருந்ததாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாது பெண்களுடனும், குடியிலுமே காலத்தைக் கழித்ததாகவும் நூனிஸ் எழுதியுள்ளார்.
This article uses material from the Wikipedia தமிழ் article விருபாட்ச ராயன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.