புற்றுநோய்

புற்றுநோய் (cancer) என்பதுக் கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பல நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும்.

இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும். இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன நோய் என்று பெயரிடப்படுகின்றது. கேடு விளைவிக்கா கட்டிகள் (en:benign tumor) உடலின் வேறு பாகங்களுக்குப் பரவுவதில்லை.

புற்றுநோய்
Cancer
ஒத்தசொற்கள்புற்றுத்திசுக் கட்டி, Malignant tumor, malignant neoplasm
புற்றுநோய்
வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி ஒரு புற்றுத்திசு இடை தோலியப்புற்றைக் காட்டுகிறது.
உரைக்கூற்று: → கட்டி ←, ✱ நடு புடைச்சவ்வு ஊறணி, 1 & 3 நுரையீரல்கள், 2 முள்ளந்தண்டு நிரல்கள்]], 4 விலா எலும்புகள், 5 பெருந்தமனி, 6 மண்ணீரல், 7 & 8 சிறுநீரகங்கள், 9 கல்லீரல்
சிறப்புபுற்றுநோயியல்
அறிகுறிகள்கட்டி, அசாதாரண இரத்தப்போக்கு, நீடித்த இருமல், காரணமில்லா எடை இழப்பு, மலம் கழித்தல்களில் மாற்றம்
சூழிடர் காரணிகள்புகையிலை, உடற் பருமன், மோசமான உணவுப் பழக்கம், அமர்ந்தியங்கும் வாழ்முறை, அதிகமான மதுபானம், சில நோய்த்தொற்றுகள்
சிகிச்சைகதிர் மருத்துவம், அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை, இலக்கு சிகிச்சை.
முன்கணிப்புசராசரி ஐந்தாண்டுகள் உயிர்வாழ்வு 66% (அமெரிக்கா)
நிகழும் வீதம்90.5 மில். (2015)
இறப்புகள்8.8 மில். (2015)

உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான உயிரணுக்கள், கழலை அல்லது கட்டி எனப்படும் இழையங்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. தீங்கில்லா கட்டிகளைப் பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, அவை மீண்டும் தோன்றுவது இல்லை. குருதிப் புற்றுநோய் தவிர்ந்த ஏனைய புற்று நோய்களில் பொதுவாகக் கட்டிகள் தோன்றும்.

முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்று நோய் உயிரணுக்களின் பரவல் குருதிச் சுற்றோட்டத்தொகுதி வழியாகவோ அல்லது நிணநீர்த் தொகுதி (en:Lymphatic system) வழியாகவோ பரவக்கூடும். தமனி, சிரை, நுந்துளைக்குழாய்கள் மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. இந்தக் குருதியானது புற்று நோய் உயிரணுக்களை உடலின் ஏனைய பகுதிகளுக்குக் கொஉ செல்லக் கூடும். அதேபோல், நிணநீர்த் தொகுதியில், நிணநீர்க் குழியங்கள் (அதாவது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும் வெள்ளை அணுக்கள், நிணநீர்க் குழாய்கள் (en:Lymphatic vessels) மூலமாகக நிணநீர்க்கணுக்களுக்குப் புற்று நொய் உயிரணுக்களை எடுத்துச் செல்லக் கூடும். இவ்வாறு கேடு விளைவிக்கும் கட்டிகளில் உள்ள உயிரணுக்கள், முதலில் அருகிலுள்ள இழையங்களுக்குள் ஊடுருவிச் சென்று பின்னர் குருதி அல்லது நிணநீர் ஊடாக உடலின் ஏனைய பகுதிகளுக்குப் பரவுதலை மாற்றிடம் புகல் (metastasis) என்பர். இதனால் புற்று நோய் ஏனைய பகுதிகளிலும் தோன்றும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

புகையிலைப் பாவனை 22% மான புற்று நோய் இறப்புகளுக்குக் காரணமாகின்றது. இன்னுமொரு 10% இறப்புக்கு உடற் பருமன், திட்ட உணவு இல்லாமை. போதியளவு உடற் பயிற்சி இல்லாமை, அளவுக்கதிகமான மது பாவனை போன்றன காரணமாகின்றன. ஏனைய காரணிகளாக சில நோய்த்தொற்றுக்கள், அயனியாக்கும் கதிர், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்குக் காரணமான நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. வளர்ந்துவரும் நாடுகளில், 15% மான புற்று நோய்க்குக் காரணமாக, அல்லது புற்று நோயைத் தூண்டக்கூடிய காரணியாக மனித சடைப்புத்துத் தீ நுண்மம், en:Epstein–Barr virus, எச்.ஐ.வி, ஈரல் அழற்சி பி, ஈரல் அழற்சி சி (en:Hepatitis C, எலிக்கோபேக்டர் பைலோரி என்னும் பக்டீரியா போன்றன காணப்படுகின்றன. இந்தக் காரணிகள் யாவும், பகுதியாகவேனும், உயிரணுக்களிலிருக்கும் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. புற்று நோய் ஆரம்பிப்பதற்குப் பல மரபணுப் பிறழ்வுகள் நடைபெற வேண்டும். கிட்டத்தட்ட 5–10% மான புற்று நோய்கள், பாரம்பரியமாக பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் இயல்பிலிருந்து மாறுபட்ட மரபணுக்களில் இருந்து வருபவையாக இருக்கின்றன. உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் புரதங்களில் (எ.கா.en:Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் அடக்கி வைக்கும் மரபணுக்களில் (en:Tumor suppressor (எ.கா.en:p53) ஏற்படும் இழப்புகள் அல்லது பிறழ்வுகளினால், அவற்றின் தொழிற்பாடு இல்லாமல் போய் அல்லது குறைந்து, உயிரணு பிரிதல் கட்டுப்பாட்டை இழந்து, அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லாமல், உயிரணுப் பெருக்கம் அடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது. சில சமயம் புற்றுநோயை உருவாக்கும் ஆற்றல் கொண்ட மரபணுக்களில் (en:Oncogene ஏற்படும் பிறழ்வுகள், அவற்றின் செயற்பாட்டை அதிகரிப்பதனாலும் உயிரணு பிரிதல் கட்டுப்பாட்டை இழந்து, அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லாமல், உயிரணுப் பெருக்கம் அடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது.

இவ்வாறு உருவாகும் புற்று நோய் உடலில் ஏனைய பகுதிகளுக்கு மாற்றிடம் புகல் மூலம் பரவுகையில், பல சமயங்களில் நிவாரணம் செய்யமுடியாத நிலைக்குச் செல்கின்றது. அண்மைய ஆய்வுகள் குறு ஆர்.என்.ஏக்களில் ஏற்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளன. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக்களை (en:Cancer stem cell) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள். இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதாரண குருத்தணுக்களின் (normal stem cells, ex. neuronal stem cells) சமிக்ஞை தடவழிகளில் (cell signaling pathway) பிறழ்வுகள் ஏற்படுவதனால், புற்றுக் குருத்தணுக்களைத் தோற்றுவிக்கின்றன.

புற்று நோயானது சில உணர்குறிகள், மற்றும் அறிகுறிகள் மூலமும், திறத் தணிக்கைச் சோதனைகள் (screening) மூலமும் பொதுவாக கண்டறியப்படுகின்றன. அதன் பின்னர், பல மருத்துவப் படிமவியல் போன்ற சில மருத்துவப் பரிசோதனைகள் மூலம் ஆராயப்பட்டு, உயிரகச்செதுக்கு பெறப்பட்டு உறுதி செய்யப்படும். பொதுவான அறிகுறிகளும், உணர்குறிகளும் கட்டி, அசாதரண குருதிப்பெருக்கு, தொடர்ந்த நீண்ட கால இருமல், காரணம் தெரியாமல் உடல்நிறை வீழ்ச்சி ஏற்படுதல், மலம் கழித்தலில் ஏற்படும் சிக்கல்கள் போன்றன ஆகும். மனிதரில் 100 க்கும் மேற்பட்ட புற்று நோய்கள் அறியப்பட்டுள்ளன. ஒவ்வொருவகைப் புற்று நோய்க்குமான காரணிகள் வேறுபடும்.

புற்று நோயைத் தடுப்பதில் புகை பிடித்தல் செய்யாமல் இருத்தல், அளவான உடல்நிறையைப் பேணல், அளவுக்கதிகமாக மதுசாரம் பயன்படுத்தாமை, அதிகளவில் காய்கறிகள், பழங்கள், முழுமையான தானியங்கள் (en:Whole grain) போன்றவற்றை உண்ணுதல், அளவுக்கதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றை உண்ணுவதைத் தவிர்த்தல், சூரிய ஒளிக்கு அளவுக்கதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருத்தல், சில தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பு மருந்தேற்றம் செய்துகொள்ளல் போன்றன முக்கிய பங்கு வகிக்கின்றன. கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் போன்றவற்றை திறத் தணிக்கைச் சோதனைகள் மூலம் ஆரம்ப நிலையில் கண்டறிவதால் நோயிலிருந்து மீள்வது இலகுவாக இருக்கும். மார்பகப் புற்றுநோயைத் திறத் தணிக்கைச் சோதனை மூலம் கண்டறிவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

புற்று நோய்க்கான சிகிச்சைகளாக, பொதுவாக, கதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, இலக்குச் சிகிச்சை (en:Targeted therapy) போன்றவற்றின் இணைந்த சிகிச்சை முறை வழங்கப்படுகின்றது. வலி மற்றும் அறிகுறிகளை அவதானித்து, அதற்கேற்ப நடைமுறையைப் பேணல் மிகவும் அவசியமாகின்றது. மிகவும் முற்றிய நிலையில் நோயைக் இருப்பவர்களில், மரணவலி தணிப்புச் சிகிச்சை மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. புற்று நோயைக் கண்டறிந்த பின்னர் ஒருவர் உயிர் பிழைப்பது, என்ன வகைப் புற்று நோய் என்பதிலும், அதனைக் கண்டறியும்போது என்ன நிலையில் அவரது நோய் நிலை இருந்தது என்பதிலும் தங்கியிருக்கும். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் புற்று நோய்க்கு வளர்ந்த நாடுகளில் 5 ஆண்டுகால பிழைத்திருக்கும் தன்மை 80% மாக உள்ளது. அமெரிக்காவில் 5 ஆண்டு பிழைத்திருக்கும் வாய்ப்பு 66% மாக உள்ளது. புற்று நோய்க்கு எதிராக நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று உயிரணுக்களைத் தாக்கி அழிக்கும்போது, சாதாரண உயிரணுக்களையும் தாக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. எனவே சாதாரண உயிரணுக்களைப் பாதுகாக்கும் வண்ணம் மருந்துகள் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன.

புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க புற்று நோய்ச் சமூகம் நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர். 2015 ஆம் ஆண்டில் உலகில் 90.5 மில்லியன் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந் நோயால் (கரும்புற்றுநோய் தவிர்ந்த ஆனைய தோல் புற்றுநோய்களைச் சேர்க்காமல்) தாக்கப்படுகின்றனர். இவற்றில், 8.8 மில்லியன் இறப்புக்களை இந் நோய் தருகின்றது மிகப் பொதுவான புற்று நோய் வகைகள் நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) ஆகியனவாகும். பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியனவாகும். பொதுவாக குழந்தைகளில் கடும் நிணநீர்க் குழியப் புற்றுநோய், மூளைக் கட்டி போன்றவை அதிகமாக இருப்பினும், ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளில் en:Non-Hodgkin lymphoma அதிகளவில் இருக்கின்றன. 2012 ஆம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் தோன்றுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மருத்துவ முறைகளில் புற்றுநோயைப்பற்றி படித்தல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயைத்தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப்பிரிவு புற்றுநோயியல் என்று அழைக்கப்படுகிறது.

புற்றுநோய்க்கான வரையறை

புற்றுநோய் ஒரு பெரிய குடும்ப நோய்களை உள்ளடக்கியது. இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும்.. இவை புத்திழையப் பெருக்கத்தின் (Neoplasm) ஒரு பிரிவாகும். எல்லாப் புற்றுநோய்க் கட்டிகளிலும் ஆறு முக்கியமான இயல்புகள் (en:The Hallmarks of Cancer) காணப்படும். இந்த இயல்புகள் கேடுதரும் கட்டிகள் உருவாவதற்குத் தேவைப்படும். அவையாவன:

  • உயிரணு வளர்ச்சிக்கும், உயிரணுப் பிரிவுக்கும் தேவையான சரியான, ஒழுங்கான சமிக்ஞைகள் இல்லாதிருக்கும்.
  • முரண்பாடான சமிக்ஞைகள் வழங்கப்பட்டாலும், உயிரணுக்களில் தொடர்ந்த வளர்ச்சியும், பிரிவும் நிகழும்.
  • உயிரணுக்களின் வாழ்வுக்காலம் முடிந்ததும், இயல்பாக நிகழ வேண்டிய திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு, அதாவது உயிரணு தன்மடிவு தவிர்க்கப்படும்.
  • கட்டுப்பாடற்ற எண்ணிக்கையில் உயிரணுப்பிரிவு நிகழும்.
  • புதிதாக அளவற்ற எண்ணிக்கையில் உயிரணுக்கள் தோன்றி உருவாகும் புத்திழையத்திற்குக் குருதிக் கலன்கள் இணைக்கப்படும்.
  • புத்திழையமானது அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, வேறு இடங்களுக்குப் பரவும் மாற்றிடம் புகல் நிகழும்

சாதாரண உயிரணுக்களிலிருந்து, காணக்கூடிய திணிவாகிப், பின்னர் புற்றுநோயாக தீவிர நிலைக்கு விருத்தியடைவது, பல படிகளில் முன்னேறிச் சென்று கேடுதரும் கட்டியாகும் நிகழ்வாகும்.

கிளவியாக்கம்

புத்திழையப் பெருக்கம் (Neoplasm): சூழவுள்ள இழையத்திலிருந்து வேறுபட்டு, குறிப்பிட்ட ஒரு இழையத்தில், புதிதாக நிகழும் ஒரு அசாதாரண, அளவுக்கதிகமான உயிரணுப் பெருக்கம், அல்லது வளர்ச்சியைக் குறிக்கும். இத்தகைய அசாதாரண வளர்ச்சிக்கான காரணி அகற்றப்பட்டாலும், இழையப் பெருக்கம் தொடர்ந்து நடைபெறும். புத்திழையப் பெருக்கத்தில் வீக்கம் அல்லது கட்டிகள் பொதுவாக உருவாகும். அவ்வாறில்லாமல் கட்டிகள் அற்ற இழையப் பெருக்கமும் (எ.கா. இரத்தப் புற்றுநோய்) நிகழலாம்.

கட்டி (Tumor): கட்டி என்னும் சொல் இயல்புக்கு மீறிய வீக்கம், திரள், கட்டி, கழலை அல்லது திணிவைக் குறிக்கும். மேற்கூறிய புத்திழையப் பெருக்கம், பொதுவாக (எப்பொழுதும் அல்ல), ஒரு திடமான திணிவை உருவாக்கும். அத்தகைய திணிவுகள் உருவாகும்போது அவை கட்டிகள் எனப்படும். புத்திழையப் பெருக்கத்தால் இக்கட்டிகள் தோன்றுவதால், புத்திழையப் பெருக்கம், கட்டி ஆகிய இரு சொற்களும் ஒன்றையே குறிக்கின்றன.

கேடில்லாக் கட்டிகள் (Benign tumour): கட்டிகளில் ஒரு வகையானவை வீக்கத்தை, வளர்ச்சியைக் காட்டுமே தவிர, உடலுக்குத் தீங்கற்றவை. இவை ஏனைய இடங்களுக்குப் பரவாமல், குறிப்பிட்ட ஒரு இடத்திலேயே பல்கிப் பெருகும். இவற்றை அகற்றிவிட்டால் மேலதிக வளர்ச்சி இருக்காது. இத்தகைய கட்டிகளில் சில கேடுதரும் கட்டிகளாக மாறக்கூடிய தன்மை உள்ளவையாக இருக்கும். அவை புற்று நோய் மூலம் (en:Carcinoma in situ) எனப்படும்.

கேடுதரும் கட்டிகள் (Malignant tumour): இத்தகைய கட்டிகள் அசாதாரணமாகப் பல்கிப் பெருகுவதுடன், அருகிலுள்ள இழையங்களுக்கும் ஊடுருவி, உடலின் ஏனைய பாகங்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை.

புற்று நோய் (Cancer): இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அதாவது புத்திழையப் பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை புற்று நோய் எனப்படும். இவையே கேடுதரும் கட்டிகளாகும்.

ஊடுருவும் கட்டி (Invasive tumor): இழைய மிகைப்பெருக்கத்தால் உருவாகும் கட்டிகளின் உயிரணுக்கள், அருகிலுள்ள ஏனைய இழையங்களுக்குள் ஊடுருவிப் பரவிச் சென்று தாக்கும் தன்மை கொண்டவையாக இருக்கையில் அவை ஊடுருவும் கட்டிகள் எனப்படும்.

கேடுதரும் கட்டிகளாக மாற வாய்ப்புள்ள, அதற்கு முன் நிலையிலுள்ள கட்டிகள் (pre-malignant), ஊடுருவாக் கட்டிகளாக (non-invasive tumour) அல்லது புற்று நோய்க்கு முன் நிலை (pre-cancerous) கட்டிகளாக இருக்கையில் வீரியம் குறைந்தவையாகவும், எளிதில் குணப்படுத்தப்படக் கூடிய நிலையிலும் காணப்படும். ஆனால் கவனமற்ற முறையில் இருந்தால், அவை வீரியமுள்ள புற்று நோயாக மாறக்கூடும்.

திறத் தணிக்கைச் சோதனைகள் (screening): ஒருவருக்கு புற்று உள்ளதா, இல்லையா என்பதைப் திறத் தணிக்கைச் சோதனைகள் செய்வதன் மூலம் கண்டறியலாம். முலை ஊடுகதிர்ப்படச் சோதனை என்னும் ஆய்வு மூலம் மார்பகப் புற்றுநோய் கண்டறியலாம். பெண்களில் வரும் கருப்பைவாய் புற்றுநோயைக் கண்டறிய கருப்பைவாய் பூச்சு சோதனை அல்லது மனித சடைப்புத்துத் தீ நுண்மச்

அறுதி ஆய்வு: (Diagnosis): உடலில் இருக்கும் கட்டி புற்று நோயெனச் சந்தேகப்படுமிடத்து, அது புற்று நோய்க்கட்டிதானா அல்லது இயல்புக் கட்டியா என்பதை அறியும் ஆய்வு இதுவாகும். உயிரகச்செதுக்கு ஆய்வு (Biopsy) என்னும் செய்முறை மூலம் புற்று நோயை அறுதியிடலாம். ஆய்வுக்கு குறிப்பிட்ட கட்டியை அறுவை மூலம் வெளியில் எடுத்து, அவை புற்று உயிரணுக்களை கொண்டுள்ளனவா என்பதை உரிய நோய்க்குறியியல் மருத்துவர் (pathologist) ஆராய்ந்து அறிவார்.

அறுவைமூலம் கட்டியகற்றல் (Surgical excision): புற்று என ஐயப்படும் கட்டியை அறுவை முறை மூலம் அகற்றுதல். உடல் உறுப்பு ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்டி காணப்படும்போது, அந்தக் கட்டியுள்ள பகுதி மட்டும் அகற்றப்படும்.

அறுவை விளிம்பு பகுதிகள் (Resection margin / surgical margin): உடலில் கட்டி காணப்படும் உடல் உறுப்பை முழுவதுமாக அகற்றி, அகற்றிய உறுப்பின் விளிம்புப் பகுதிகளை நோய்க்குறியியல் மருத்துவர் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தும் நிலை ஆகும். எ.கா. முலை நீக்க அறுவை சிகிச்சை. பொதுவாக கட்டியை அகற்றும்போது அதனை சார்ந்துள்ள அனைத்து புற்று இழையங்களும் அகற்றப்பட வேண்டும். எனவே விளிம்புப் பகுதியை ஆராய்ந்து, அந்தப் பகுதி எந்தப் புற்று நோய் உயிரணுக்களும் இல்லாமல் உள்ளதா என்று ஆராயப்படும். அவ்வாறு புற்று உயிரணுக்கள் இல்லாவிடின், நோய் பரவவில்லை எனக் கொள்ளலாம். எனவே முழுமையான அகற்றலாயின் எதிர்மை விளிம்புகள் (negative margins) என்றும், அரைகுறையான அகற்றலாயின் நேர்மை அல்லது நேர்ம விளிம்புகள் (positive margins) எனப்படும்.

தரம் பகுத்தல் (Grading): புற்று நோயின் வீரியத்தை பொறுத்து, அதனை ஒன்று அல்லது இரண்டு (நான்கு வரைக்கும்) என்று நோய்க்குறியியல் மருத்துவர் பகுப்பார். பொதுவாக மூன்று அல்லது நான்காவது தரத்திற்கு உள்ள (grade 3 or 4) புற்று நோயானது மிகு வீரியத்தை கொண்டு, வேறு இழையங்களுக்குப் பரவிய நிலையை குறிக்கும்.

தர நிலை (staging): புற்றுநோய் ஆய்வாளர்கள் (Oncologist) நோய் நிலையைத் தரம் பிரிக்கும் ஆய்வாகும். இந்நிலையிலும் ஒன்று முதல் நான்கு வரை தரம் பிரிக்கப்படுகிறது.

நோய் மீளல் அல்லது மறுபீடிப்பு (Recurrence): கட்டியகற்றிய பகுதியில் இருந்து மீண்டும் கட்டி தோன்றும் நிலையாகும்.

மாற்றிடம் புகல் (Metastasis): புற்றுநோய் தோன்றிய இடத்திலிருந்து, ஏனைய இடங்களுக்கு நோய் பரவுதல். அல்லது கட்டியகற்றிய பகுதியில் இருந்து உடலின் மற்ற பகுதியில் கட்டி தோன்றும் நிலை எனவும் கொள்ளலாம்.

வீரிய உருமாற்றம்: தரம் பகுத்தலில் பகுப்பு ஒன்று (Grade 1) என்ற நிலையில் இருந்து மிக வீரிய பகுப்பான மூன்று அல்லது நான்காவது நிலையை அடைவதை குறிக்கும்.

வேதி மருத்துவம் (Chemotherapy): வேதி மருந்துகள் கொண்டு வைத்தியம் செய்தல்

கதிரியக்க மருத்துவம் (Radiotherapy): கதிரியக்கம் கொண்டு சிகிச்சையளித்தல்.

துணை மருத்துவம் (Adjuvant therapy): வேதிச்சிகிச்சை முறையாலோ, அல்லது கதிரியக்க சிகிச்சை முறையாலோ, மீதமுள்ள புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்காக அளிக்கப்படும் சிகிச்சை.

முன்கணிப்பு (Prognosis): மருத்துவத்திற்கு பின் குணமடைதலுக்கான நிகழ்தகவை எதிர்வுகூறலைக் குறிக்கும். நோய் அறிகுறி அறிந்து ஐந்து வருடங்களுக்குப்பிறகு, புற்ருநோய்ச் சிகிச்சைக்கு உட்பட்டவர் பிழைத்திருப்பதற்கான சாத்தியக்கூறு பொதுவாக முன்கணிப்பு செய்யப்படும். மாற்றாக, அது 50% நோயாளிகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் வருடங்களின் எண்ணிக்கை. இரு எண்களும் நூற்றுக்கணக்கான ஒரேவகை நோயாளிகளின் திரட்டைக்கொண்டு புள்ளி விவரக்கணக்கு முறைகள்படி ஆராய்ந்து, அவற்றிலிருந்து கணித்த காப்லான் -மையேர் வளைவு (Kaplan-Meier Plot) வரைபடத்தை ஆதாரமாக கொண்டது.

உணர்குறிகள் மற்றும் அறிகுறிகள்

புற்றுநோய் 
புற்றுநோய் மாற்றிடம் புகலுக்கான அறிகுறிகள் கட்டி அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும்.

புற்றுநோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. கட்டி தோன்றும் நிலை அல்லது புண்ணாகும் நிலையிலேயே உணர்குறிகள் மற்றும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். என்ன வகைப் புற்றுநோய், எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகள் மாறுபடும். சில அறிகுறிகள் குறிப்பிடத்தக்கவையாக அல்லது திட்டவட்டமானவையாக இருக்கும். ஆனால் பல அறிகுறிகள், வேறு நோய்களிலும் தோன்றக்கூடியனவாக இருக்கும். அதனால் இது வேறு நோய் நிலைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. புற்றுநோய் என அறுதி ஆய்வு செய்யப்படும்போது மனிதர்கள் அதிக கவலை மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவர். புற்று நோயாளிகளில் தற்கொலைக்கான ஆபத்து கிட்டத்தட்ட இரட்டிப்பாக இருப்பதாக அறியப்படுகின்றது.

புற்றுநோய் அறிகுறிகளை மூன்று குழுக்களாக பிரிக்கலாம்:

இடம்சார் அறிகுறிகள்

முறை பிறழ்ந்த கட்டிகள் அல்லது வீக்கம் இருக்கும் இடத்தைப் பொறுத்து இவ்வறிகுறிகள் தோன்றும். எடுத்துக்காட்டுகள்:

கட்டிகள் தோன்றும் ஆரம்ப நிலையில் வலி இருப்பதில்லை. ஆனால், நோய் தீவிரமடையும் நிலையில், குறிப்பிட்ட இடத்தில் வலி தோன்றும்.

கட்டிகள் புண்ணானால், இரத்தக்கசிவு ஏற்படலாம். நுரையீரல் புற்றுநோயில் இவ்வாறு ஏற்படின் இருமும்போது குருதி வெளியேறும். குடலில் புற்றுநோயெனில், குருதிச்சோகை அல்லது மலவாய் வழியான குருதிப்பெருக்கு ஏற்படலாம். சிறுநீர்ப்பைப் புற்று நோயெனின், சிறுநீருடன் குருதி வெளியேறலாம். கருப்பைப் புற்றுநோய் அல்லது கருப்பை வாய்ப் புற்றுநோய் என்றால் யோனி ஊடாக குருதிப்பெருக்கு ஏற்படும்.

தொகுதிக்குரிய அறிகுறிகள்

இது நேரடியாகவோ, அல்லது மாற்றிடம் புகல் பரவலுக்கோ தொடர்பில்லாத பொதுவான அறிகுறிகளைக் குறிக்கும். எதிர்பார்க்காத உடல்நிறைக் குறைவு, காய்ச்சல், பசியின்மை, உடல் மெலிதல், அளவுக்கதிகமான களைப்பு, குருதிச்சோகை, தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்றன. en:Hodgkin's lymphoma, இரத்தப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் போன்றவற்றில், தொடர்ந்து விடாமல் காய்ச்சல் இருக்கும்.

மாற்றிடம் புகலுக்கான அறிகுறிகள்

புற்றுநோயானது தோன்றிய இடத்திலிருந்து, நிணநீர்த் தொகுதி மூலமாக, அருகிலுள்ள நிணநீர்க்கணுக்களுக்குப் பரவலாம். இதனைத் தொட்டுணர முடியும். குருதிச்சுற்றோட்டத் தொகுதி மூலமாக, தூரமாக உள்ள வேறு உறுப்புகளுக்குப் பரவலாம். இந்த இரு நிகழ்வுகளும் மாற்றிடம் புகல் எனப்படுகிறது. இதன் விளைவாக கல்லீரல், மண்ணீரல் என்பவற்றில் வீக்கம் தோன்றும். இவ்வாறு கல்லீரல், மண்ணீரல் வீக்கமடையும்போது, வயிற்றில் இவற்றை உணர முடியும். இவை தவிர எலும்பு, எலும்பு மச்சை களுக்குப் பரவி இருப்பின், வலி அல்லது எலும்பு உடைவு ஏற்படலாம். அத்துடன் சில நரம்பியல் அறிகுறிகள் தோன்றலாம்.

மாற்றிடம் புகல் மூலம் புற்றுநோயானது உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ முடியுமெனினும், மாற்றிடம் புகல் நிகழ்வில் அறிந்திருக்கப்படும் மண்ணும் விதையும் என்ற கருதுகோள்படி, குறிப்பிட்ட சில புற்றுநோய் வகைகளின் உயிரணுக்கள் (விதைகள்), குறிப்பிட்ட சில உடற்பகுதிகளுக்கே (மண்) பரவுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வகையாக்கம்

புற்றுநோய்க் கட்டி எந்த வகை உயிரணுவை ஒத்திருக்கிறது என்பதைப் பொறுத்து புற்றுநோய் வகையாக்கம் செய்யப்படுகின்றது, அதனால், குறிப்பிட்ட அந்த இழையமே அந்த கட்டியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. அவற்றின் புற்று நோயின் இழையவியல் மற்றும் புற்றுநோய் பாதிப்புக்கு உட்பட்ட இடம் என்பன இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படுகின்றன. புற்றுநோய்கள், முக்கியமாக பின்வரும் பிரிவுகளுக்குள் வகைப்படுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட வகைக்குரிய பெயரீடானது, எந்த உறுப்பில் நோய் இருக்கிறது என்பதையும், அந்தப் புற்றுநோயின் தோற்றுவாய் என்பதையும் பொறுத்து அமையும். எ.கா. கல்லீரல் புறவணியிழையப் புற்றுநோய் (hepatocarcinoma), கொழுப்பு இணைப்பிழையப் புற்றுநோய் (liposarcoma).

காரணிகள்

பெரும்பான்மையான புற்றுநோய்கள், கிட்டத்தட்ட 90–95% மானவை, சூழல் காரணிகள் அல்லது வாழ்க்கை முறையினால் ஏற்படும் மரபணு திடீர்மாற்றம் என்னும் நிகழ்வினால் ஏற்படுகின்றன. மிகுதியான 5–10% மானவை மரபு சார்ந்து ஏற்படுகின்றனவாக உள்ளன. மரபு வழியல்லாமல், சூழல் காரணிகள் என்னும்போது, வாழ்க்கை முறை, பொருளாதாரம், பழக்க வழக்கங்கள், மற்றும் சூழலியல் மாசு போன்ற அனைத்தும் அடங்கும். புற்றுநோய்க்குக் காரணமான பொதுவான சூழலியல் காரணிகள் புகையிலை (25–30%), சில உணவு, மற்றும் உடற்பருமன் (30–35%), தொற்றுக்கள் (15–20%), கதிர்வீச்சு (அயனியாக்கும் கதிர், அயனியாக்கா கதிர் இரண்டும், 10% வரை), மன அழுத்தம், போதிய உடற்பயிற்சி இன்மை, நச்சுப்பொருள் போன்றவையாகும்.

புற்றுநோய் என்பது வெவ்வேறான பலபிரிவுகள் கொண்ட நோய்வகைகளை சாரும். அவை அதன் காரணங்களிலும், உயிரியலிலும் பரவலாக வேறுபடுகின்றன. எந்த உயிரினமானாலும், புற்றுநோய் வரலாம். ஒரு குறிப்பிட்ட ஒரு புற்றுநோய்க்கான காரணிகள் வெவ்வேறாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதனால், அந்த நோய் வந்ததற்கான காரணம் என்ன என்பதை மிக இலகுவில் சொல்ல முடியாது. எடுத்துக் காட்டாக புகைப் பிடிக்கும் ஒருவருக்கு நுரையீரல் புற்று நோய் வந்திருந்தால், அவரது நோய்க்கான புற்றுநோய்க் காரணி புகையிலையாக இருக்கக் கூடும். இருந்த போதிலும், சூழல் மாசு, கதிரியக்க மாசு போன்றனவும் மனிதரில் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் சிறிதளவு சாத்தியத்தைக் கொண்டிருப்பதனால், அவற்றில் ஏதாவது ஒன்றுகூட அவரது நோய்க்கான காரணமாக இருக்கலாம்.

உடல் உறுப்புகள் கொடை, கருத்தரிப்பு போன்ற நிலைகளில் அரிதாக ஒருவரிலிருந்து வேறொருவருக்கு புற்றுநோய் கடத்தப்படுகின்றதெனினும், பொதுவாக புற்றுநோய் கடத்தப்படும் நோயல்ல. தவிர உலகளவில் புற்றுநோய்க்கான தொற்றானது 16.1% என அறியப்பட்டுள்ளது. தீநுண்மங்களே தொற்றுவதற்கான பொதுவான நோய்க்காரணிகளாக இருந்தபோதிலும், சில பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளும்கூட நோய்க்காரணியாக இருக்கலாம் என அறியப்படுகின்றது. கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முக்கிய காரணியாகவும், 80% கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணியாகவும், 15-20% ஏனைய புற்றுநோய்களுக்குக் காரணியாகவும் தீநுண்மமே இருக்கின்றது. இந்த விகிதம் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆப்பிரிக்காவில் இந்த விகிதம் 32.7% ஆகவும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 3.3% மாகவும் இருக்கின்றத.

வேதிப்பொருட்கள்

புற்றுநோய் 
நுரையீரல் புற்று நோயானது புகை பிடித்தலுடன் நெருங்கிய தொடர்புடையது

புற்றுநோய் ஊக்கிகளான (en:Carcinogen) சில வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட வகைப் புற்றுநோய் உருவாதலை ஊக்குவிக்கின்றன. எடுத்துக்காட்டாக புகைப் பிடித்தல் 90% மான நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும். அத்துடன் புகைப்பிடித்தலானது குரல்வளை, தலை, கழுத்து, வயிறு, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், உணவுக்குழாய், கணையம் போன்றவற்றிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம். புகையிலையானது ஐம்பதுக்கு மேற்பட்ட புற்றுநோய் ஊக்கிகளைக் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது.

புகையிலையானது உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்பில் ஐந்தில் ஒரு பங்குக்கும், வளர்ந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் காரணமாக இருக்கின்றது.

உணவும் உடற்பயிற்சியும்

உணவு, அமர்ந்தியங்கும் வாழ்முறை, உடற் பருமன் என்பன புற்றுநோய் இறப்புடன் 30-35% தொடர்புடையதாக இருக்கின்றது. ஐக்கிய இராச்சியத்தில், 5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை உள்ளடக்கிச் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவானது, அதிகரித்த உடல் நிறை குறியீட்டெண் ஆனது 10 க்கு மேற்பட்ட புற்றுநோய் வகைகளுடன் தொடர்புபட்டு இருப்பதாகவும், அந் நாட்டின் ஆண்டொன்றிற்கு 12,000 மக்கள் இக்காரணத்தால் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும் குறிப்பிடுகிறது. அமர்ந்தியங்கும் வாழ்முறை காரணமாக உடற் பருமன் அதிகரிப்பது மட்டுமன்றி, அது நோய் எதிர்ப்பாற்றல் முறைமை, மற்றும் அகச்சுரப்பித் தொகுதி தொழிற்பாட்டிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதனால் புற்றுநோய்க்கான சூழிடரை அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட அரைவாசிக்கும் அதிகமான உடற்பருமன் ஏற்படுவதற்குக் காரணமாக குறைந்த காய்கறி மற்றும் உடல்நலம் தரும் உணவுகளை உண்ணல் என்பதைக் காட்டிலும், அளவுக்கதிகமான உணவை உட்கொள்ளலே இருக்கின்றது.

தொற்றுக்கள்

உலகளவில் சராசரியாக 18% மான புற்றுநோய்க்கு தொற்றுநோய்களே காரணமாக உள்ளன. இந்த வரையறையில் மிக அதிகமாக ஆப்பிரிக்காவில் 25% மாகவும், வளர்ந்த நாடுகளில் 10% மாகவும் இருக்கின்றது. பொதுவாக தீநுண்மங்களே புற்றுநோய்க்கான நோய்க்காரணிகளாக இருக்கின்றன. ஆனால் பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்றனவும் நோயைத் தரலாம்.

எடுத்துக்காட்டாக கருப்பப்பை வாய்ப் புற்றுநோயை மனித சடைப்புத்துத் தீ நுண்மமும், மூக்குத் தொண்டைப் புற்றுநோய்க்கு Epstein–Barr virus உம், வயிற்றுப் புற்றுநோய்க்கு எலிக்கோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவும் காரணமாக இருக்கின்றன

கதிர்வீச்சு

புற ஊதாக் கதிர், ஏனைய கதிரியக்கப் பொருட்கள் மூலம் கிடைக்கும் கதிர்வீச்சு புற்றுநோயைத் தோற்றுவிப்பதற்கான சூழிடர் காரணிகளுள் ஒன்றாக அறியப்பட்டுள்ளது. மெலனோமா வகையல்லாத, வேறு தோல் புற்றுநோய்களில் அநேகமானவை புற ஊதாக்கதிரினால், முக்கியமாக சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிரினால் ஏற்படுபவையாக இருக்கின்றன.

அயனியாக்கும் கதிர்களின் தோற்றுவாயாக மருத்துவப் படிமவியல், ரேடான் வளிமம் என்பன இருக்கின்றன. அயனியாக்கும் கதிர்கள் குறிப்பிட்டளவில் மரபணு திடீர்மாற்றத்திற்குக் காரணமான வலுவான மரபணு திடீர்மாற்றியாக (Mutagen) இருப்பதில்லை. குடியிருப்புகளில் ரேடான் வளிமத்திற்கு வெளிப்படுத்தப்படுவதனால் ஏற்படும் சூழிடரானது செயலற்ற புகைத்தலால் (Passive smoking) ஏற்படும் சூழிடருக்குச் சமமானதாக இருக்கின்றது.

கதிரியக்கமானது, வேறு காரணிகளுடன் இணையும்போது, மிகவும் புற்றுநோய் தோன்றுவதற்கான மிகவும் ஆற்றல் வாய்ந்த காரணியாக மாறுகின்றது, எடுத்துக் காட்டாக, ரேடான் வளிமமும் புகைத்தலும் இணைந்து சூழிடர் காரணியாக மாறுதல். கதிரியக்கமானது உடலின் எந்தப் பகுதியிலும், எந்த ஒரு மிருகத்திலும், எந்த வயதிலும் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக இருக்கின்றது. கதிரியக்கத் தூண்டுதலால் ஏற்படும் இரத்தப் புற்றுநோய் பெரியவர்களை விடக் குழந்தைகளில் இரட்டிப்பாக இருப்பதாகவும், பிறப்பிற்கு முன்னர் கதிரியக்கத்திற்கு வெளிப்படுத்தப்படும்போது, சூழிடர் 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அறியப்படுகின்றது.

மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அயனியாக்கும் கதிர்களினால் ஏற்படும் பாதிப்புக் குறைவாக இருப்பினும், கதிரியக்கத் தூண்டலால் ஏற்படக்கூடிய புற்றுநோயில் இவற்றின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. ஒரு குறிப்பிட்ட புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படும் அயனியாக்கும் கதிரானது, வேறு ஒரு இரண்டாம் நிலை புற்றுநோயைத் தோற்றுவிக்கலாம் என நம்பப்படுகின்றது. இவ்வகையான கதிரியக்கம் மருத்துவப் படிமவியலிலும் பயன்படுகின்றது.]].

சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களுக்குத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டால், மெலனோமா, மற்றும் வேறு தோல் புற்றுநோய்கள் உருவாகலாம். உலகில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் வகையான, மெலனோமா வகையல்லாத ஏனைய தோல் புற்று நோய்களுக்கான காரணியாக புற ஊதாக்கதிர், முக்கியமாக அயனியாக்கமற்ற, நடுத்தர அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர் இருப்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

செல்லிடத் தொலைபேசிகளிலிருந்து பெறப்படும் அயனியாக்கமற்ற, வானொலி அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு, மின்திறன் செலுத்தல், மற்றும் அவை போன்ற புற்று நோயைத் தோற்றுவிக்க வல்ல காரணிகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பின், புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிறுவனத்தால் (International Agency for Research on Cancer), சாத்தியமான புற்று நோய்க்காரணிகள் (Carcinogen) என விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை தொடர்பாக கவலை தெரிவிக்குமளவிற்கான தெளிவான சான்றுகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.. செல்லிடப்பேசி கதிர்வீச்சுக்கும், புற்றுநோய் அபாயத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான ஒரு தொடர்ச்சியான, முரணற்ற ஆய்வு அறிக்கைகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

மரபு

அநேகமான புற்றுநோய் மரபு ரீதியானது அல்லது என்றாலும், சில புற்றுநோய்கள் மரபு வழி கடத்தப்படுவதாக உள்ளது. 3–10% த்திற்கும் குறைவான புற்றுநோய், மரபணுக்களில் ஏற்படும் சில குறைபாடுகள் தொடர்ந்துவரும் சந்ததிக்குக் கடத்தப்படுவதனால் ஏற்படுவதாகவும், மொத்த மக்கள் தொகையில் 0.3% இற்கும் குறைவான எண்ணிக்கையிலானவர்கள், இவ்வாறான மர பணுக் குறைபாட்டைக் கடத்துபவர்களாகவும் உள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. எடுத்துக்காட்டாக பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் உள்ளவர்களில் 3% மானவர்களும், மார்பகப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய் உள்ளவர்களில் 75% மானவர்களும், இவ்வகையான மரபு வழிக் கடத்தப்படும் புற்று நோய்க்கு ஆளாகின்றனர்.

இயக்குநீர்கள்

இயக்குநீர்களில் சில உயிரணுப் பெருக்கத்தைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் உருவாக்கத்தில் பங்களிக்கின்றன. இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணிகளும், அவற்றின் இணைப்புப் புரதங்களும் உயிரணுப் பெருக்கம், உயிரணு வேற்றுமைப்பாடு, உயிரணு தன்மடிவு போன்றவற்றில் கொண்ட பங்களிப்புக் காரணமாக, புற்றுநோய் உருவாக்கத்தில் பங்களிக்கின்றன.

பொதுவாக பால் திடர்பான புற்றுநோய்களில் இவ்வகை இயக்குநீர்கள் பங்கெடுக்கின்றன. எ.கா. மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், விந்தகப் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், என்பவற்றுடன் தைராய்டு புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என்பனவாகும்.

வேறு நோய்கள்

குளூட்டன் ஒவ்வாமை எனப்படும் ஒரு தன்னுடல் தாக்குநோயானது, பல்வேறுபட்ட புற்றுநோய்களுக்கான சூழிடரை அதிகரிப்பதாகவும், மனித இரையகக் குடற்பாதைப் பகுதிகளில் தோன்றும் புற்றுநோய்கள் உருவாவதில் இந்த சூழிடர் அதிகரிப்பு அதிகளவில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால், குளூட்டன் ஒவ்வாமை இருப்பது கண்டறியப்பட்டு, தகுந்த சிகிச்சைகளுக்கு உட்பட்டு, குளூட்டன் அற்ற உணவுகள் எடுக்க ஆரம்பித்த பின்னர், புற்றுநோய்க்கான சூழிடர் குறைந்து செல்லும். நோய் கண்டறிவதில் ஏற்படும் தாமதம், அதனால் குளூட்டன் உணவுகளைத் தொடர்ந்து உண்ணல் போன்ற நிகழ்வுகள் புற்றுநோய்க்கான சூழிடரை அதிகரிக்கும்.

குரோன் நோய், பெருங்குடல், மலவாய் போன்றவற்றில் ஏற்படும் நாட்பட்ட அழற்சிகளும் புற்றுநோய்க்கான சூழிடரை அதிகரிக்கும். மேலும் அழற்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பியச் சிகிச்சை, உயிரியல் மூலக்கூறுகள் பயன்பாடு என்பனவும் குடல் தொடர்பான புற்றுநோய்களுக்கான சூழிடரை அதிகரிக்கும் என அறியப்பட்டுள்ளது.

பொருள்சார் காரணிகள்

சில பொருட்கள், வேதிப் பொருட்களின் காரணமாக அல்லாமல், அவற்றின் அமைப்பு அல்லது தோற்றம் காரணமாகவும் புற்றுநோயைத் தூண்டலாம். இதற்கு மிகவும் முக்கியமான எடுத்துக்காட்டு, கல்நார் வகைப் பொருட்களுக்கு நீண்ட நாட்கள் வெளிப்படுத்தப்படும்போது, நுரையீரல் புற்றுநோய் தோன்றுவது அதிகரித்தல் ஆகும். இயற்கையாக அல்லது செயற்கையாக உருவாக்கப்படும் இதுபோன்ற நார்த் தன்மையான பொருட்களுக்கு மிக நீண்ட காலம் வெளிப்படுத்தப்படும்போது புற்றுநோய் சீழிடர் அதிகரிக்கும்.

உடலில் ஏற்படும் அதிர்ச்சிகள் புற்றுநோய் சூழிடரைக் கூட்டுவதற்கான காரணியாக இருப்பது சரியாக ஆய்ந்தறியப்படவில்லை. எலும்பு உடைவு எலும்புப் புற்றுநோயை உருவாக்கும் என்பதும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் வேறு உடல் அதிர்ச்சிகள் கருப்பைவாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்பது இன்னமும் சரியாக நிரூபிக்கப்படவில்லை.

நோய் உடலியங்கியல்

ஏதொவதொரு காரணியால், மரபணுவில் பிறழ்வுகள் ஏற்படும்போது, அவற்றைத் திருத்துவதற்கான செயல்முறைகள் உடலில் உண்டு. சில காரணங்களால் அந்தப் பிறழ்வு திருத்தப்படாவிட்டால், பிறழ்வுகள் பிழைத்துக் கொள்ளும். அத்துடன் உயிரணுப்பிரிவின்போது அவை மகள் உயிரணுக்களைச் சென்றடையும். பொதுவாக, நம் உடல் நம்மை புற்றுநோய்க்கெதிராக பல வகைகளில் பாதுகாக்கிறது. எடுத்துக்காட்டு: உயிரணு தன்மடிவு (அதாவது பிறழ்வுக்குள்ளாகும் உயிரணுக்களில் திட்டமிட்ட உயிரணு இறப்பு), உயிரணு முதிர்ச்சி (en:Cellular senescence) (அதாவது உயிரணுப் பிரிவைத் தடுக்கும் வகையில் உயிரணு முதிர்ச்சிக்குள்ளாதல்) போன்றவையாகும். எனினும், பிறழ்வுகள் பிழைத்துக் கொள்வதற்கும், மேம்படுவதற்கும் ஏற்ற சூழ்நிலைகளில், இவ்வகையான பிழை திருத்தும் முறைகள் பலதடவை சிறு காரணங்களால் தோல்வி அடைகின்றன. எடுத்துக்காட்டாக, இச்சூழ்நிலைகளில் புற்றுநோய் ஊக்கிகள் தொழிற்பட ஆரம்பித்திருக்கலாம் அல்லது காலப் போக்கில் ஏதேனும் ஒரு காயம் (உடல், வெப்பம் போன்ற காரணங்களால்) ஏற்பட்டிருக்கலாம், அல்லது உயிரணுக்களால் தாங்க முடியாத இதர சுற்றுச்சூழல் (எ.கா.உயிர்வளிக்குறை நிலைகளோ ஏற்பட்டிருக்கலாம்.. புற்றுநோய் இப்படியாக நாளுக்கு நாள் முன்நோக்கி செல்லும் வியாதி ஆகும், மேலும் இவ்வகையான முன்நோக்கி செல்லும் பிழைகள் சிறுகச்சிறுக குவிந்துவிடும்போது விலங்கின் ஒரு கலமானது தனது செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட துவங்குகிறது.

புற்றுநோயில் பிழைகளை பெருகவைக்கும் பிழற்வுகள் தன்னைத்தானே பெருக்கும் தன்மையை சார்ந்தது, முடிவில் அது (பணத்தைப்போல்) அடுக்கேற்ற விரைவில் பெருகிக்கொண்டே போகும். எடுத்துக்காட்டு:

  • ஒரு கலனில் பிழை திருத்தும் எந்திர இயல் விகாரமடைந்து கலனிலும் அதன் பிறப்புகளிலும் அதிவிரைவில் பிழற்வுகளை மேலும் குவிய வைக்கலாம்.
  • ஒரு கலனின் சைகைகளை அனுப்பும் (நாளமில்லா உட்சுரப்பு சார்ந்த) எந்திர இயல் விகாரம் அடைந்து அருகாமையில் இருக்கும் கலன்களுக்கு பிழைகளை உருவாக்கும் சைகைகளை அனுப்பலாம்.
  • ஒரு விகாரம் (பிறழ்வு) ஆனது உயிரணுக்களில் நியோப்பிளாஸ்டிக் மாற்றங்களை உருவாக்கலாம், அதனால் அவை மற்ற இடங்களுக்கு சென்று ஆரோக்கியமான உயிரணுக்களை தகர்த்து அழிக்கலாம்.
  • ஒரு விகாரமானது ஒரு கலனை அமரனாக செய்யலாம் (பாருங்கள் டெலோமியர்ஸ் (கடைத் துணுக்கு)), அவை ஆரோக்கியமான உயிரணுக்களை என்றென்றைக்கும் தகர்க்கலாம்.

இப்படியாக புற்றுநோய் சில பிழைகளால் ஒரு தொடர் விளைவு ஏற்படுவதால், அவை மேலும் கூடுதலான பிறழ்வுகளுக்கு காரணமாகிறது. பிழைகளால் மேலும் பிழைகள் ஏற்படுவதே புற்றுநோயின் மூல காரணம் ஆகும், மேலும் அதனாலே அதை குணப்படுத்துவதும் கடினமாக இருப்பது :அங்கு 10,000,000,000 புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் இருந்து, அவற்றில் பத்து உயிரணுக்களைத்தவிர மற்ற அனைத்தையும் அழித்துவிட்டாலும், இந்த உயிர்பிழைத்த பாதிப்படைந்த உயிரணுக்கள் (மற்றும் பிழைகளுக்கு வழிவகுக்கும் இதர புற்றுமுன்னோடி உயிரணுக்கள்) திரும்பவும் தன்னை-தானே உருவாக்கவோ, அல்லது பிழற்வுகளை ஊக்குவிக்கும் சமிஞைகளை இதர உயிரணுக்களுக்கு அனுப்பவோ செய்து, மீண்டும் இப்பிரச்சினைகளை உருவாக்கும். இந்த கிளர்ச்சி கலந்த சூழ்நிலை, ஒரு தேவையற்ற தக்கனபிழைத்துவாழ்தல், இதில் பரிணாம வளர்ச்சியை தூண்டும் உந்து விசைகளை உடலின் வடிவமைப்புக்கு எதிராக வேலை செய்வதோடல்லாமல் ஒழுங்குமுறைகளை செயலாக்குவதையும் தடைசெய்கிறது. உண்மையில், ஒரு முறை புற்றுநோய் வந்துவிட்டால், இந்த விசையானது மேலும் பரவும் நிலைமைக்கு கொண்டுசெல்கிறது, மேலும் அதனை க்லோனல் (முளைவகை) பரிணாம வளர்ச்சி என்று அழைக்கிறோம்.

புற்றுநோய்க்கான காரண ஆய்வுகள் கீழே கொடுத்துள்ள பகுப்புகளுக்கு உற்பட்டவை:

  • முகவர்கள் (எ.கா.நோய்க்கிருமிகள்) மற்றும் நிகழ்வுகள் (எ.கா.விகாரங்கள்/ பிறழ்வு) அவை மரபியல் மாறுபாடுகளை எளிதாக்கி புற்றுநோயை ஏற்படுத்தும்.
  • உயிரணுக்களில் ஏற்படும் மரபுக்கருவில் சேதத்திற்கான துல்லியமான இயல்பு காரணி மேலும் அவற்றால் பாதிப்படைந்த மரபணுக்கள்.
  • இந்த மரபியல் மாறுபாடுகளால் கலன்களின் உயிரியலில் ஏற்படும் விளைவுகள், உருவாகும் நிலை மற்றும் உருவாகிய புற்றுநோய் கலனின் குணங்கள், மேலும் கூடுதலான மரபணு சார்ந்த நிகழ்வுகளுக்கு காரணிகளாக இருந்து வியாதியை மேலும் தீவிரமாக்குவதற்கான காரணிகளாக அமைகின்றன.

விகாரம்:ரசாயன கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)

    மேலும் தகவல்களுக்கு: Carcinogen

புற்றுநோய் தோன்றும் முறையானது டிஎன்ஏ விகாரங்கள்/ பிறழ்வுகள் ஏற்படுவதாலும் அதனால் கலன் வளர்ச்சி பாதிப்படைந்தும், மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) காரணம் நோய் இடம் மாறி பரவுவதாலும் ஏற்படுகின்றன. டிஎன்ஏ விகாரங்களை ஏற்படுத்தும் பொருட்களை முடாஜென்ஸ் (மரபணு சடுதி மாற்றக்காரணிகள்) என்பர், மேலும் புற்றுநோயை உருவாக்குபவை கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)ஆகும். குறிப்பாக சிலபொருட்கள் தனிப்பட்ட சிலவகை புற்றுநோய்களுடன் இணைந்து காணப்படுகின்றன. புகையிலை புகைபிடிப்பது பலவகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையது, மற்றும் 90% நுரையீரல் புற்றுநோய் க்கு காரணி ஆகும். நீண்ட காலங்களுக்கு அச்பெச்டாஸ் நார்களுடன் இடர் காப்பின்மை காரணம் மீசொதேலியோமா (இடைத்தோலியப்புற்று) என்ற புற்றுநோய்க்கு உள்ளாகலாம்.

பல முடாஜென்ஸ் (மரபணு சடுதி மாற்றக்காரணிகள்) கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)ஆகவும் இருக்கிறது, ஆனால் சில புற்று ஊக்கிகள் மரபணு சடுதி மாற்றக்காரணிகள் அல்ல. சாராயம் / மது ஒரு ரசாயன புற்று ஊக்கியாகும் ஆனால் மரபணு சடுதி மாற்றக்காரணி அல்ல. இது போன்ற வேதியியல் பொருள்கள் களப்பகுப்பினை விரைவடைய செய்து புற்றுநோயை தூண்டுகிறது. மிக விரைவான தன்-பகற்சி ஏற்படுகையில், பாதிப்படைந்த டிஎன்ஏ தன்பிரதி அமைத்தலினை கட்டுப்படுத்துவதற்காக செலுத்திய நொதிகள் (என்சைம்கள்) செயலிழந்து விடுகின்றன, அதனால் பிறழ்வுகள் மேலும் விரைவுபடுகின்றன.

பிறழ்வுகள் : அயனாக்கற்கதிர்ப்பு

அயனாக்கற்கதிர்ப்பு உருவாகும் மூல இடங்கள் கூட, அதாவது ரேடான் வாயுவைப் போல, புற்றுநோயை ஏற்படுத்தும். சூரியனின் புற ஊதா கதிர்வீச்சிற்கு மிகையான நேரம் வெளிப்பட்டிருந்தால், அது மெலனோமா (கருங்கட்டி; கறும்புத்து) மற்றும் இதர சருமம் சார்ந்த புற்றுநோய்களுக்கு வகைவகுக்கும்.

மொபைல் தொலைபேசி மற்றும் இதர கருவிகளில் இருந்து வரும் அயனாக்காத வானொலி அலை வெண்கதிர்வீச்சு கூட, புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறுவர், ஆனால் அதற்கான சரியான ஆதாரம் இல்லை. இருந்தாலும், சில வல்லுனர்கள் முன்னெச்சரிக்கை கொள்கை யை கருத்தில் கொண்டு அதிக நேரத்திற்கு வெளிப்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிநுண்ணுயிரால் அல்லது நுண்ணுயிரால் கிருமித் தொற்று.

சில புற்றுநோய்கள் நோய்க்கிருமிகளுடன் தொடர்பு கொள்வதால் கிருமித்தொற்று ஏற்படலாம். பல புற்றுநோய்கள் அதிநுண்ணுயிரால் கிருமித்தொற்று மூலம் ஏற்படுவது; இது விலங்குகளைப் பொறுத்தவரை உண்மை, பறவை களுக்கு மட்டும் விதிவிலக்கு, ஆனால் மனிதர்களுக்கும் உண்மையாகும், ஏனென்றால் உலகில் 15% மனித இன புற்றுநோய்களுக்கு, அதிநுண்ணுயிரே காரணம். மனித இனத்திற்கு புற்றுநோய் விளைவிக்கும் முக்கிய அதி நுண்ணுயிர்கள் மனித பாப்பிலோமா நச்சுயிரி, ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் C அதிநுண்ணுயிரிகள், எப்ச்டேஇன்-பர்ர் அதிநுண்ணுயிரி , மனித T-லிம்போற்றோபிக் அதிநுண்ணுயிரி ஆகியவை ஆகும். சோதனையுடன் நோய் விபரவியல் தரவை ஆராய்வினால் அதினுண்ணியிரிகளின் புற்றுநோய்க் காரணிக்கான பங்கு தெரியவருகிறது மேலும் புகையிலைப்பயன்பாட்டுக்குப் பின் மனிதரில் புற்றுநோயைப் பரப்புவதற்கு இரண்டாம் இடம் வகிப்பதற்கு அவையே காரணம். அதிநுண்ணுயிரிகள் மூலம் தூண்டுதலுக்குள்ளான ட்யுமர்ஸ் (கட்டிகள்) இருவகைகளை சாரும், கடுமையாக-உருமாறுபவை அல்லது மெதுவாக-உருமாறுபவை. கடுமையாக-உருமாறுபவையான அதிநுண்ணுயிரிகள், மிகையாகவும் விரைவாகவும் செயல் புரியும் தன்மை படைத்தவை, வைரல்-ஒன்கொஜனி என்றழைக்கப்படுபவை (v-onc), அத்துடன் பாதிப்படைந்த கலன் v-onc யுடன் தொடர்பு கொண்டதும் உருமாற்றம் அடைந்துவிடுகிறது. அதற்கு எதிர்மறையாக, மெதுவாக உருமாறும் அதிநுண்ணுயிரிகள், அதிநுண்ணுயிரி ஜெனோம் ஆனது தங்க இடம் அளிக்கும் ஜெநோமில் ஒரு ப்ரோடோ ஒன்கோஜினை நுழைக்கிறது. அதி நுண்ணுயிரி மேம்படுத்துனர் அல்லது இதர படியெடுத்தல் கட்டுப்பாட்டு தனிமங்கள் அப்போது அந்த ப்ரோடோ ஒன்கோஜீனிடம் மிகை வெளிப்பாடு செய்து விடுகின்றன. இதனால் கட்டுப்பாடில்லாத கலப்பகுப்பு ஏற்படுகிறது. அதிநுண்ணுயிரிகளை நுழைப்பதற்கான இடம் தனிப்பட்டதாக இல்லாததால், ஒரு ப்ரோடோ-ஓன்கோஜீனுக்கு (முன்னோடி-புற்றணுக்களுக்கு) அருகே நுழைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும், அதனால் மிகையாக உருமாறும் அதி நுண்ணுயிரிகளை விட மெதுவாக உருமாறும் அதிநுண்ணுயிரிகளில் மிகவும் தாமதித்தே கிருமித்தொற்று இடங்களில் ட்யுமர்ஸ் (கட்டிகள்) உருவாகும்.

ஹெபடைடிஸ் அதிநுண்ணுயிரிகள், அதில் ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் Cயும் சேரும், ஒரு நீடித்த அதிநுண்ணுயிரி கிருமித்தோற்றத்தை ஏற்படுத்துவதால் அதனால் ஹெபடைடிஸ் B நோயாளிகளுக்கு, கல்லீரல் புற்றுநோய் 0.47% அளவுக்கு ஆண்டொன்றில் விளைகிறது (குறிப்பாக ஆசியாவில், வட அமெரிக்காவில் குறைவாகவும்), மேலும் ஹெபடைடிஸ் C நோயாளிகளுக்கு அது 1.4% அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தென்படுகிறது. ஈரல் கரணைநோய், ஹெபடைடிஸ் நோய் காரணமோ, அல்லது குடிப்பதனாலோ வந்தாலும், கல்லீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது ஆகும். இரு நோய்களும் கலந்திருந்தால், அதனால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. வைரல் ஹெபடிடிஸ் பரவுதல் மேலும் நோய்வாய்ப்படுதல் போன்றவற்றின் பெரிய சுமைகளால், உலக அளவில், கல்லீரல் புற்றுநோய் என்பது மிகவும் பொதுவான, மிகவும் பயங்கரமான புற்றுநோயாகத் திகழ்கிறது.

புற்றுநோய் ஆராய்ச்சியில் நிகழ்ந்து வரும் முன்னேற்றம் காரணம் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசி இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

2006 ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஒரு மனித பாபில்லோமா வைரஸ் கொண்ட தடுப்பூசியான கர்டாசில் என்பதைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. இத்தடுப்பூசியானது நான்கு விதமான எச்பிவி வகையிலான புற்று நோயை கட்டுப்படுத்தும், அவை நாலும் சேர்ந்து 70% கழுத்துப்பட்டை புற்றுநோய் மற்றும் 90% இன உறுப்பு சார்ந்த மறுக்களுக்கும் காரணியாகும். மார்ச் 2007 அன்று, அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) அட்வைசரி கம்மிட்டீ ஒன் இம்முனைசேஷன் ப்ராக்டிசெஸ் (ஏசிஐபி ) அதிகாரபூர்வமாக 11–12 வயதுள்ள பெண் குழந்தைகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது, மேலும் 9 முதல் 26 வயது ஆனவர்கள் கூட இதை பயன்படுத்த ஊக்குவித்தது.

அதிநுண்ணுயிரிகள் அல்லாமல், பாக்டீரியா மற்றும் சில புற்றுநோய்களுக்கும் இடையே உள்ள இணைப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதில் மிக முக்கியமான எடுத்துக்காட்டு, வயிற்றுச்சுவரில் ஏற்படும் நீண்ட நாள் பாதிப்பிற்கும், ஹெளிகோபாக்டேர் பைலோரி மற்றும் இரையக புற்றுநோய் இடையே உள்ள உறவு. ஹெளிகோபாக்டேரா ல் பாதிப்படைந்த சிலரே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றாலும், இந்த நுண்ணுயிரி பொதுவானதாக இருப்பதால், இது போன்ற புற்றுநோய் வருவதற்கு அவையே காரணமாக இருக்கலாம்.

இயக்குநீர் நொதி சமசீரின்மை

சில நொதிகள் உரு மாற்றம் அடையா கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்) போலவே செயல்படுகின்றன, ஏன் என்றால் அவை மிகையான கலன்களின் வளர்ச்சிக்கு காரணம் ஆகின்றன. இதற்கான நன்கு நிரூபித்த எடுத்துக்காட்டு ஹைபெரேச்ற்றோஜெனிக் (மிகையான எஸ்ட்ரோஜென் வெளிப்பாடு) நிலைமைகளின் பங்கும் என்டோமேற்றியல் (கருப்பையகம் சார்ந்த) புற்றுநோய் பாதிப்படைவதற்கான தொடர்பும்.

நோய் எதிர்ப்பு மண்டல செயல் பிறழ்ச்சி

எச்ஐவி ஆனது பல புற்றுநம் பரவுவதற்கான இடர்பாடுகளுடன் தொடர்புள்ளது, அவற்றில் காபோசியின் சர்கோமா (சதைப்புற்று), நான்-ஹோட்க்கின்னான லிம்போமா (நிணநீர் திசுக்கட்டி), மற்றும் எச்பிவி-சார்ந்த புற்றுநம் பரவுதல் எ.கா.குத புற்றுநோய் மற்றும் கழுத்துப்பட்டை புற்றுநோய். எயிட்ஸ்-நோயை விளக்கும் கூறுகள் வெகு நாட்களாக இவ்வாறான கண்டறிதலை ஏற்றுக்கொண்டுள்ளன. எச்ஐவி நோயாளிகளிடம் தோன்றும் மிகையான புற்றுநம் பரவுதலுக்கான நிகழ்வு எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் நோய் தடுப்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளே, இது புற்றுநோய்க்கும் பொருந்தும். மேலும் சில இதர நோய் எதிர்ப்பு சக்திக்குறைவு நிலைமைகள் (எ.கா. பொதுவான மாறுபடும் நோய்த்தடுப்புக்குறை மற்றும் ஐஜிஏ குறைவு ) இவையும் மிகையான அளவில் புற்றுநம் பரவுதலுக்கு காரணமாகலாம்.

மரபு வழி

புற்றுநோயின் மிக்க வகைகள் தொடர்ச்சியற்றவை ஆகும், அதாவது அது மரபுசார்ந்ததாக தெரியவில்லை. எனினும், நன்றாக கண்டறிந்த பல நோய்க் குறித்தொகுப்புகள் உள்ளன, மரபுசார்ந்த புற்றுநோய் வருவதற்கு, மிக்கவாறும் ஒரு உயிரணுவில் உள்ள குறை காரணமாக அது ட்யுமர் (கட்டி) உண்டாகவிடாமல் தடுக்கும் தன்மையை இழந்திருக்கலாம். புகழ் பெற்ற எடுத்துக் காட்டுக்கள்:

  • சில மரபுசார்ந்த திசுமரபு பிறழ்வுகள் BRCA1 மற்றும் BRCA2 வகையான உயிரணுக்களில் அதிக அளவிலான மார்பக புற்றுநோய் மற்றும் முட்டையகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • பல நாளமில்லா உட்சுரப்பு உறுப்புகள் காரணம் விளையும் ட்யுமர்ஸ் (கட்டிகள்) பன்மடங்கு நாளமில்லா உட்சுரப்பு நியோப்லாசிய (MEN வகைகள் 1,2a,2b)
  • லி-பிராவமேனி நோய்க் குறித்தொகுப்பு (பலவிதமான ட்யுமர்ஸ் (கட்டிகள்)ஆன ஓச்டியோ சர்கோமா (சதைப்புற்று), மார்பக புற்றுநோய், மென்மையான திசு சர்கோமா (சதைப்புற்று), மூளைக்கட்டி கள்) போன்ற p53 பிறழ்வுகள்.
  • டுர்கோட் நோய்க் குறித்தொகுப்பு (மூளைக் கட்டி கள் மற்றும் பெருங்குடல் விழுதியம்)
  • குடும்பவழி சுரப்பிப் பெருக்க விழுதியம் ஒரு மரபு சார்ந்த பிறழ்வு ஆகும், அதில் APC உயிரணு விரைவாக பெருங்குடல் கார்சினோமா (புற்றுநோய்) துவக்கத்திற்கு காரணமாகும்.
  • மரபு சார்ந்த விழுதியமல்லாத பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்றுநோய் (HNPCC, அதை லின்ச் நோய்க் குறித்தொகுப்பு என்றும் கூறுவர்), அவற்றில் குடும்பவழி நிகழ்ச்சிகளான பெருங்குடல் புற்றுநோய், கருப்பைக்குரிய புற்றுநோய், இரைப்பைக்குரிய புற்றுநோய், மற்றும் முட்டையக புற்றுநோய், மற்றும் மிகு பெரும்பான்மை இல்லாமல் உள்ள பெருங்குடல் பவள மொட்டுக்கள்அடங்கும்.
  • இரெத்தினோபிளாசுத்தோமா, சிறு குழந்தைகளிடம் தென்படுவது, இரெத்தினோபிளாசுத்தோமா உயிரணுவில் ஏற்பட்ட மரபுசார் பிறழ்வினால் வருவதே.
  • டோவ்ன் நோய்க் குறித்தொகுப்பு நோயாளிகள், அதிகமாக ஒரு கூடுதல் நிறமி 21 கொண்டுள்ளவர்களுக்கு, லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) மற்றும் விரை விதை புற்றுநோய் போன்ற பிறழ்வுகளுக்கு காரணமாகலாம், ஆனால் இந்த வேறுபாட்டுக்கு உரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை.

இதர காரணங்கள்

கருவுற்றிருக்கும் போது சில அரிய பரப்புதல் ஏற்பட்டிருந்தாலும் அல்லது உறுப்புகள் தானம் செய்யும் போது குறைவாக சிலதும் நிகழ்ந்திருந்தாலும், பொதுவாக புற்றுநோய் ஒரு தொற்றிக்கொள்ளும் நோயல்ல. இந்த திசு ஒட்டுமை நிராகரிப்புக்கு முக்கிய காரணம் MHC ஒவ்வாமையாகும் . மனிதரில் மற்றும் இதர முதுகெலும்பு விலங்குகளுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலம் MHC உடற்காப்பு ஊக்கிகளை "தன்" மற்றும் "தனது-அல்லாத" உயிரணுக்களை வேறுபடுத்த பயன்படுத்துகின்றன, ஏன் என்றால் இவ்வகை உடற்காப்பு ஊக்கிகள் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டிருக்கும். தனது-அல்லாத உடற்காப்பு ஊக்கிகளை எதிர்கொள்ளும் பொது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு ஒப்பான உயிரணுக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் கட்டியின் உயிரணுக்களை தவிர்த்து கட்டி ஒட்டாமல் இருக்குமாறு எதிராக செயல்பட்டு காக்கின்றன. அமெரிக்காவில், ஆண்டு தோறும் சுமார் 3,500 கர்பிணிகள் புற்றுப் பிறழ்வுகளால் அவதியுறுகின்றனர், மற்றும் மாறுபக்க கருக்குடை பரப்புதல் காரணம் கடின லுக்கேமியா (வெண்செல்லிரத்தம்) , லிம்போமா (நிணநீர் திசுக்கட்டி), மெலனோமா மற்றும் கார்சினோமா (புற்றுநோய்) தாயிடம் இருந்து கருவிற்கு மாறுவது கண்காணிக்கப்பட்டுள்ளது. உறுப்பு தானம் செய்தவர்களிடம் இருந்து கட்டிகள் மேம்படுவது என்பது மிகவும் அரிதாகும். மாற்று உறுப்பு பொருத்தல் விளைவாக கட்டி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புற்றுப்பண்பு மெலனோமாவாக (கருங்கட்டி; கறும்புத்து) இருக்கலாம், அதை உறுப்பை பெறும் வேளையில் பார்க்காமல் விட்டுவிட்டதே காரணம், எனினும் இதர காரணங்களும் இருக்கிறது. உண்மையில், ஒரு உயிரினத்திலிருந்து, அதே வகையிலான இன்னொரு உயிரினத்திற்கு புற்றுநோய் தாக்குவதற்கு, இரு வகையினருக்கும் ஒரே போன்ற இழையமாக்கிப்பொருத்தம் கொண்ட உயிரணுக்களாக இருக்க வேண்டும் , இது எலிகளை வைத்து நிரூபணமாகி உள்ளது; எனினும் அது அப்படி நிஜ உலகத்தில் நடக்காது, மேற்கூறிய எடுத்துக்காட்டினைத் தவிர.

மனித இனம் அல்லாதோரிடம், ட்யுமர் (கட்டி) உயிரணுக்கள் அவர்களுக்குள்ளாகவே பகர்ந்து கொண்டதால், சில வகையிலான புற்றுநோய் அவைகளை பாதிப்பதாக கண்டுள்ளது. இந்த நிகழ்வு, நாய்களில் ச்டிச்கேர்ஸ் சர்கோமா (சதைப்புற்று) உள்ள நாய்களில் தென்படுகிறது, இதை கநைன் ட்றன்ச்மிச்சிபில் வேநேரியல் கட்டி என்று அழைப்பர், மேலும் டெவில் பேசியல் ட்யுமர் நோய் என்று டாச்மேனியன் டெவில்களிலுள்ளது..

இயங்குமுறை

புற்றுநோய் 
தொடர்ந்து ஏற்படும் பிரழ்வுகளினால் புற்றுநோய் வருகிறது. ஓவ்வொரு பிழற்வும் அணுவின் இயல்பை மாற்றியமைக்கிறது

புற்றுநோயானது திசு வளர்ச்சிக்கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சாதாரண உயிரணுவில் இருந்து, புற்றுநோய் உயிரணுவாக மாற்றம் அடைவதற்கு, திசு வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மற்றும் வேறுபடுத்தும் மரபணுக்கள் திருத்தியமைத்திடவேண்டும். மரபியல் மாறுபாடுகள் பல மட்டங்களில் நிகழலாம், ஒற்றை DNA நியூக்ளியோட்டைடி னை பாதிக்கும் ஒரு பிறழ்வால், அனைத்து நிறமிகளை பெறுதலோ அல்லது இழக்கலோ நேரலாம். இரு அகன்ற வகையிலான மரபணுக்கள் இந்த மாறுபாடுகளால் பாதிப்படைகின்றன. புற்றணுக்கள் பொதுவான மரபணுக்களாக இருந்து அதற்கு ஏற்றதாக இல்லாத உயர்ந்த மட்டங்களில் வெளிப்படுத்தலாம், அல்லது புதுமையான இயல்புகள் கொண்ட திருத்தியமைத்த மரபணுக்களாக மாறியிருக்கலாம். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், இத்தகைய மரபணுக்கள் வெளிப்படுத்தும் தன்மையானது, புற்றுப்பண்பு வெளித்தோற்ற அமைப்பு கொண்ட புற்றுநோய் உயிரணுக்கள் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள் ஆனவை மரபணுக்கள் ஆகும், அவை புற்றுநோய் உயிரணுக்களின் கலப்பிரிவு, உயிரணு பகுப்பு, உயிர்பிழைத்தல், அல்லது இதர இயல்புகளை தடுத்து நிறுத்துபவையாகும். கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளை அடிக்கடி புற்றுநோயை ஊக்குவிக்கும் மரபியல் மாறுபாடுகள் செயலிழக்கச்செய்யும். உரு மாதிரியான, ஒரு பொதுவான உயிரணுவினை புற்றுநோய் உயிரணுவாக மாற்ற பல மரபணுக்களில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

புற்றுநோய் உயிரணுக்களை உருவாக்குவதற்கு பங்களிக்கும் வெவ்வேறு மரபணு மாற்றங்களுக்கும் பலவகை வகைப்பாடு திட்டங்கள் உள்ளன. இதிலுள்ள பல மாற்றங்கள் பிறழ்வுகள் ஆகும், அல்லது ஜெநோமிக் DNA நியூக்ளியோட்டைடுவரிசை முறையில் மாற்றங்கள். அனுப்பிளாய்டி (நிறைவில்லாத நிறத்திரிப்பெருக்கம்), அவற்றில் மிகையான எண்களில் நிறமிகள் காணப்படும், இந்த மரபணு மாற்றம் ஒரு பிறழ்வு அல்ல, மற்றும் இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறமிகள் பெறவோ, இழக்கவோ நேரிடலாம், உயிரணுப் பிளவு மூலம் பிழைகள் ஏற்படுவதால்.

பெரிய அளவிலான பிறழ்வுகளில், ஒரு நிறமியின் பாகத்தை நீக்கவோ அல்லது பேறவோ நேரிடும். ஒரு உயிரணு / கலன் ஆனது சொற்ப நிறமூர்த்த உடலில் இடம் கிடைத்து அதன் பலநகல்களை (20 அல்லது அதற்கும் மேலே) பேறும் பொது, வழக்கமாக ஒன்று அல்லது அதற்கும் மேலான புற்றணுக்கள் மற்றும் அருகாமையில் உள்ள கலப்பொருட்களை கொண்டதாக, ஜெநோமிக் பெருக்கம் நிகழும். ஒரு இயல்பாய்வு வாய்ந்த இடத்தில், இரு வேறுபட்ட நிறுமி வட்டாரங்கள் நியதிக்கு மாறாக அடிக்கடி உருகி சேர்ந்தால், அப்போது இடமாற்றம் நிகழ்கிறது. சிறந்த எடுத்துக்காட்டானது பிலடெல்பியா நிறமி, அல்லது நிறமிகள் 9 மற்றும் 22 டின் இடமாற்றம், நாட்பட்ட மயிலோஜெனஸ் லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) நிகழ்வது, மற்றும் அதனால் BCR-எபிஎல் கலந்திணைப்பு புரதம், உற்பத்தி ஆகிறது, அது ஒரு ஒன்கோஜெனிக் டைரோசின் கினேசாகும்.

சிறிய அளவிலான பிறழ்வுகளில் புள்ளி பிறழ்வுகள், நீக்கங்கள், மற்றும் புகுத்தல், அவை உயிரணு மேம்படுத்துனரில் நிகழும் மற்றும் அதன் முகத் தோற்றத்தை பாதிக்கும், அல்லது அவை உயிரணுவின் குறியீடு வரிசை முறையை பாதித்து மற்றும் அதனுடைய புரதம் உற்பத்திப்பொருளின் செயல்பாடு அல்லது அதன் நிலைப்புத்தன்மையை மாற்றலாம். டிஎன்ஏ வைரஸ் அல்லது (2)ரேற்றோவைரஸ் (திரும்பும் நோய்க்கிருமி)(/2)களில் இருந்து கலப்பொருளை தொகுப்பும் போது ஒரு உயிரணுவில் பகிர்வு ஏற்படலாம் மற்றும் இப்படியான நிகழ்ச்சி வைரல் புற்றணுக்களை பாதிப்படைந்த உயிரணுவில் மற்றும் அதன் உடன்பிறப்புகளில் வெளிப்படுத்தலாம்.

எபிஜெநேடிக்ஸ் (அதிசனனவியல்)

அதிசனனவியல் என்பது உயிரணு வெளிப்பாடுகளை வேதிப் பொருள் மூலமாக, டிஎன்ஏ கட்டமைப்பில் பிறழ்வு இல்லாமல் கட்டுப்படுத்தும் முறையை படித்து அறிந்து கொள்வதே ஆகும். புற்றுநோய் தோன்றும் முறையை அறிந்து கொள்ள அதிசனனவியல் கோட்பாடு ஆனது டிஎன்ஏ வில் பிறழ்வு இல்லா மாற்றங்களால் உயிரணு வெளிப்பாடுகளிலும் திருத்தவோ, மாற்றி அமைக்கவோ செய்யலாம். பொதுவாக, புற்றணுக்கள் உமிழ்நீர்ச் சுரப்பிக் கல் (sialogen) கொண்டதாக இருக்கும், எடுத்துக்காட்டு,டிஎன்ஏ மெதயிலேற்றம் காரணம். அந்த மெதயிலேற்றம் இழந்துவிட்டால், அது புற்றணுக்களில் பிறழும் வெளிப்பாட்டை தூண்டலாம், அது புற்றுநோய் தோன்றும் முறைக்கு கொண்டுசெல்லலாம். அதிசனனவியல் மாற்றங்களில் தெரிந்த இயங்குமுறைகள் ஆனவை டிஎன்ஏ மெதயிலேற்றம், மற்றும் மெதயிலேற்றம் அல்லது அசெடைலேஷன் ஒப் ஹிச்டோன் புரதங்கள். குறிப்பிட்ட இடங்களில் அது நிறமூர்த்த டிஎன்ஏ வினை கட்டுப்படுத்தி / கட்டிவைத்திருக்கும்.

எச்டிஏசி மட்டுப்படுத்திகள் மற்றும் டிஎன்ஏ மேதில்ற்றான்ச்பிறேஸ் மட்டுப்படுத்திகள், போன்ற வகுப்பை சார்ந்த மருந்துகளால், அதிசனனவியல் சார்ந்த சைகைகளை திரும்பவும் புற்றணு கலத்தில் ஒழுங்குபடுத்த இயலும்.

புற்றணுக்கள்

புற்றணுக்கள் கலன் வளர்ச்சியை பல வகையான வழிகளில் மேம்படுத்துகிறது. அவற்றுள் பல நோதிக ளை உருவாக்குகின்றன, அவை உயிரணுக்களுக்கிடையே ஒரு "வேதிப் பொருள் தூதுவர்கள்" ஆக செயல்பட்டு உயிரணு பிளவு ஏற்படுகிறது, அதன் பாதிப்பு அதைப்பெறும் திசு அல்லது உயிரணுக்களின் சைகை குறுக்குக் கடத்துகையைப் பொறுத்து இருக்கும். அதாவது, எப்பொழுது வாங்கும் கலனில் இருக்கும் ஒரு நோதிவாங்கி தூண்டப்படுகிறதோ, கலனின் மேற்பரப்பில் இருந்து இந்த சைகை கலன் உயிரணுக்கருவிடம் அடைந்து, உயிரணுக்கரு மட்டத்தில் மரபணு படியெடுத்தல் விதிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். சில புற்றணுக்கள் சைகை குறுக்குக் கடத்துகை முறைமையின் பாகமாகவே விளங்குகின்றன, அதுவாகவே, அல்லது உயிரணுக்கள் மற்றும் திசுக்களில் அவர்களே சைகை வாங்கிகளாக செயல்படுகின்றனர், இவ்வாறு நோதிகளின் உணர்திறனை கட்டுப்படுத்துகின்றனர். புற்றணுக்கள் அடிக்கடி இழைப்பிறப்பாக்கக் கலன் களை , உருவாக்குகின்றன அல்லது அவை டிஎன்ஏ வின் படியெடுத்தலை உருவாக்க புரதம் செயற்கைத் தயாரிப்பு, மூலம் புரதம் மற்றும் நோதி களை தயாரிக்கின்றனர், அவை உயிரணுக்கள் பயன்படுத்தும் மற்றும் இடைவினைபுரியும் உற்பத்திப்பொருட்கள் மற்றும் உயிரிரசாயனங்களை தயாரிக்கின்றது.

முன்னோடி-புற்றணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள், அவை பொதுவான புற்றணுக்க ளுடைய அமைதியான எதிர்ப்பிரதி ஆகும், அவற்றின் வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளை உருமாற்றி, உற்பத்திப்பொருளான புரதத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இவ்வாறு நடக்கும்போது, முன்னோடி-புற்றணுக்கள் புற்றணுக்கள் ஆக மாறுகின்றன, மேலும் இந்த மாற்றம் உயிரணு சக்கிர த்தின் கலனில் பொதுவான சமன்படுத்தும் கட்டுப்பாட்டினை சலனமடையச்செய்கிறது, இதனால் கட்டுப்பாடில்லா வளர்ச்சி ஏற்படுகிறது. முன்னோடி-புற்றணுக்கள் ஜினோமில் இருந்து அகற்றுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்க முடியாது, அப்படி இயன்றாலும், அவை உயிரினத்தின் வளர்ச்சி, திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் சீரான உடல்நிலை களைப்பேண இக்கட்டாகும். அவற்றில் பிறழ்வு ஏற்படும் போது தான் வளர்சிக்கான சைகைகள் மிகைப்படுகின்றன.

புற்றுநோய் ஆராய்ச்சியில் முதல் முதலாக வரையறுக்கப்பெற்றது புற்றணுக்கள் ராச புற்றணு ஆகும். ராச குடும்பத்தின் முன்னோடி-புற்றணுக்க ளில் பிறழ்வுகள் (எச்-ராச, என்-ராச மற்றும் கே-ராச கொண்ட) மிகவும் பொதுவானவை ஆகும், அவை 20% முதல் 30% வரையில் அனைத்து மனித இன கட்டிகளில் காணலாம். அசலாக ராச என்பதை ஹார்வேய் சர்கோமா (சதைப்புற்று) தீநுண்ம் ஜினோமில் அடையாளம் கண்டு பிடித்தது, மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதனை மனித ஜினோமில் இருப்பதோடல்லாமல், ஒரு தூண்ட வைக்கும் கட்டுப்பாடு தனிமத்தைக்கொண்டு முடிச்சிடும் போது, கலன் நேரியல் பண்பாட்டிலும் புற்றுநோயை தூண்ட வல்லதாக இருந்தது அவர்களுக்கு எதிர்பாராதது.

கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள்

கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள் எதிர் இனப்பெருக்கம் செய்வதற்கான சைகைகளை நிரற்றொடர் செய்து மேலும் புரதங்கள் உயிரணுபிளவு படுவதையும் கலன் வளர்ச்சியையும் கட்டி அடக்கிப்பரம்பரையலகு அடக்கும். பொதுவாக, கட்டி அடக்கிபரம்பரையலகுகள் ஆனவை படியெடுத்தல் காரணி கள் ஆகும், அவை உயிரணு உளைச்சல் அல்லது டிஎன்ஏ சேதம் அடைவதால் முடுக்கிவிடப்படுகின்றன. அடிக்கடி டிஎன்ஏ சேதம் ஏற்பட, தலையற்ற மிதக்கும் பாரம்பரியப்பொருள்கள் அதில் அடங்கி்யிருக்கும் மேலும் இதர சைகைகளுடன் இருக்கும், அவை நொதிகளையும் பாதைகளையும் தூண்டி விடுவதனால் கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள் கிளர்வடைந்து செயல்படும். இதுபோன்ற உயிரணுக்களின் செயல்பாடு ஆனது உயிரணு சக்கிரத்தின் முன்னேற்றத்தை தடுப்பதோடு டிஎன்ஏ வின் திருத்தங்களை மேற்கொள்ளும், அதன் மூலம் பிறழ்வுகள் பரவி மகள் உயிரணுக்களுக்கு கடந்துசெல்வதைத் தடுக்கும். p53 புரதமானது, மிகவும் முக்கியமாக ஆராய்ந்த கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளில் ஒன்று, அது ஓர் படியெடுத்தல் காரணி, அது பல கிளர்வுற்ற கலன்களால் ஊக்கம் பெறும் எடுத்துக்காட்டாக ஹைபோக்சியா (உயிர்வளிக்குறை) மற்றும் புற ஊதாக்கதிர்வீச்சு சேதம்.

அரைப்பகுதிக்கும் மேலான அனைத்து புற்றுநோய் வகைகளிலும் p53 மாற்றங்கள் கொண்டவையாக இருந்தாலும், அதன் கட்டியை அடக்கும் முறையானது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. p53 க்கு தெளிவாக இரண்டு செயல்பாடுகள் உள்ளன: ஒன்று ஒரு அணுக்கருவாக இருந்து படியெடுத்தல் காரணிகளை பேணுதல், மேலும் மற்றொன்று குழியமுதலுருவுக்குரிய பங்கான உயிரணு சக்கிரத்தை, கலப்பிரிவு, உயிரணு பகுப்பு மற்றும் அபோப்டோசிசை (திட்டமிட்ட செல்மரணம்) கட்டுப்படுத்தல்.

வார்புர்க் கருதுகோள் ஆனது புற்றுநோய் வளர்ச்சியை ஏந்துவதற்காக க்ளைகொளைசிசை விருப்பத்துடன் சக்தி அளிப்பதற்காக பயன்படுத்துதலாகும். p53 ஆனது சுவாசத்துக்குரிய பாதைக்கு பதிலாக க்ளைகொளைடிக் பாதையை கட்டுப்படுத்த இயலும் என்பதை தெளிவுப்டுத்தி உள்ளது.

எனினும், ஒரு பிறழ்வு நடந்தால் கூட, அது அந்த கட்டி அடக்கிப்பரம்பரையலகையே சேதப்படுத்தலாம், அல்லது அதனை செயல்படுத்தும் சைகைப்பாதையை, "அணைத்து விடலாம்". இதன் பரிணாமம் என்ன என்றால் டிஎன்ஏ வினை திருத்துவது என்பது தடைபட்டும், அல்லது அடக்கப்பபட்டும் இருப்பதே: டிஎன்ஏ சேதம் திருத்தப்படாமல் மேலும் கூடுகிறது, முடிவில் அது புற்றுநோய்க்கு கொண்டுபோய் விடுகிறது.

கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளில் உள்ள கருச்செல் கோடின் உயிரணுக்களுக்கு ஏற்படும் பிறழ்வுகள், அதன் குஞ்சுகளுக்கு போய் சேர்வதால், அதனால் பின்வரும் தலைமுறைகளுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு கூடிவரும். இந்த குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களுக்கு இதற்கான நிகழ்வு அதிகரித்தும் மேலும் பன்மடங்கான கட்டிகளுக்கு குறைந்த மறைநிலையும் காணப்படும். ஒவ்வொரு வகையான அடக்கிப்பரம்பரையலகு பிறழ்விற்கும், கட்டிகளின் வகை தனிப்படும், அதில் சில பிறழ்வுகள் குறிப்பிட்ட புற்றுநோயையும், மற்றும் இதர பிறழ்வுகள் இதர வகைகளையும் சாரும். மரபுப்பிறழ்ந்த கட்டி அடக்கிகளின் மரபுரிமையாய் பெறும் விதமானது ஒரு பாதிப்படைந்த உறுப்பினர் ஒரு பெற்றோரிடம் இருந்து குறையுள்ள நகலையும் மற்றும் இன்னொரு பெற்றோரிடம் இருந்து பொதுவான நகலையும் மரபுரிமையாக பெறுகிறது. எடுத்துக்காட்டாக, தனிநபர் யார் ஒருவர் மரபுரிமையாக ஒரு மரபுப்பிறழ்ந்த p53 மாற்றுரு (மேலும் அதனால் பிறழ்வுற்ற p53 க்கு வற்றுப்புணரிய தன்மை) கொண்டவர்கள் கருங்கட்டிகள்; கணையச்சிரை புற்றுநோய் போன்றவற்றால் பாதிப்படையலாம், இது லி-பிராவமேனி நோய்க் குறித்தொகுப்பு என அறி்யப்படும். இதர மரபுரிமையாக கட்டி அடக்கிப்பரம்பரையலகு நோய்க்குறித்தொகுப்புகளில் (Rb)ரப் பிறழ்வுகள், இரெத்தினோபிளாசுத்தோமாவுடன் தொடர்புடையது, ஏபிசி உயிரணி பிறழ்வுகள்,அடிநோவிழுதியப் பெருங்குடல் புற்றுநோயுடன் தொடர்புடையது ஆகியவை அடங்கும். அடிநோவிழுதியப் பெருங்குடல் புற்றுநோய் இளமையாக இருக்கையில் பெருங்குடலில் ஆயிரக்கணக்கான பவளமொட்டுக்களுடன் தொடர்புடையது, அவை சின்ன வயதிலேயே பெருங்குடல் புற்றுநோய்க்கு வழி வகுக்கும். இறுதியாக,BRCA1 மற்றும் BRCA2 வில் ஏற்படும் மரபுரிமை பிறழ்வுகள் விரைவாக மார்பக புற்றுநோய் தொடக்கத்திற்கு வித்திடும்.

1971 ஆம் ஆண்டில் புற்றுநோய் குறைந்தது இரு பிறழ்வு நிகழ்வுகளை சார்ந்திருப்பதாக முன்மொழிந்தார்கள்.நட்சனின் டு-ஹிட் கருதுகோள் என அறியப்படுவது, கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளில் இருக்கும் ஒரு மரபுவழி, ஜெர்ம்-லைன் பிறழ்வு அந்த உயிரினத்தின் வாழ்வில் இன்னொரு பிறழ்வு ஏற்பட்டால், அந்த கட்டி அடக்கிப்பரம்பரையலகில் இருக்கும் இதர மாற்றுருவை செயலிழக்கச்செய்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதே.

பொதுவாக, புற்றணுவானது அடக்கி ஆளும் பண்புடையது, ஏனென்றால் அவற்றில் பேறு-செயல்பாடு பிறழ்வுகள் உள்ளன, ஆனால் பிறழ்வுக்குள்ளான கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளானது அடக்கமானவை, ஏனென்றால் அவற்றில் இழப்பு-செயல்பாடு பிறழ்வுகள் உள்ளன. ஒவ்வொரு உயிரணுவிலும் அதே மரபணுவின் இரு நகல்களை கொண்டது, ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று, மற்றும் மிகையான நிகழ்வுகளில் பேறு-செயல்பாடு பிறழ்வுகள் ஒரு மூல-புற்றணுவின் நகலில் இருந்தால் அதுவே ஒரு உண்மையான புற்றணுவாகிறது. ஆனால்,இழப்பு-செயல்பாடு பிறழ்வுகள் கட்டி அடக்கிப்பரம்பரையலகின் இரு நகல்களிலும் இருந்தாலே ஒழிய அந்த மரபணு முழுமையாக செயலிழக்காது. ஆனாலும், கட்டி அடக்கிப்பரம்பரையலகின் ஒரு பிறழ்வுபட்ட நகலானது தனது காட்டுத்தனமான-ரகத்தை சார்ந்த நகலை செயலிழக்கச்செய்கிறது. இந்த தோற்றப்பாட்டை அடக்கி ஆளும் பண்புடைய எதிர்மறை தாக்கம் என்றழைப்பர் மற்றும் இதை p53 பிறழ்வுகளில் காணலாம்.

பல ஆராய்ச்சியாளர்கள் நட்சொனின் டூ-ஹிட் மாதிரியை அண்மையில் எதிர்விடுத்துள்ளனர். கட்டி அடக்கிப்பரம்பரையலகின் ஒரு மாற்றுருவை செயலிழக்கச் செய்தாலே கட்டிகள் ஏற்படும். இந்த தோற்றப்பாட்டை ஒருமடிபற்றாகுறை என்று அழைப்பர் மற்றும் இதைப்பல சோதனைமுறைகளில் பறைசாற்றியுள்ளார்கள். ஒருமடிபற்றாகுறையால் ஏற்படும் கட்டிகளை டூ-ஹிட் வழியால் ஏற்படும் கட்டிகளுடன் ஒப்பிட்டால் ஒருமடிபற்றாகுறையால் ஏற்படும் கட்டிகள் பொதுவாக பிற்கால வயதில் தோன்றுகிறது.

புற்றுநோய் உயிரணு உயிரியல்

புற்றுநோய் 
திசுவினை ஒரு தொடர் அலைமாலையாக சாதாரண வகையில் இருந்து புற்றணு இயல்பு கொண்டது வரை ஒழுங்கு படுத்தலாம்.

அடிக்கடி, புற்றுநோயை ஏற்படுத்தும் பன்மடங்கு மரபியல் மாறுபாடுகள் பல வருடங்களுக்கு பிறகே குவியும். இந்த நேரத்தில், முன்-புற்றுப்பண்பு உயிரணுக்களுடைய உயிரியல் நடத்தையானது மெதுவாக பொதுவான உயிரணுக்களின் பண்புகளில் இருந்து வேறுபட்டு புற்றுநோய் பண்புடையவையாக மாறிவிடுகிறது. முன்-புற்றுப்பண்பு திசுவை உருபெருக்கியில் பார்க்கும் பொழுது, அதற்கு ஒரு தனித்தன்மை பெற்ற தோற்றம் இருப்பதை காணலாம். அதனை வேறுபடுத்தும் பண்புகள் என்ன என்றால் அவை அதிக எண்களில் பிளவு கொண்ட உயிரணுக்கள், அதன் அணுக்கருவின் அளவு மற்றும் வடிவத்தில் வேறுபாடு, உயிரணுக்களின் அளவு மற்றும் வடிவத்தில் வேறுபாடு, தனி உயிரணுக்களின் பண்புகளின் இழப்பு, மற்றும் இயல்பான திசு அமைப்பில் ஏற்படும் இழப்பு. இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி என்பது ஒரு நியதிக்கு மாறான மிகையான உயிரணுக்களின் இனப்பெருக்கம் ஆகும், அதனால் இயல்பான திசு அமைப்பு நடக்காமலும் மேலும் முன்-புற்றுப்பண்பு உயிரணுக்களின் கட்டமைப்பின் இழப்பும் நேர்கிறது. இது போன்ற முன்னரே நடைபெற்ற நியோப்பிளாஸ்டிக் மாற்றங்களை மிகைப்பெருக்கத்தில் இருந்து வேறுபடுத்த வேண்டும், அது ஒரு ஆர்மோன் சமசீர்க்கேடு அல்லது நாள்பட்ட உறுத்தல் போன்ற வெளிப்புற தூண்டுதல் காரணமாக ஏற்பட்ட மீளக்கூடிய உயிரணு பகுப்பாகும்.

இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சியின் மிகவும் தீவிரமான நிகழ்வுகளை "கார்சினோமா (புற்றுநோய்) இன் சி்டு" என்று சுட்டியனுப்பப் படுகிறது. லத்தீன் மொழியில், "இன் சி்டு" என்றால் "இந்த இடத்தில்", அதனால் கார்சினோமா(புற்றுநோய்) இன் சி்டு என்பது ஒரு கட்டுப்பாடில்லாத உயிரணுக்களின் வளர்ச்சி அது தோன்றிய இடத்திலேயே நீடிப்பதும் மற்றும் இதர திசுக்களில் பரவாமலும் இருப்பதை சுட்டியனுப்புவதாகும். இருந்தாலும், கார்சினோமா(புற்றுநோய்) இன் சி்டு நாளடைவில் படரும் கொடும் புற்றுநமாகலாம் மற்றும் முடிந்தால் அதை அறுவை சிகிச்சையால் பொதுவாக நீக்கப்படுகிறது.

க்லோனல் (முளை வகை) பரிணாம வளர்ச்சி

விலங்குகளின் எண்ணிக்கையில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவது போல, கட்டுப்பாடில்லாத உயிரணுக்களின் எண்ணிக்கையும் பரிணாம வளர்ச்சியடைகிறது. இந்த விரும்பத்தகாத செயல்பாட்டினை உடலுக்குரிய பரிணாம வளர்ச்சி என அழைக்கிறோம், மேலும் அவ்வகையில் தான் புற்றுநோய் தோன்றுகிறது மற்றும் கொடும்புற்றிநம் ஆகிவிடுகிறது.

உயிரணு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மிக்க மாறுதல்கள் உயிரணுக்களை ஒழுங்கற்ற பாணியில் வளரச்செய்வது, உயிரணுவை இறக்கச்செய்யும்.ஆனால் ஒரு முறை புற்றுநோய் தோன்றினால், புற்றுநோய் உயிரணுக்கள் இயற்கைத்தேர்விற்கு இடையாகும்: புதிய மரபியல் மாறுபாடுகள் கொண்ட குறைவான உயிரணுக்கள் அவர்களின் உயிர் பிழைத்தலை அல்லது இனபெருக்கத்தை அதிகரித்து தொடர்ந்து பெருகி, வளரும் கட்டியை ஆளுகின்றன, மற்றும் குறைந்த மரபியல் மாறுபாடுகள் கொண்ட உயிரணுக்களின் வளர்ச்சியை அடக்குகின்றது. இதனால் தான் நோய்க்கிருமிகளான எம்ஆர்எஸ்ஏ போன்றவை நோய்க்கிருமி கட்டுப்படுத்தி-எதிர்ப்புச்சக்தி கொண்டவை ஆகின்றன (அல்லது எப்படி எச்ஐவீ ஆனது மருந்து-எதிர்ப்புச்சக்தி) கொண்டதாக ஆகிறது, மற்றும் இதே காரணம் பயிர் கருகல் மற்றும் பூச்சிகள் பூச்சிக்கொல்லி-எதிர்ப்புசக்தியுடன் விளங்குகின்றன. இந்த பரிணாம வளர்ச்சி காரணமாக புற்றுநோய் மறுபீடிப்பில் உயிரணுக்கள் புற்றுநோய்-மருந்து எதிர்ப்புத்தன்மை பெற்றவையாகவும் (அல்லது சில நிகழ்வுகளில் கதிரியக்கச் சிகிச்சைக்கு எதிர்ப்புத் தன்மை கொண்டவையாக திகழ்கின்றன).

புற்றுநோய் உயிரணுக்களின் உயிரியல் பண்புகள்.

2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹநஹன் மற்றும் வெயின்பேர்க் கட்டுரையில், புற்றுப்பண்பு கட்டி உயிரணுக்களின் உயிரியல் பண்புகள் கீழே கண்டபடி சுருக்கியுள்ளனர்:

  • வளர்ச்சி சைகைகளை கையகப்படுத்தல், அதனால் கட்டுப்பாடில்லாத வளர்ச்சிப்பெருக்கம்.
  • வளர்ச்சிக்கு எதிரான சைகைகளுக்கும் உணர்திறன் இல்லாமை, அதனாலும் கட்டுப்பாடில்லாத வளர்ச்சிப்பெருக்கம்.
  • திட்டமிட்ட செல் மரணம் செய்வதற்கு தகுதி இழப்பு, உயிரணு சார்பு பிழைகள் இருந்தாலும், மற்றும் வெளியில் இருந்து வளர்ச்சிக்கு எதிரான சைகைகள் இருந்தாலும், வளர்ச்சியை தொடருவதற்கு இயலாமை.
  • முதிர்ச்சியடைதலுக்கான தகுதி இழப்பு, அதனால் எல்லை இல்லாத தன் பிரதி எடுக்கும் தன்மை.(அமரத்தன்மை)
  • இரத்தக் குழாய் வளர்ச்சியினை கையகப்படுத்தல், கட்டியின் உயிர்ப்பற்ற ஊட்டச்சத்து பரவல் எல்லைக்கும் மீறி வளரவிடுதல்
  • அருகாமையில் இருக்கும் திசுக்களை பரவி கையகப்படுத்தல், இது பரவும் (கார்சினோமா) புற்றுநோயின் வரையறுத்த பண்பு ஆகும்.
  • தூரமான இடங்களில் இடம் மாறல்களுக்கான கட்டும் சக்தியை கையகப்படுத்தல், இது புற்றுப்பண்பு கட்டிகளின் முக்கிய பண்பாகும். (கார்சினோமா (புற்றுநோய்) அல்லது இதர வகைகள்).

இது போன்ற பல நடவடிக்கைகளை நிறைவு செய்வது ஒரு அரிய நிகழ்ச்சி ஆகும், இவை இல்லாமல் :

  • உயிரணுக்களின் பிழைகளை திருத்துவதற்கான தகுதியை இழத்தல், அதனால் பிறழ்வுகள் விகிதம் (ஜெநோமிக் நில்லாமை), அப்படி இதர மாறுதல்களை விரைவாக்குவது.

கார்சினோமா (புற்றுநோய்)களில் இவ்வாறான உயிரியல் மாற்றங்கள் மரபார்ந்தவை ஆகும்; இதர புற்றுப்பண்பு கட்டிகளில் இவை அனைத்தும் தேவைப்படாது. எடுத்துக்காட்டு, திசு பரவல் மற்றும் தூரமான இடங்களுக்கு இடம் மாறுதல் இரத்த வௌளை அணுக்களின் பொதுவான பண்புகள் ஆகும்; இவ்வாறான படிகள் லுகேமியா (இரத்தப்புற்றுநோய்)தாக்குதலில் தேவைப் படாது. இந்த வேறுபட்ட நடவடிக்கைகள் தனி பிறழ்வுகளை குறிப்பதாகாது. எடுத்துக்காட்டு, ஓர் ஒற்றை உயிரணுவை செயலிழக்க செய்தலுக்கான,p53 புரதத்திற்கான குறியிடுதல், காரணம் ஜெநோமிக் நில்லாய்மை ஏற்படும், திட்டமிட்ட செல் மரணம் தடைபடும், இரத்தக் குழாய் வளர்ச்சி அதிகரிக்கும். எல்லா புற்றுநோய் உயிரணுக்களும் பகுப்பதில்லை. அதாவது, புற்றுநோய் கட்டிகளின் உயிரணுக்களின் உட்கணம்,புற்றுநோய் தண்டு உயிரணுக்கள் என அழைக்கப்படுவது, அவற்றையே பெருக்கும் மற்றும் வேறுபட்ட உயிரணுக்களை உருவாக்கும்.

தடுக்கும் முறைகள்

புற்றுநோய் தடுப்பு என்பது புற்றுநோய் நிகழ்வை குறைப்பதற்கான சுறுசுறுப்பான நடவடிக்கைகளை எடுத்தல் என்று வரையறுத்துள்ளார்கள். இதை கார்சினொஜென்ஸ் என்ற புற்று ஊக்கிகளை தவிற்பதாலும் அல்லது அதன் வளர்சிதை மாற்றத்தை மாற்றி அமைப்பதாலும், வாழ்க்கை பாணியை அல்லது உணவு முறைகளில் சிறு திருத்தங்கள் செய்தும், மற்றும் / அல்லது மருத்துவ குறுக்கீடு மூலமாகவும் ((இரசாயன வகை தடுப்பு முறையில், முன்-புற்றுப்பண்பு கட்டிகளுக்கு சிகிச்சை அளித்து நிறைவேற்றலாம்). நோய் விபரவியலுக்கான கருத்துப்படிவம் படி "தடுப்பு" என்பது பொதுவாக தொடக்க நிலை தடுப்பு , இதில் எந்த நோயாலும் பாதிக்கப்படையாத மக்கள் அடங்குவர், அல்லது உயர் நிலை தடுப்பு, இது நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான நோக்குடன் ரிகர்ரன்ஸ் (மறுபீடிப்பை) குறைத்தல் அல்லது முன்னதாகவே அறிந்த நோயின் சிக்கல்களை குறைத்தல்.

மாற்றியமைக்கத்தகுந்த ("வாழ்க்கைப்பாணி") சூழ் இடர் காரணிகள்.

புற்றுநோய் 
நுரையீரல் மாதிரியில் மூச்சுக் குழாய்களின் அருகாமையில் தோன்றும் (வெள்ளையான கட்டி) ஒரு செதிள் உயிரணு கார்சினோமா (புற்றுநோய்)

புற்றுநோய் ஏற்படுவதற்கான பெரும்பான்மை சூழ் இடர் காரணிகளானவை சுற்றுச்சூழல் சார்ந்தவை அல்லது வாழ்க்கைப் பாணியை சார்ந்தவை ஆகும், அதனால் புற்றுநோய் ஒரு பெரிய தடுக்கக்கூடிய நோய் என்று உரிமையாக கேட்பவரும் உண்டு. மாற்றியமைக்கத்தகுந்த புற்றுநோய் சூழ் இடர் காரணிகளுக்கான எடுத்துக்காட்டில் மது அருந்துதல் (இது வாய், உணவுக்குழாய், மார்பக, மற்றும் இதர புற்றுநோய்களுக்கான அதிக சூழ் இடர் கொண்டது), புகை பிடித்தல் (நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களில் 20% பெண்கள் புகை பிடிக்கவில்லை என்றாலும், எதிரில் 10% ஆண்கள் ), உடல் மந்த நிலை (இது பெருங்குடல், மார்பக, மற்றும் இதர புற்றுநோய்களுடன் அதிக சூழ் இடருடன் தொடர்புடையது), மற்றும் மிகையான உடல் எடையுடன் /உடல் தடித்து இருப்பது (இது பெருங்குடல், மார்பக, கருப்பையக மற்றும் இதர புற்றுநோய்களுடன் அதிக சூழ் இடருடன் தொடர்புடையது). நோய் விபரவியல் ஆதாரங்களை கருத்தில் கொண்டு, அதிகமான அளவில் மது அருந்துவதை தவிர்த்தால் புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் குறையும்; எனினும், இதை புகையிலை பழக்கத்துடன் ஒப்பிடுகையில், இதன் விளைவுகளின் குறைந்த அல்லது சிறிய முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஆதாரத்தின் வலு பலநேரங்களில் பலவீனமாகவே உள்ளது. மற்ற வாழ்க்கைமுறை மற்றும் சுகாதார காரணிகள் புற்றுநோய் சூழ் இடரை பாதிக்கும் (சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ) இதில் பாலியல் சார்ந்த நோய்களும் (மனித பாப்பிலோமா நச்சுயிரி), வெளி நொதிகளின் உபயோகம், அயனாக்கற்கதிர்ப்புக்கு வெளிப்பாடு மற்றும் புற ஊதாக் கதிரியக்கம், மற்றும் சில பணி மற்றும் ரசாயனம் சார்ந்த வெளிப்பாடுகள் போன்றவை அடங்கும்.

உலக அளவில் ஒவ்வொரு வருடமும், குறைந்தது 200,000 மக்கள் பணி இடம் சார்ந்த புற்றுநோயால் இறக்கின்றனர். கோடிக்கணக்கான ஊழியர்கள் ஆச்பெச்டாஸ் நாருகளை சுவாசிப்பதாலும் மற்றும் புகையிலை புகை பிடிப்பதாலும், பணி இடத்தில் பென்சீன் போன்ற இரசாயனங்களின் வெளிப்பாட்டினாலும் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் இடைத்தோலியப்புற்று அல்லது லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) போன்ற இதர புற்றுநோய் வரும் சூழ் இடர் பெருகிக்காண்கிறது. தற்போது, மிகுதியான புற்றுநோய் இறப்புகள் வளர்ச்சி பெற்ற நாடுகளில் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டு தோறும் குறைந்தது சுமார் 20,000 மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் மேலும் 40,000 புதிய புற்றுநோய் நிகழ்வுகள் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.

பத்தியம்

உணவு முறை மற்றும் புற்றுநோய் சார்ந்த கருத்திணக்கமானது உடல் பருமன் புற்றுநோய் ஏற்படும் சூழ் இடரை அதிகரித்திருக்கிறது என்பதாகும். வேறுபட்ட பத்திய வழக்கங்கள் அடிக்கடி புற்றுநோய் நிகழ்வுகளில் உள்ள வேறுபாடுகளை நாடுகளிடையே காட்டுகிறது. (எ.கா.இரைப்பைக்குரிய புற்றுநோய் ஜப்பானில் அதிகமாக நிகழ்கிறது, பெருங்குடல் புற்றுநோய் அமெரிக்காவில் பொதுவாக காணப்படுகிறது. முன் கூறிய எடுத்துக்காட்டில் ஹப்லோக்ரூப்ஸ் (ஒற்றையினங்கள்) கணக்கில் எடுக்கவில்லை). வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் அவர் குடியேறிய புதிய நாட்டின் சூழல் இடரை பெருக்குகின்றனர், அடிக்கடி ஒரே தலைமுறையில் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது உணவு மற்றும் புற்றுநோய்க்கு இடையே இருக்கும் இணைப்பு கணிசமானதாகும் என்பதை அறிவுறுத்துகிறது. உடல் பருமனை ஒரு மக்கள் தொகையில் குறைத்தால், புற்றுநோய் நிகழ்வை குறைக்குமா என்பது தெரியவில்லை.

ஒரு தனிப்பட்ட பொருள் (உணவையும் சேர்த்து) சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் கொண்டதாக அடிக்கடி அறிக்கைகள் வந்தாலும், இவற்றில் சிலதே புற்றுநோயுடன் தொடர்பு கொண்டதாக நிரூபித்துள்ளது. இந்த அறிக்கைகள் மிக்கவும் விலங்குகள் அல்லது செயற்கை உயிரணு வளர்ப்பு ஆய்வுகளை ஆதாரமாக கொண்டது.பொது சுகாதார பரிந்துரைகள் இவ்வறிக்கைகளின் அடிப்படையில் செய்ய இயலாது, எனினும் இவை ஆதாரபூர்வமாக நோக்கற்குரிய மனித கள ஆய்வுகள் (அல்லது எப்போதாவது இடைத்தடை கள ஆய்வுகள்) மூலம் நிரூபணம் செய்தால் மட்டுமே கருத்தில் கொள்ள முடியும்.

புற்றுநோய் 
ஒரு பெருங்குடல் பகுதி நீக்கிய மாதிரியின் பரவும் பெருங்குடல் மலக்குடலுக்குறிய கார்சினோமா (புற்றுநோய்) (மேலே நடுவில்)

முதன்மையான புற்றுநோய் சூழ் இடர் ஒடுக்கங்களுக்கு உத்தேசித்த பத்திய இடைத்தடைகளை பயன்படுத்துவதை நோய் விபரவியல் சங்கத்தின் ஆய்வுகள் ஆதரிக்கின்றன. குறைவாக இறைச்சி உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோய்க்கான சூழ் இடர்கள் குறைகின்றன என்பதை ஒரு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது போன்ற அறிக்கைகள் இந்த ஆய்விற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான சூழ் இடர் காபி பருகுவதினால் குறைகின்றன என்று ஒரு அறிக்கை கூறுகிறது. வாட்டு இறைச்சியை உட்கொண்டால் வயிற்று புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் , மார்பக புற்றுநோய், மற்றும் கணையச்சிரை புற்றுநோய்க்கான சூழ் இடர் அதிகரிக்கின்றன, அதிக வெப்பத்தில் இவ்வுணவுப் பொருட்களை சமைத்தலால் பென்சோபைரீன் போன்ற புற்று ஊக்கிகள் தோன்றுவது தான் இதற்கான காரணம்.

மரக்கறி உணவு மற்றும் வாழ்க்கைப்பாணி மாறுதல்களால் சுக்கிலவகம் புற்றுநோயால் பாதிப்படைந்த பொதுவாக ஏற்றுக்கொண்ட சிகிச்சை முறைகளை பயன்படுத்தாத ஆண்களில் புற்றுநோய் குறியீடுகள் குறைந்து காணப்பட்டதை 2005 ஆம் ஆண்டில் நடத்திய உயர்நிலை தடுப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2006 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வு மேல் காணப்பட்ட ஆய்வின் முடிவுகளை பெருக்கிக்காட்டியது, இதில் பங்கேற்ற 2400 பெண்களில் பாதி நபர்களுக்கு பொதுவான உணவும் மற்றவர்களுக்கு 20% கொழுப்புச்சத்து கலோரிகள் குறைவாக இருந்த உணவும் அளித்தார்கள். கொழுப்புச்சத்து குறைவாக இருந்த உணவை உட்கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மீளல் அறிகுறிகள் குறைவாக இருந்ததை டிசம்பர் 2006 இடைக்கால அறிக்கை தெரிவிக்கிறது.

அண்மையில் நடத்திய ஆய்வுகள் சில புற்றுநோய்களுக்கும் தூய்மித்த வெல்லங்கள் மற்றும் இதர எளிமையான கார்போஹைட்ரேட்டுகளுக்கும் இணைப்பு உள்ளதை பறைசாற்றுகிறது. எந்த அளவுக்கு இவை இயைப்படுகிறது மற்றும் காரணமாகச்செயல்படுகிறது என்பது சர்ச்சைக்குள்ளானது, இருந்தாலும் உண்மையில் சில நிறுவனங்கள் தூய்மித்த வெல்லங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை குறைவாக உட்கொள்வதை அவர்களது புற்றுநோய் தடுப்பு பத்தியத்தில் பரிந்துரைக்கின்றனர்.

நவம்பர் 2007 ஆம் ஆண்டில், தி அமேரிக்கன் இன்ஸ்டிடுட் போர் கான்செர் ரிசெர்ச்(ஏஐசிஆர்), மற்றும் வோர்ல்ட் கான்செர் ரிசெர்ச் பண்ட் (WCRF) இணைந்து புட், நுட்ரிஷன், பிசிகல் ஆக்டிவிடி மற்றும் ப்ரிவென்ஷன் ஒப் கான்செர்:எ குளோபல் பெர்ச்பெச்டிவ், என்ற "புட், பிசிகல் ஆக்டிவிடி மற்றும் கான்செர் பற்றிய மிகவும் தற்போதைய மற்றும் எல்லாமுட்கொண்ட பகுப்பாய்வு கொண்ட இலக்கியத்தை" வெளியிட்டார்கள். இந்த WCRF/AICR வல்லுநர் அறிக்கையில் மக்களுக்கு பயன்படக்கூடிய புற்றுநோய் தாக்குதலுக்கான சூழ் இடரை குறைப்பதற்காக 10 பரிந்துரைகளை பட்டியலிட்டுள்ளார்கள், அவற்றில் கீழே கொடுத்துள்ள உணவு சம்பந்தப்பட்ட பின்பற்றத்தக்க வழிமுறைகள் அடங்கும்:(1) எடையை அதிகரிக்கும் உணவுகளை மற்றும் பானங்களை குறைத்தல், அதாவது சக்தி நிறைந்த உணவுகள் மற்றும் சீனி கலந்த பானங்கள், (2) தாவரங்களை மூலமாகக்கொண்ட உணவுகளை மிகையாக உண்பது, (3) புலால் இறைச்சியை குறைவாக உட்கொள்வது மற்றும் பதப்படுத்திய இறைச்சியை தவிர்ப்பது, (4) மதுபானங்களை குறைத்து உட்கொள்வது, மற்றும் (5) உணவில் உப்பை குறைத்து உட்கொள்வது மேலும் காளானால் பாதித்த உணவுகளை (தானியங்களை) மற்றும் பருப்பு வகைகளை (அவரையினத்தினை) தவிற்பது போன்றவை அடங்கும்.

உயிர்ச்சத்துக்கள்

புற்றுநோயை கூடுதல் உயிர்ச்சத்து அளிக்கும் மூலப்பொருள்களால் தடுக்கலாம் என்ற யோசனை இதற்கு முன் நடந்த கவனிப்புகளில் மனித நோய்கள் மற்றும் உயிர்சத்துக் குறைவுகளுக்கு இடையே தொடர்புறல் காணப்பட்டதே ஆகும், அதாவது உயிரைப் போக்கும் இரத்த சோகையான பித்தபாண்டு மற்றும் வைடாமின் 12 குறைவுக்கான தொடர்புறல், கேவிநோய் வைட்டமின் சி குறையுடன் தொடர்புறல் போன்றவை. புற்றுநோயைப் பொறுத்தவரை இது பெரிய அளவில் நிரூபிக்கப் படவில்லை, மேலும் கூடுதல் உயிர்ச்சத்து அளிக்கும் மூலப்பொருள்கள் பெரிய அளவில் புற்றுநோயை தடுப்பதாகவும் தெரியவில்லை. புற்றுநோயுடன்-போராடும் உணவில் காணப்படும் பொருட்களும் எண்ணிக்கையில் மிகையாகவும் மேலும் வேறுபட்டும் காணப் படுகின்றன, அவை முன்னர் சரிவர அறிவுக்கு எட்டவில்லை, அதனால் நோயாளிகளை அதிக அளவில் புத்தம்புதியதானதும், பதப்படுத்தப் படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை முழு அளவில் உடல்நலம் பயனடைவதற்கு, உணவில் சேர்த்துக்கொள்ள, அறிவுரை வழங்கப்படுகிறது.

நோய் விபரவியல் ஆய்வுகள் குறைவான வைட்டமின் D நிகழ்நிலைக்கும் புற்றுநோய் தொடர்புரல் இருப்பதால் புற்றுநோய் சூழ் இடருக்கு அதிக வாய்ப்புள்ளதை காட்டுகிறது. எனினும், இது போன்ற ஆய்வுகளின் விளைவுகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும், ஏன் என்றால் இரு காரணிகளுக்கிடையே இயைபுபடுத்தல் இருந்தாலும் ஒன்றின் விளைவாக மற்றொன்று ஏற்படுவதாக நிரூபிக்க இயலாது. (அதாவது இயைபுபடுத்தல் இருந்தாலும் அது நோய்க்காரணியாக இருக்காது). வைட்டமின் D புற்றுநோயை தடுக்கவல்லது என்ற சாத்தியக்கூறு, சூரிய ஒளி வெளிப்பாட்டின் காரணம் பரவும் புற்றிநம் ஏற்படும் சூழ் இடருடன் முரண்பாடாக உள்ளது. சூரிய ஒளிக்கு உடலை வெளிப்படுத்துவதால் இயற்கையாகவே மனித உடலில் வைட்டமின் D உற்பத்தி பெருகுகிறது, சில புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சூரிய வெளிப்பாட்டால் ஏற்படக்கூடிய தீங்கு விளைவிக்கும் ஆற்றல் கொண்ட புற்றுப்பண்பு தாக்கங்களை விட, சூரிய வெளிச்சத்திற்கு உட்பட்ட சருமத்தில் உற்பத்தியாகக்கூடிய மிகையான வைட்டமின் D கலவையின் புற்றுநோயை தடுப்பதற்கான விளைவுகள் அதிக அளவில் சாதகமாக இருக்கும் என்று வாதிக்கின்றனர். 2002 ஆம் ஆண்டில், டா. வில்லியம் B. கிராண்ட் அமெரிக்காவில் ஆண்டுதோறும் புற்றுநோய் காரணமாக 23,800 முழுமுதிர்வற்ற இறப்புகள் போதுமளவிற்கு UVB வெளிப்பாடு இல்லாததால் (தெளிவாக வைட்டமின் D குறைவால்) நிகழ்வதாக கூறுகிறார். இந்த எண்ணிக்கையானது, மெலனோமா (கருங்கட்டி) அல்லது செதிள் கலன் கார்சினோமாவால் (புற்றுநோய்) நிகழும் 8800 இறப்புகளைவிட மிக அதிகமானது, அதனால் சூரிய வெளிப்பாட்டால் ஒட்டுமொத்தமாக பயனடையலாம் என்பது அவர் கருத்து. மற்றோர் ஆராய்ச்சிக்குழுவினர் ஆண்டுதோறும் முழுமுதிர்ச்சி அடையாமலேயே புற்றுநோய் காரணமாக 50,000–63,000 தனி நபர்கள் அமெரிக்காவில் மற்றும் 19,000-25,000 தனிநபர்கள் UK நாட்டிலும் குறைவான வைட்டமின் D காரணம் இறப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.

பீட்டா-காரோடீன் சார்ந்த நிகழ்வு சமவாய்ப்புள்ள மருத்துவ சோதனை ஒத்திகைகளின் முக்கியத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.புறப்பரவியல் நிபுணர்கள் ஆராய்ந்த உணவு மற்றும் ஊனீர் அளவுகளை உற்றுநோக்கிய பொழுது அதிக அளவில் பீட்டா-காரோடீன்,[[வைட்டமின் A (A உயிர்ச்சத்து)|வைட்டமின் எ]]யின் முன்னோடியை கண்டனர், இவை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது, புற்றுநோயின் சூழ் இடர்களை குறைக்கின்றது. இந்த தாக்கம் நுரையீரல் புற்றுநோயில் அதிகமாக காணப்பட்டது. இந்த கருதுகோள் காரணம் மேலும் அதிக அளவிலான சமவாய்ப்புள்ள மருத்துவ சோதனை ஒத்திகைகள் பின்லாந்து மற்றும் அமெரிக்க (CARET ஆய்வு) நாடுகளில் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் நடந்தன. இந்த ஆய்வில் 80,000 புகைப்பிடிப்போர் அல்லது புகைபிடிப்பை விட்ட மக்களிடம் பீட்டா-காரோடீன் அல்லது மருந்துப்போலிகள் சேர்க்கைப்பொருட்களாக அளித்து சோதித்துப்பார்த்தனர். எதிர்பார்ப்பிற்கு எதிராக, இச்சோதனைகளில் பீட்டா-காரோடீன் சோக்கைப்பொருள் நுரையீரல் புற்றுநோய் நிகழ்வு மற்றும் இறப்பியல்பை குறைத்ததாக தெரியவில்லை. உண்மையில், நுரையீரல் புற்றுநோய் உண்டாவதற்கான சூழ் இடர் சற்று குறைந்தாலும் பீட்டா-காரோடீன் இதை சற்று உயர்த்தினாலும், அது மிகையாக குறையவில்லை, அதனால் இந்த ஆய்வு சற்று முன்பாகவே கைவிடப்பட்டது.

ஜெர்னல் ஒப் தி அமெரிக்கன் மெடிகல் அஸ்சோசியேஷன் (JAMA) 2007 ஆம் ஆண்டில் போலிக் அமிலத்தின் சேர்க்கையால் பெருங்குடல் புற்றுநோய் தவிர்க்கப்படுவதில்லை என்றும், மேலும் போலேட் பயன்படுத்தியவர்களுக்கு பெருங்குடல் பவளமொட்டுக்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தங்களது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

கெமொப்ரிவேன்ஷன் (இரசாயன வகை தடுப்புமுறை)

மருந்துகளை உட்கொள்வதால் புற்றுநோயை தடுக்க இயலும் என்ற கருத்துப் படிவம் மனதை கவர்வதாக இருப்பதுடன், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ரசாயனவகை தடுப்புமுறையானது பல உயர்தர மருத்துவ சோதனை ஒத்திகைகளில் பயனுள்ளதாக இருப்பதால் அதற்கான ஆதரவு இருந்து வருகிறது.

தமொக்சிபென் என்ற ஒரு தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி (SERM), தொடர்ச்சியாக தினமும் ஐந்து வருடங்களுக்கு உட்கொண்டால், அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் அதிக சூழ் இடர் கொண்ட பெண்களில் 50% அளவுக்கு குறைவதாக கண்டறிந்துள்ளார்கள். அண்மையில் நடந்த ஒரு ஆய்வில் தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி ரலோக்சிபென் என்ற மருந்தும் தமொக்சிபென் போலவே அதே போன்ற இயல்புகளை கொண்டு, அதிக சூழ் இடர் கொண்ட பெண்களில், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது, மேலும் அது சாதகமான பக்கவிளைவுகள் கொண்டதாகவும் உள்ளது.

ரலோக்சிபென் என்பதும் தமொக்சிபென் போல ஒரு தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி (SERM) ஆகும்; மேலும் அது (STAR ஒத்திகையில் நடந்ததை போலவே) தமொக்சிபென் னுக்கு இணையாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழ் இடரை உயர்ந்த சூழ் இடர் கொண்ட பெண்களில் குறைக்கவல்லதாகும். இந்த ஒத்திகையில், அது ஏறத்தாழ 20,000 மகளிரை சோதனையில் ஈடுபடுத்தியது, ரலோக்சிபென் உட்கொண்டவர்களுக்கு, தமொக்சிபேன் பயன் படுத்தியவர்களை விட குறைவான பக்க விளைவுகள் ஏற்பட்டது, எனினும் அது அதிக அளவில் DCISஐ உற்பத்தி செய்தது.

பிநஸ்டேரைட், அது ஒரு 5-அல்பா-ரிடக்ட்ஸ் இன்கிபிடர் ஆகும், சுக்கிலவகம் புற்று நோய் ஏற்படும் சூழ் இடரை அது குறைப்பதாக கண்டறிந்துள்ளது, ஆனால் அவை மிக்கவாறும் தரம் குறைந்த புற்றுநோய்கள் ஆகும். COX-2 மட்டுப்படுத்திகள் ரோபிகோக்சிப் மற்றும் சேலேகோக்சிப் பயன்பாட்டால் பெருங்குடல் பவளமொட்டுக்கள் பாதிப்பை அறிவதற்கு குடும்பவழி சுரப்பிப்பெருக்க விழுதிய நோயாளிகளையும் பொது மக்களையும் கொண்டு ஒத்திகை நடந்தது. [163][165] இரு குழுக்களிலும்,பெருங்குடல் விழுது நிகழ்வு ஏற்படும் சூழ் இடரில் கணிசமான குறைப்பு இருந்தாலும், ஆனால் அதனால் இதய குழலில் நச்சுப்பண்பு மிகையாக தென்பட்டது.

மரபுக்கரு பரிசோதனை

புற்றுநோய்க்கு அதிக சூழ் இடர் உள்ள தனி மனிதர்களின் மரபுக்கரு பரிசோதனை சில புற்றுநோய் சம்பந்தமுள்ள பிறழ்வுகளுக்கு நிகழக்கூடியவையாகும். மரபுக்கரு பிறழ்வுகளால் பாதிப்படைந்தவர்களுக்கு புற்றுநோய் தாக்கத்தின் சூழ் இடர் அதிகமாக உள்ளதால், அவர்கள் அதிக அளவிலான கடும் கண்காணிப்பு, இரசாயன தடுப்புமுறைகள், அல்லது சூழ் இடரை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற புற்றுநோயை முன்னரே அடையாளம் காட்டும் பரிசோதனைகள், மரபுரிமை சார்ந்தவர்களுக்கு சூழ் இடர் அதிகமாக உள்ளதால், புற்றுநோயை தடுக்கும் அறுவை சிகிச்சை மற்றும் கடும் கண்காணிப்பு போன்ற இடைத்தடைகளுடன் செயல்படுவது உயிரை காக்கவல்லதாக இருக்கும்.

மரபணு புற்றுநோய் வகைகள் கிடைக்கக்கூடிய தன்மை
BRCA1, BRCA2 மார்பக, முட்டையக, கணையம்.

மருத்துவ மாதிரிகளுக்கு வணிகரீதியாக கிடைக்கும்

MLH1, MSH2, MSH6, PMS1, PMS2 பெருங்குடல் , கருப்பைக்குரிய, சின்ன குடல்,

வயிறு, சிறுநீருக்குரிய பாதை

மருத்துவ மாதிரிகளுக்கு வணிகரீதியில் கிடைக்கும்

தடுப்பூசி போடுதல்

நச்சுயிரிகள் போன்ற புற்றுநோய் தோற்று காரணிகளால் தோற்று நோய் வராமல் தடுப்பதற்காக முற்காப்பி தடுப்பூசிகள் கண்டறிந்துள்ளார்கள். மேலும் குறிப்பிட்ட புற்றுநோயைக் குறிவைத்த, எபிடோபுகளுக்கு (வெளிசிறுசுறாக்கள்) (எதிராக செயல்படும் நோய் தடுப்பாற்றல் கொண்ட) மருத்துவ தடுப்பூசிகளை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலே கூறியது போல், மனித பாப்பிலோமா நச்சுயிரி தடுப்பூசி ஒன்று நிகழ்வில் உள்ளது, அது சில பாலியல் சார்புடைய மனித பாப்பிலோமா நச்சுயிரியை குறியாக கொண்டு, அதனால் விளையும் கழுத்துப்பட்டை புற்றுநோய் மற்றும் இன உறுப்பு மருக்கள் போன்றதை தடுப்பதற்கான தடுப்பூசியாகும். ஒக்டோபர் 2007 ஆம் ஆண்டு வரை இரு HPV தடுப்பூசிகளே சந்தையில் கிடைக்கப் பெற்றது, அவை கர்டாசில் மற்றும் செர்வரிக்ஸ் ஆகும். மேலும் ஹெபடிடிஸ் B தடுப்பூசி, அது ஹெபடிடிஸ் B தீநுண்மத்தினால் ஏற்படும் தொற்றை தடுக்கிறது, அந்த தொற்று நோய்பரப்பி மூலம் கல்லீரல் புற்றுநோய் வரலாம். ஒரு விலங்கின மெலனோமா (கருங்கட்டி; கறும்புத்து) தடுப்பூசியைக் கூட மேம்படுத்தியுள்ளார்கள்.

திரையிடல்

புற்றுநோய் திரையிடல் என்பது ஒரு அறிகுறியில்லா மக்கள்தொகையில் இருப்பவர்களிடையே எதிபாராத புற்றுநோய் தாக்கலை முன்னரே கண்டுபிடித்து அறிந்து கொள்ளும் முயற்சியே ஆகும். பெரிய எண்ணிக்கையில் உடல் நலன் கொண்ட மக்களை திரையிடல் சோதனைக்கு ஆளாக்குவது என்பது செலவுகள் குறைந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், உடலில் துளைக்கும் நுட்பம் அல்லாத மற்றும் பாதிப்பு விளையும் தன்மை இல்லாததாகவும் மேலும் அதன் விளைவாக தவறுதலான நோய்பாதிப்பை குறிக்கும் விளைவுகள் குறைந்த விகிதம் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், அப்போது உறுதி செய்யும் வகையிலான மற்றும் உடலை துளைக்கும் நுட்பம் கொண்ட சோதனைகளை மேற்கொண்டு மருத்துவ அறுதியிடலை உறுதி செய்யவேண்டும்.

புற்றுநோய்க்கான திரையிடல் மூலம் சில தனிப்பட்ட நிகழ்வுகளில் முன்னரேயே அறுதியிடல் சாத்தியமாகிறது. முன்னரேயே அறுதியிடல் ஆனால், அதனால் நீண்ட வாழ்க்கை வாழ வழி வகுக்கும், ஆனால் அதுவே இறப்பிற்கு இட்டுச்செல்லும் நேரத்தை தவறுதலாக நீடிக்க, அதாவது இட்டுச்செல்லும் நேர ஒருபுறச்சாய்வு அல்லது நீட்ட நேர ஒருபுறச்சாய்வு, மூலம் வழி வகுக்கும்.

பல விதமான வேறுபட்ட திரையிடல் சோதனை முறைகள் வெவ்வேறு புற்றுப்பண்புகளை சோதித்து அறிவதற்கு மேம்படுத்தப் பட்டுள்ளன.மார்பக புற்றுநோய் திரையிடல் மார்பக தன்-சோதனை (தன் உடலை தானே சோதித்துக் கொள்வது) மூலம் செய்யலாம், ஆனால் சைனாவில் 300000 பெண்கள் பங்கு கொண்ட 2005 ஆம் ஆண்டில் நடந்த சோதனையில் இந்த முறை தவறானது என்று மதிப்புக்குலைவு ஏற்பட்டது. முலை ஊடுகதிர்ப்படம் சோதனைகள் மூலமாக மார்பக புற்றுநோய் அறிகுறியை திரையிடுதல் ஒரு மக்கள் தொகையின் சராசரி அறியுறுதல் நிலையை குறைப்பதாக கண்டுள்ளது. முலை ஊடுகதிர்ப்படம் சோதனை முறைகளை அறிமுகபடுத்திய பத்து ஆண்டுகளுக்குள், ஒரு நாட்டின் அறுதியிடல் நிலையானது குறைவதை கண்டுள்ளனர். பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்றுநோய் மல மறைவான இரத்த சோதனை மற்றும் பெருங்குடல் அகநோக்கல் மூலம் ஆய்ந்து காணலாம், இதனால் பெருங்குடல் புற்றுநோய் நிகழ்வு மற்றும் இறப்பு குறைந்து காணப் படுகிறது, அதை முன்னதாகவே அறுதியிட்டதாலும் மற்றும் முன்-புற்றுப்பண்பு (உயிரணுக்களில் புற்றுநம் பரவுவதற்கு முன்) பவளமொட்டுக்கள் அகற்றப் பட்டதாலும் அது நிகழ்ந்திருக்கலாம். அதேபோல், கழுத்துப்பட்டை உயிரணுவியல் சோதனை காரணம் (போப் ஸ்மியர்பயன்பாடு மூலம்) நோயை அடையாளம் கண்டு புற்றுப்பண்பு அடையும் கலன்கள் குறைவாக இருக்கும் நிலையிலேயே அகற்றப்படுகிறது. காலப்போக்கில், இது போன்ற சோதனைகளால் கழுத்துப் பட்டை புற்றுநோய் நிகழ்வுகள் மற்றும் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. விரைச்சிரை புற்றுநோய்கண்டறிதலுக்கு 15 வயது முதல் ஆண்கள் விரைச்சிரை தன் சோதனைமூலம் தன்னையே சோதித்துப்பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுக்கிலவகம் புற்றுநோய் திரையிடலுக்கு ஒரு டிஜிட்டல் மலக்குடல் சோதனை கருவியுடன் சுக்கிலவக தனிப்பட்ட எதிர்ச்செனியை பயன்படுத்தி, (PSA) இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், சில அதிகாரப்பட்டயங்கள் (US ப்ரிவெண்டிவ் செர்விசெஸ் டாஸ்க் போர்ஸ் (போன்ற)) எல்லா மனிதர்களிடமும் வழக்கமாக திரையிடுதலை அனுமதிப்பதில்லை.

சோதனைகளால் உயிர்கள் காக்கப்படலாம் என்பதில் சந்தேகம் இருக்கும் நிகழ்வுகளில், புற்று நோய்க்கான திரையிடல் சர்ச்சைக்குரியதே. திரையிடுவதன் மூலம் ஏற்படும் ஆதாயங்கள் பின்னர் ஏற்படக்கூடிய அறியிடுதல் சோதனை மற்றும் புற்று நோய்க்கான சிகிச்சை மேற்கொள்வதற்கான சூழ் இடரை விட அதிகமாக இருப்பதற்கான தெளிவு சரியாக அமையாத போது, இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. எடுத்துக் காட்டு:சுக்கிலவகம் புற்றுநோய்க்கான திரையிடல் மேற்கொள்ளும் போது, PSA சோதனையில் சிறிய புற்றுநோய் காரணிகள் தென்படலாம், அவை உயிருக்கு பாதகம் விளைவிக்காமல் இருக்கலாம், ஆனால் அவற்றை கண்டுபிடித்ததால் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும். இந்த நிலைமை, அதாவது ஓவர்டையக்நோசிஸ் (மிகையான அறுதியிடல்), மனிதனை தேவையில்லாத சிகிச்சைகளுக்கான சூழ் இடரை ஏற்படுத்துகிறது, அதாவது அறுவை சிகிச்சை மற்றும் கதிர் இயக்கம். பின்தொடர் விளைவுகளான சுக்கிலவகம் புற்றுநோய் அறுதியிடலுக்கு (சுக்கிலவகம் உடல் திசு ஆய்வு) மேற்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படலாம், அதில் இரத்தக் கசிவு மற்றும் நோய் தொற்று அடங்கும். சுக்கிலவகம் புற்றுநோய் சிகிச்சை முறையால் அடக்கமற்ற மலமொழுக்கு (மலம் கழிப்பதை கட்டுப்படுத்த இயலாமை) மற்றும் விறைக்கும் செயல் பிறழ்ச்சி (புணற்சி விரத்தல் இயலாமை) ஏற்படலாம். அதேபோல, மார்பக புற்றுநோய், அண்மையில் மார்பக திரையிடல் நிகழ்வுகளுக்கு ஏகப்பட்ட மதிப்பீடுகள் வந்தன, சி்ல நாடுகள் திரையிடுவதால் தீரும் பிரச்சினைகளை விட உருவாகும் பிரச்சினைகள் மிகைப்படுவதாக அவர்கள் காண்கிறார்கள். இது ஏன் என்றால் பொது மக்களில் இருந்து பெண்களை திரையிடுவதற்கு அதிக எண்ணிக்கையில் தவறான விடைகளை அளிக்கும் சாத்தியக்கூறினால் பின்தொடரும் நீண்ட நாட்கள் கொண்ட சோதனைகளை மேற்கொள்தலும், அதனால் அதிக அளவில் சோதனை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது, ஒரே ஒரு மார்பக புற்றுநோய் நிகழ்வினை முன்னரே அறிந்து கொள்வதற்காக.

மக்கள் உடல் நலனை கருத்தில்கொண்டு பார்த்தால், போப் ஸ்மியர் முறையில் கழுத்துப்பட்டை புற்றுநோய் திரையிடல் செயலாக்கம் மிகவும் நல்ல சிலவு-ஆதாயம் பாகுபாட்டை தருகிறது, மற்ற அனைத்து வகையிலான புற்றுநோய் திரையிடல்களை விட, ஏன் என்றால், அது மிக்கவாறும் தீநுண்மம் காரணம் உருவாகிறது, அதன் சூழ் இடர் காரணிகள் தெளிவானவை ஆகும் (பாலியல் தொடர்பு), மற்றும் கழுத்துப்பட்டை புற்றுநோயின் இயற்கையான வளர்ச்சி அது பொதுவாக மிகவும் மெதுவாக பல ஆண்டுகளுக்கு பிறகு பரவுகிறது அதனால் திரையிடல் திட்டம் மூலம் அதை முன்னராகவே அறிந்து கொள்ளலாம். அதோடல்லாமல், இந்த சோதனையை எளிதாக செயலாக்க இயலும் மற்றும் ஒப்பிட்டு பார்க்கையில் மலிவானதாகவும் இருக்கிறது.

இக்காரணங்களால், ஆதாயங்கள் மற்றும் அறுதியிட்டு கூறுதலுக்கான சூழ் இடர்கள் மற்றும் சிகிச்சை அளித்தல் போன்றவைகளை முக்கியமாக கணக்கில் எடுத்துக்கொண்டு புற்றுநோய் திரையிடல் செய்வதற்கான முடிவை எடுக்க வேண்டும்.

இதைப்போலவே மருத்துவ இயல்நிலை வரைவு பயன்பாடு, மக்களில் புற்றுநோய் நிகழ்வதை தெரிந்து கொள்வதற்காக, தெளிவான அறிகுறிகள் இல்லாமல் மேற்கொள்வது என்பதும் சர்ச்சைக்குரியதே. இன்சிதேண்டலோமா என்ற தீங்கற்ற நசிவை கண்டுபிடிப்பதற்கு மிக அதிக சூழ் இடர் இருப்பது தெளிவாகியது, அது பரவும் புற்றுப்பண்பு கொண்ட நோய் என்று பொருள் விளக்கம் செய்துகொண்டு பின்னர் அபாயகரமான விளைவுகள் கொண்ட சோதனைகளை மேற்கொள்ளும் கட்டாயம் ஏற்படும். CT ஸ்கேன் ஆதாரமாக கொண்டுள்ள அண்மையில் நடந்த புகையிலை புகை பிடிப்போர்களிடம் நுரையீரல் புற்று நோய் திரையிடல் ஆய்வின் முடிவில், முடிவுகள் சமநிலையாக இருந்தன மேலும் முறையான திரையிடலுக்கான அறிவுரை, ஜூலை 2007 ஆம் ஆண்டில், பரிந்துரை செய்யவில்லை. புகை பிடிப்போரின் எளிய திரை நுரையீரல் X-ரேக்களை கொண்டு நுரையீரல் புற்றுநோய் ஆய்வுகள் சமவாய்ப்புள்ள மருத்துவ சோதனை ஒத்திகைகள் முறையில் நடத்திப்பார்த்ததில் இந்த அணுகுமுறையால் ஒரு பயனும் காணவில்லை.

நாய்களில் புற்றுநோய் கண்டுபிடிப்புகளால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் அவை ஆராய்ச்சியின் முதல் கட்ட நிலையில் தான் இருக்கிறது.

நோய் நிர்ணயம்

மிக்க வகையான புற்றுநோய்களையும் முதலில் அதன் தோற்றங்கள் மற்றும் அறிகுறிகளை வைத்தோ அல்லது திரையிடல் மூலமாகவோ கண்டறியலாம். இவ்விரு வழிகளும் ஒரு நோயை அறுதியிட்டுக்கூற இயலாது, அதற்கு ஒரு நோயியல் மருத்துவரின் (பாதொலோஜிச்ட்டின்) உதவி தேவைப்படுகிறது, அவர் ஒரு புற்றுநோய் மற்றும் இதர நோய்களை அறுதியிடும் மருத்துவராவார்.

பரிசோதனை

புற்றுநோய் 
நெஞ்சின் x-ரே நுரையீரல் புற்று நோய் இடது புற நுரையீரலில்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகம் கொண்டவர்களை மருத்துவ சோதனைகள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றனர். இவை பொதுவாக இரத்தப் பரிசோதனைகள், X-ரேக்கள் (கதிர்கள்), CT ஸ்கேன்ஸ் (வருடிகள்) மற்றும் உடற்குழாய் உள்நோக்கல் போன்றவையாகும்.

உடல் திசு ஆய்வு

பல காரணங்களுக்காக புற்றுநோய் இருப்பதாக சந்தேகித்தாலும், புற்றுநத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு புற்றுநோய் கலன்களை நோயியல் மருத்துவரின் திசுவியல் பரிசோதனைக்கு பிறகே புற்றுநோய் இருப்பதாக உறுதியாக கூறமுடியும். திசுவை உடல் திசு ஆய்வு (பைஆப்ஸி) அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் பெறலாம். பலவகையான உடல் திசு ஆய்வுகள் (சருமம், மார்பகம் அல்லது குடல் போன்றவை) மருத்துவரின் அலுவலகத்தில் செய்யலாம். உறுப்புகளின் திசு ஆய்வை உணர்வகற்றலுக்கு பிறகு அறுவையரங்கில் அறுவை சிகிச்சை மூலம் பயனடையலாம்.

நோயியல் மருத்துவர் அளிக்கும் திசு ஆய்வு அறியிடுதல் அறிக்கையில் இனப்பெருக்கம் அடையும் கலனின் வகை மற்றும் அது பரவும் விதம், அதன் திசுவியல் தரம், சார்ந்த மரபணு இயல்பு மாற்றங்கள், மற்றும் கட்டியின் இதர அம்சங்கள் அனைத்தும் அடங்கும். ஒன்றுசேர்ந்து, இந்த தகவல் நோயாளியை முன்கணிப்பு செய்வதற்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வுசெய்யவும் பயன்படுகிறது. உயிரணு மரபியல் மற்றும் இம்முனோஹி்ஸ்டோகெமிஸ்ட்ரி போன்ற இதரவகை (தடுப்பாற்றதிசுவேதியியல்) சோதனைகளை நோயியல் மருத்துவர் திசு மாதிரியில் மேற்கொள்வார். இச்சோதனைகளின் மூலம் புற்றுநோய் கலன்களில் ஏற்பட்டுள்ள மூலக்கூற்று மாற்றங்களையும் (பிறழ்வுகள், கலந்திணைப்பு மரபணு, மற்றும் எண்ணுக்குரிய நிறமி மாறுதல்கள் போன்றவை), மேலும் அதன் எதிர்கால நடத்தை (முன்கணிப்பு) மற்றும் அதற்கான சிறந்த சிகிச்சை முறை ஆகியவை பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

சிகிச்சை

புற்றுநோயை அறுவை சிகிச்சை, கெமொதெராபி (வேதிச்சிகிச்சை), ரேடியேஷன் தெரபி (கதிர் இயக்க சிகிச்சை), தடுப்பாற்றடக்கு மருத்துவம், ஒரு செல் நோய் எதிரணு மருத்துவம் அல்லது இதர முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். புற்றுநோய் பாத்தித்த இடம், கட்டியின் தர வரிசை, புற்றுநோயின் நிலை, மற்றும் நோயாளியின் பொதுவான (செயல்திறன் நிலைமை) நிலை ஆகியவற்றை அறிந்துகொண்ட பின்னரே சிகிச்சை முறையை தேர்வுசெய்யலாம். பல சோதனை புற்றுநோய் சிகிச்சை முறைகள் மேம்பாடு அடைந்துள்ளன.

ஆய்வகத்தில் புற்றுநோய்க்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு

ஐக்கிய அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரத்தில் செயல்படும் நினைவு ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மைய ஆய்வகத்தின் சோதனையில் புற்று நோயாளிகளின் 100% புற்றுநோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையானது அளவில் சிறியதாக இருந்தாலும், நீண்ட மற்றும் வலிமிகுந்த கீமோதெரபி அல்லது அறுவை சிகிச்சைகள் இல்லாமல் புற்றுநோயை முழுமையாக அகற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் மையம் நடத்திய சிறிய மருத்துவ பரிசோதனையில், 18 புற்று நோயாளிகள் சுமார் ஆறு மாதங்களுக்கு டோஸ்டார்லிமாப் (Dostarlimab) என்ற மருந்தை உட்கொண்டனர். ஆறு மாத இறுதியில் உடலில் புற்றுக் கட்டிகள் முழுமையாக மறைவதை சோதனையில் கண்டனர்.

முன் கணிப்பு

புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாக பெயர் பெற்றது. இது சில தனிப்பட்ட வகைகளுக்கு ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், புற்றுநோயின் பின்னணியில் உள்ள உண்மை நிலைமைகளை அறிந்து செயல்படுவதால், மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் வரலாற்றுப பண்புகளை தலை கீழாக மாற்றி வருகின்றன. சில புற்றுநோய்களை (ப்ரோக்நோசிஸ்) முன்கணிப்பு செய்ய இயலும் என்பதால், சில புற்றுப்பண்பில்லாத இதயத்திறனிழப்பு மற்றும் தாக்கம்போன்ற நோய்களை விட இந்நிலை கணிசமாக மேம்பட்டதாகும்.

நாளுக்கு நாள் முன்நோக்கி செல்லும் மற்றும் பரவிய புற்றுப்பண்பு நோயால் புற்றுநோயாளியின் வாழ்க்கைத்தரம் பாதிப்படைகிறது, மேலும் பல புற்றுநோய் சிகிச்சை முறைகள் (எடுத்துக்காட்டு கெமொதெராபி (வேதிச்சிகிச்சை)) போன்றவை மிகையான பக்க விளைவுகள் கொண்டதாகும். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், பல நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை தேவைப்படுகிறது, அது அவர்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் பாதிக்கிறது. நோய்குறி நீக்கல் கவனிப்பு தீர்வுகளில் நிரந்தரமான அல்லது "ஓய்வுக்கான" சிகிச்சையகத்தில் சேர்த்தல் மற்றும் பேணுதல் அடங்கும்.

உணர்ச்சிவசவகை தாக்கவிளைவுகள்

பல உள்ளூர் நிறுவனங்கள் பலவகை நடைமுறையிலான, ஆதரவுடன் கூடிய சேவைகளை புற்றுநோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர். ஆதரவானது துணை குழுக்கள், கருத்துரை வழங்கல், ஆலோசனை, நிதியுதவி, சிகிச்சை செய்வதற்கு சென்று வருவதற்கான வாகனவசதிகள், மற்றும் புற்றுநோயைப் பற்றிய தகவல்களை அல்லது படங்களை பகிர்தல். அக்கம்பக்கத்து நிறுவனங்கள், உள்ளூர் உடல்நல பொது பணியாளர்கள், அல்லது வட்டார ஆசுபத்திரிகளில் இதற்கான வளவசதி மற்றும் சேவைகளை அளிக்கலாம்.

கருத்துரை வழங்குதல் மூலம் புற்று நோயாளிகளுக்கு உணர்ச்சிவசவகை ஆதரவு அளித்து, அவர்கள் நோயைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள வழிவகுக்கலாம். பலவகை கருத்துரை வழங்குதலில், தனிப்பட்ட, குழு சார்ந்த, குடும்ப, பெரியவர்கள் போதனை, இழப்பு, நோயாளியுடன்-நோயாளி மற்றும் பாலுறவுக்குற்றம் போன்றவை அடங்கலாம்.

புற்றுநோயாளிகளின் வேதனையை அறிந்து அவர்களுக்கு சேவை புரிவதற்காக பல அரசாங்க மற்றும் அறநல நிறுவனங்கள் நிறுவியுள்ளார்கள். இந்நிறுவனங்கள் அடிக்கடி புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

புறப்பரவியல்

அமெரிக்காவில் நிகழும் 25% இறப்புக்கு புற்றுநோயே காரணமாகும்; மற்றும் உலகத்தின் பலபாகங்களிலும் புற்றுநோய் ஒரு பெரிய பொது சுகாதாரப்பிரச்சினை ஆகும். அமெரிக்காவில், புற்றுநோயால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 30% பங்கு நுரையீரல் புற்றுநோய் காரணம் இறந்தவராகும், ஆனால் அது புதிய புற்றுநோய் நிகழ்வுகளின் சுமார் 15% பங்கு வகிக்கிறது; ஆண்களில் பொதுவாக மிகையாக காணப்படுவது சுக்கிலவக புற்றுநோய் ஆகும் (சுமார் 25% புதியநிகழ்வுகள்) மற்றும் பெண்களில் மார்பக புற்றுநோய் (அதுவும் சுமார் 25%). புற்றுநோய் சிறுவர்களிலும் மற்றும் இளம் வயதினருக்கும் வரலாம், ஆனால் அது அரிதாகும் (அமெரிக்காவில் சுமார் 150 நிகழ்வுகள் ஒரு மில்லியணுக்கு), இதில் பொதுவாக காணப்படுவது லுகேமியா (இரத்தப்புற்று) நோயாகும். அமெரிக்காவில், வாழ்க்கையின் முதல் ஆண்டில் இதன் நிகழ்வு சுமார் 230 நிகழ்வுகள் ஒரு மில்லியனுக்கு, அதில் மிகவும் பொதுவானது நரம்புமூலச்செல்புற்று ஆகும்.

உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் காரணமான இறப்பு, மாற்றக்கூடிய சாத்தியமுள்ள சூழ் இடர்கள் கொண்டவையாகும், அவற்றில் முதலில் வருவன புகையிலை புகைபிடித்தல், மது அருந்துதல், மேலும் உட்கொள்ளும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள்குறைவாக இருத்தல். முன்னேற்றமடைந்த நாடுகளில் எடைகூடுதல் மற்றும் உடல் பருமன் போன்றவையும் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன, மேலும் குறைந்த-மற்றும்-நடுத்தர வருமானம் கிடைக்கப்பெறும் நாடுகளில் பாலியல் செலுத்தல் காரணமான மனித பாப்பிலோமா நச்சுயிரிமூலம் கழுத்துப்பட்டை புற்றுநோய்க்கு மிகையான சூழ் இடருள்ளதாகும்.

வரலாறு

இன்று, கார்சினோமா (புற்றுநோய்)என்று வழங்கும் மருத்துவச்சொல், எபிதேலியல் (தோல் மேல்புறத்து) உயிரணுக்களில் தோன்றும் புற்றுப்பண்புகொண்ட கட்டியை குறிக்கும் கார்சினோமா என்ற கிரேக்கச்சொல்லில் இருந்து பெற்றதாகும். செல்சஸ் என்பவர் கார்சிநோஸ் என்ற சொல்லை லத்தீன் மொழியில் கான்செர் என்று மொழிபெயர்த்தார், அதன் பொருளும் நண்டு ஆகும். காலேன் என்பவர் "ஆன்கோஸ் " என்ற சொல்லை, அனைத்து வகையான கட்டிகளையும் விளக்க பயன்படுத்தினார், நவீனச்சொல்லான ஆன்கோலோஜி (புத்தாக்கவியல்) யின் மூலம் அதுவேயாகும்.

ஹிப்போக்ரேடஸ் பலவகையான புற்றுநோய்களுக்கு விளக்கம் தந்துள்ளார். அவர் தீங்கற்ற கட்டிகளை ஆன்கோஸ் என்று அழைத்தார், கிரேக்க மொழியில் வீக்கம், மற்றும் மாலிக்னன்ட் ட்யுமர்களை (புற்றுப்பண்பு கொண்ட கட்டி) கார்சிநோஸ், கிரேக்க மொழியில் நண்டு அல்லது க்ரேபிஷ் என்று பொருள்படும். ஒரு திடமான புற்றுப்பண்பு கொண்ட கட்டியை வெட்டியெடுத்து அதன் மேல்புறம் பார்க்கையில் கிடைக்கும் தோற்றத்தின் அடிப்படையில், "நண்டு என்ற விலங்கின் கால்களைப்போல அதன் நரம்புகள் எல்லா பக்கங்களிலும் நீட்டி இருந்ததால், அதிலிருந்து இந்தப்பெயர் நிலைத்தது."(படம் பார்க்க). அவர் பிறகு பின் ஒட்டு சொல்லான -ஒமாவை, கிரேக்க மொழியில் வீக்கம், சேர்த்தார், அப்படி அந்தப்பெயர் கார்சினோமா (புற்றுநோய்) என்று மறுவியது. உடலைத்திறந்து காட்டுவது என்பது கிரேக்கப்பண்பாட்டிற்கு எதிராக இருந்தமையால், ஹிப்போக்ரேடஸ் அவற்றை விளக்குவதோடு நிறுத்திக்கொண்டார் மற்றும் வெளியே பார்க்ககூடிய சருமம், மூக்கு, மற்றும் மார்பக கட்டிகளின் படங்களை வரைந்தார். நகைச்சுவை கோட்பாட்டின் அடிப்படையில், நான்கு உடலை சார்ந்த திரவங்கள் (கருப்பு மற்றும் மஞ்சள் பித்த நீர், இரத்தம், மற்றும் கபம்) போன்றவற்றை கணக்கில்கொண்டு சிகிச்சை அளித்தார்கள்.. நோயாளியின் நகைச்சுவை நிலையினைப்பொறுத்து, பத்தியம், இரத்த வெளியேற்றம், மற்றும்/அல்லது மலமிளக்கி மருந்துகளைக்கொண்டு சிகிச்சையளித்தார்கள். நூற்றாண்டுகளில் புற்றுநோய் உடலில் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்று கண்டுபிடித்தார்கள், ஆனால் 19 ஆம் நூற்றாண்டு வரை நகைச்சுவை கோட்பாடு அடிப்படையிலான சிக்ச்சை பிரபலமாக நிலுவையில் நீடித்துவந்தது உயிரணுக்களை கண்டறியும் வரை.

புற்றுநோய்க்கான மிகவும் புராதனமான விளக்கம் மற்றும் அறுவை சிகிச்சை எகிப்த்திய நாட்டில் கண்டறிந்தார்கள். அது சுமார் 1600 கி.மு.நடந்ததாக தெரிகிறது. பாபிரஸ் 8 மார்பகப்புண் நிகழ்வுகளை, தீய்த்தல் சிகிச்சை மூலமாக, "நெருப்புத்துளை" என்ற கருவியைக்கொண்டு நிகழ்த்தியதாக விவரித்துள்ளது. "இந்த நோயைப்பற்றி எழுதுகையில், "இதற்கு ஒரு சிகிச்சையும் கிடையாது" என்றுரைத்துள்ளது.

மேலும் மிக முன்னதான புற்றுநோய்க்கான அறுவை சிக்ச்சை 1020 ஆம் ஆண்டுகளில் ஆவிசென்னா (இப்ன் சின) என்பவர் தி காணன் ஆப் மெடிசினில் விவரித்துள்ளார். அவர் அரிதல் சமத்தொடுகோட்டுக்குரியதாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து நோயுற்ற திசு பாகங்களும் அகற்றப்படவேண்டும் என்று் கூறினார், அவற்றில் உறுப்பு நீக்கம்அல்லது கட்டியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நரம்புகளையும் நீக்க வேண்டும் என்றார். தேவைப்பட்டால் பாதிப்படைந்த பாகங்களை தீய்த்து விடலாம் என்றும் பரிந்துரைத்தார்.

16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில், இறப்பின் காரணத்தை அறிவதற்காக, உடல்களை வெட்டிச்சோதித்தலை ஏற்றுக்கொள்ள மருத்துவர்கள் முன்வந்தனர். ஜெர்மன் பேராசிரியரான வில்ஹெல்ம் பாப்ரி மார்பக புற்றுநோய் முலையின் நாளங்களில் பால் உறைவதால் ஏற்படுகிறது என்று நம்பினார். டச்சு பேராசிரியரான பிரான்கோஸ் தே ல போ சில்வியஸ், டெகார்டேயின் சீடர், அனைத்து நோய்களும் ரசாயன செயல்முறைகளின் விளைவுகளால் ஏற்படுவதாகவும், மேலும் அமிலத்தன்மை கொண்ட நிணநீர் திரவம் தான் புற்றுநோய்க்கு காரணம் என்று நம்பினார். அவருடன் வாழ்ந்தவரான நிகோலஸ் துள்ப் புற்றுநோய் மெதுவாக பரவும் ஒரு விஷம் என்று நம்பினார், மற்றும் அது ஒரு படரும் வியாதியாகும் என்று முடிவெடுத்தார்.

பர்சிவல் பாட் என்ற, பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணரால் புற்றுநோயின் முதல் காரணம் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது, அவர் 1775 ஆம் ஆண்டில் விதைப்பையில் ஏற்படும் புற்றுநோய் புகைபோக்கி பெருக்குபவர்களை பொதுவாக பாதித்தது என்பதை கண்டறிந்தார். இதர தனி மருத்துவர்களின் பணிகள் பல உண்மை உளநிலை தெளிவுகளை ஏற்படுத்தியது, ஆனால் மருத்துவர்கள் இணைந்து செயல்படத்தொடங்கிய போது அவர்களால் இன்னும் உறுதியான முடிவுகளை எடுக்கமுடிந்தது.

18 ஆம் நூற்றாண்டில் உருபெருக்கி மிகவும் பரவலாக பயன்பட்டது, 'கான்செர் விஷம்' (புற்றுநோய் நச்சு) தொடக்கநிலை கட்டியிலிருந்து நிணநீர் நாளங்கள் வழியாக மற்ற இடங்களுக்கு பரவுவதாக கண்டுபிடித்தனர். ("மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்)"). மெடாச்டாசிஸ் 1871 மற்றும் 1874 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, ஆங்கில அறுவை சிகிச்சை நிபுண மருத்துவரான காம்ப்பெல் தே மோர்கன் புற்றுநோயை பற்றிய இந்த கருத்தை வகைப்படுத்தி முதலில் கூறினார்: அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தது சுகாதார குறைபாடுகளினால் குறைவான விளைவுகளை ஏற்படுத்தியது. பெயர்பெற்ற ஸ்காட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணரான அலெக்சாண்டர் மொன்றோ 60 மார்பக புற்று நோயாளிகளிலிருவர் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு உயிர் பிழைத்ததாக கண்டார். 19 ஆவது நூற்றாண்டில், சீழ்த்தவிர்ப்பு அறுவை சிகிச்சையின் சுகாதாரத்தை மேம்படுத்தியது மேலும் உயிர்பிழைத்தலுக்கான புள்ளிவிபரம் மேல்நோக்கி சென்றது, அறுவை சிகிச்சை மூலமாக கட்டியை நீக்குவது புற்றுநோய்க்கு முதன்மையான சிகிச்சைமுறையாக ஆனது. 1800 ஆம் ஆண்டின் இறுதியில், வில்லியம் கோலியை தவிர, அவர் சீழ்த்தவிர்ப்பு முறைக்கு முன்னர் நடந்த அறுவை சிகிச்சைகளில் குணப்படுத்தும் விகிதம் அதிகமாக இருந்ததாக உணர்ந்தார் (மேலும் அவர் நுண்ணுயிர்களை ஊசி மூலம் கட்டிகளில் செலுத்தி கலந்த முடிவுகளை பெற்றார்), புற்றுநோய் சிகிச்சை ஒரு தனி கலையாக, அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டியை நீக்கும் கைவண்ணத்தை பொறுத்து இருந்தது. அதே நேரத்தில், உடலானது பல திசுக்களை கொண்டது மற்றும், அவை தன் சுற்றில் ஆயிரக்கணக்கான உயிரணுக்களால் உருவானவை என்ற எண்ணம், உடலில் உள்ள ரசாயன சமசீரின்மைபோன்ற கருத்துக்கள் கொண்ட நகைச்சுவை கோட்பாடுகள் மறைவதற்கு காரணமாக திகழ்ந்தன. உயிரணு நோய்க்குறியியலின் காலம் பிறந்து விட்டது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்,மேரி குரீ மற்றும் பிஏர் குரீ கதிர் இயக்கத்தை கண்டுபிடித்த போது, அவர்கள் தட்டுத்தடுமாறி முதன் முதலான அறுவை-அல்லாத புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் முறையை இடறித்தடுமாறி வழிவகுத்தார்கள். கதிர் இயக்கத்துடன் இணைந்து முதல் முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கு பன்முக அணுகுமுறை அமலானது. அறுவை சிகிச்சை நிபுண மருத்துவர் மேலும் தனியாக செயல் படவில்லை, ஆனால் மருத்துவமனையின் கதிரியக்க நிபுணர்களு்டன் நோயாளிகளை உதவுவதற்கு சேர்ந்து பணிசெய்ய தொடங்கினார்.

இதனால் கருத்துப்பரிமாற்றத்தில் பல சிக்கல்கள் தோன்றின, மேலும் அதனால் நோயாளியை வீட்டிற்கு பதிலாக ஆசுபத்திரியில் சிக்கிச்சையளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் அத்துடன் சேர்ந்து நோயாளியின் தரவு மருத்துவமனை கோப்புகளில் சேகரித்தார்கள், அதன் மூலமாக முதல் முறையாக நோயாளிகளின் புள்ளி விவர ஆய்வுகள் மேற்கொண்டார்கள்.

ஜானெட் லேன்-க்லைபன்புற்றுநோய் புறப்பரவியல் பற்றிய தன் பணிகளை, ஒரு நிறுவும் கட்டுரையானது, அவர் 1926 ஆம் ஆண்டில் 500 மார்பக புற்றுநோயாளிகள் மற்றும் 500 கட்டுப் படுத்திய நோயாளிகளை, அவர்கள் ஒரே மாதிரியான பின்னணி மற்றும் வாழ்வு முறை கொண்டவர்கள், ஒப்பிட்டு பிரித்தானிய சுகாதார அமைச்சகத்திற்காக ஒரு கட்டுரையை வெளியிட்டார். அவர் புற்றுநோய் புறப்பரவியலில் புரிந்த பணிகளை மேலும் ரிச்சர்டு டால் மற்றும் ஆஸ்டின் பிராட்போர்டு ஹில் தொடர்ந்தார்கள், அவர்கள் "புகைபிடிப்பதை சம்பந்தப்படுத்தும் நுரையீரல் புற்று நோய் மற்றும் இறப்பிற்கான இதர காரணங்கள்" என்ற கட்டுரையை வெளியிட்டார்கள். இதை தொடர்ந்து மொர்டாலிடி ஒப் பிரித்தானிய டாக்டர்ஸ்" என்ற இரண்டாம் அறிக்கை 1956 ஆம் ஆண்டில் பின்தொடர்நதது. (இல்லை எனில் பிரித்தானிய டாக்டர்ஸ் ஸ்டடி என்று அறியப் படுவது). ரிச்சர்டு டால் லண்டன் மெடிகல் ரிசெர்ச் சென்டரை (எம் ஆர் சி) யை விட்டு, தி ஒக்ச்போர்ட் யூனிட் போர் கான்செர் எபிடிமியோலோஜியை 1968 ஆம் ஆண்டில் தொடங்கினார். கணினிகளை பயன் படுத்தி, இந்த யூனிட் (அலகு) முதன் முறையாக அதிக அளவிலான புற்றுநோயைப்பற்றிய தரவுகளை தொகுத்தளித்து. நவீன நோய் விபரவியல் முறைகள் மற்றும் தற்போதைய நோயைப்பற்றிய கருத்துப்படிவம் மற்றும் பொது நல கொள்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வருகிறது. கடந்த 50 வருடங்களாக, அவர்கள் மருத்துவ பழக்கவழக்கம், மருத்துவமனை, மாநிலத்திற்குரிய, நாடு, மற்றும் நாட்டின் எல்லைகளையும் மீறி, அதன் வழியாக ஒன்றில்லொன்றின் சார்புள்ளமை காரணம் சுற்று சூழல் மற்றும் பண்பாட்டு காரணிகள் எவ்வாறு புற்றுநோய் நிகழ்வு ஏற்படுவதை பாதிக்கின்றது என்பதை அறிவதற்காக மிகவும் பாடுபட்டு தரவுகளை சேகரித்து உள்ளனர்.

இரண்டாம் உலக யுத்தம் வரை, புற்றுநோயாளிகளின் சிகிச்சை மற்றும் ஆய்வுகள், தனி மருத்துவரின் வழக்கங்களை பொறுத்து எல்லைக்குட்பட்டதாக இருந்தது, அப்போது மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அனைத்துலக நாடுகளுக்கிடையே புற்றுநோய் நிகழ்வில் வேறுபாடுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த உண்மையான உளநிலை, தேசீய பொது நல அமைப்புகளை சுகாதாரம் பற்றிய தரவுகளை தொகுப்பதற்கு, ஒரு இடத்தில் இருந்து அதன் கடைசி வரையிலான, அனைத்து வழக்கங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் சாத்தியமாக, வழிவகுத்தது, இந்த செயல்பாட்டை பலநாடுகளும் இன்று கடைபிடித்து வருகின்றனர். ஜப்பானிய மருத்துவர்கள் ஹிரோஷிமாவில் மற்றும் நாகசாகியில் நடந்த அணுகுண்டு வெடி சிதறலில் இறந்தவர்களின் எலும்புச்சோறு முற்றிலும் அழிந்து விட்டதாக கண்டார்கள். அதை வைத்துக்கொண்டு நோயுற்ற எலும்புச்சோறைக் கூட கதிர் இயக்கத்தால் அழிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர், மற்றும் இது லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) சிகிச்சைக்காக எலும்புச்சோறு திசுப்பொருத்தல் அறுவை சிகிச்சை முறை கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. உலக யுத்தம் II கழிந்த பின், புற்றுநோய் சிகிச்சை போக்கானது, மிக நுண்ணிய அளவில் நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது, அவற்றை தரப்படுத்துதல், மற்றும் உலகமயமாக்கிய புறப்பரவியல் மற்றும் அனைத்துலக கூட்டாண்மை வழியாக மருத்துவமுறைகளை கண்டுபிடித்து குணமடைய செய்தல் ஆகும்.

ஆராய்ச்சி வழிகாட்டுதல்

புற்றுநோய் ஆராய்ச்சி என்பது வியாதியின் செயல் முறைகளை அறியவும் மேலும் அதற்கான மருத்துவத்தை கண்டறிவதற்கான முனைப்பான அறிவியல்பூர்வமாக எடுக்கப்படும் தீவிர முயற்சி ஆகும். 1971 ஆம் ஆண்டில் ப்ரெசிடென்ட் நிக்ஸ்ன் "வார் ஆன் கான்செர் (கான்செருடன் போர்)" என்று உரைத்ததில் இருந்து, புற்றுநோய் ஆராய்ச்சி காரணமாக மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரணுசார் உயிரியல் போன்றவைகளில் மேம்பட்ட புரிந்துகொண்மை ஏற்பட்டதால் பல புதிய, பலனுடைய மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 1971 ஆம் ஆண்டில் இருந்து புற்றுநோய் ஆராய்ச்சியில் அமெரிக்கன் டாலர் $200 பில்லியனுக்கும் மேல முதலீடு செய்துள்ளனர்; இதில் தனியார், பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் அளித்த மூலதனமும் சேரும். இவ்வாறு கணிசமான தொகை முதலீடு செய்து இருந்தும், அந்நாடு 1950 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையே புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் ஐந்து விழுக்காடு குறைவே கண்டுள்ளது. (வயது மற்றும் மக்கள் தொகையை சரிசெய்த பின்)

முன்னணியில் நிற்கும் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் ஆனவை அமெரிக்கன் அச்சொசியேஷன் போர் கான்செர் ரிசெர்ச், தி அமெரிக்கன் கான்செர் சொசைடி (ACS), தி அமெரிக்கன் சொசைடி ஒப் கிளினிக்கல் ஆன்கோலோஜி, தி யுரோபியன் ஒர்கனைசேஷன் போர் ரிசெர்ச் அண்ட் ட்ரீட்மென்ட் ஒப் கான்செர், தி நேஷனல் கான்செர் இன்ஸ்டிடுட், தி நேஷனல் கொம்ப்ரிஹென்சிவ் கான்செர் நெட்வொர்க், மற்றும் தி கான்செர் ஜினோம் அட்லஸ் திட்டம் என் சி ஐ யில் உள்ளது.

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்

  • புகையிலை பயன்படுத்தக்கூடாது.
  • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
  • முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.
  • சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
  • நல் நடத்தை.
  • 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:

  • மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
  • புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
  • குணப்படாத புண்கள்.
  • கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
  • மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
  • தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
  • விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
  • இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
  • பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?

புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.

புற்று நோய் வகைகள்

புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலன்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என வழங்குகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

  • மார்பகப் புற்று நோய்
  • இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல

இரத்தப்புற்று நோய்

லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.

    அறிகுறிகள்
  • அதிகளவில் இரத்தம் வடிதல்
  • இரத்தசோகை
  • காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
  • பலவீனம் மற்றும் சோர்வு
  • பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
  • பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
  • நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
  • ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
  • காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
  • மூட்டு வலி
  • உள்நார்தசைகள் வீக்கமடைதல்

மார்பகப் புற்றுநோய்

மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை கண் முன் நிறுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

    அறிகுறிகள்
  • மார்பு வீங்குதல்
  • மார்புக் காம்பிலிருந்து வடிதல்
  • மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
  • சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
  • மார்பகம் பெரியதாகுதல்
  • மார்பு சுருங்குதல்
  • மார்பகம் கல்போல் கடினமாதல்
  • எலும்பு வலி
  • முதுகு வலி

இடர் காரணிகள்

  • குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
  • பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
  • ஏற்கனவே பாதிப்படைந்த மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கனவே உள்ள மார்பக நோய்கள்.
  • மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
  • 12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
  • குழந்தை இல்லாமை.
  • மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.

சிகிச்சை முறை

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது:

  • பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்றுவிட்டதா?
  • மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது?
  • மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை.

புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது :

  • புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
  • எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவியிருக்கிறது?
  • புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
  • மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
  • புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தலும் எலும்பு அல்லது மூளைக்கு பரவுதலும்

புற்றுநோய் செல்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது

  • மோர் அக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
  • லெஸ் அக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)

மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்:

  • கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவது.
  • முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.

தடுத்துக் காத்தல்

  • மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
  • உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல்.
  • சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.

உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.

உலக அளவிலான புற்று நோய் மருத்துவ மையங்கள்

புற்று நோயாளிகளுக்கு இலவசக் காப்பகம்

மேலும் பார்க்க

குறிப்புகள்

பொதுவான ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 001289

Tags:

புற்றுநோய் க்கான வரையறைபுற்றுநோய் கிளவியாக்கம்புற்றுநோய் உணர்குறிகள் மற்றும் அறிகுறிகள்புற்றுநோய் வகையாக்கம்புற்றுநோய் காரணிகள்புற்றுநோய் நோய் உடலியங்கியல்புற்றுநோய் இயங்குமுறைபுற்றுநோய் தடுக்கும் முறைகள்புற்றுநோய் நோய் நிர்ணயம்புற்றுநோய் சிகிச்சைபுற்றுநோய் முன் கணிப்புபுற்றுநோய் புறப்பரவியல்புற்றுநோய் வரலாறுபுற்றுநோய் ஆராய்ச்சி வழிகாட்டுதல்புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?புற்றுநோய் புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?புற்றுநோய் புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?புற்றுநோய் புற்று நோய் வகைகள்புற்றுநோய் இரத்தப்புற்று நோய்புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் உலக அளவிலான புற்று நோய் மருத்துவ மையங்கள்புற்றுநோய் மேலும் பார்க்கபுற்றுநோய் குறிப்புகள்புற்றுநோய் வெளி இணைப்புகள்புற்றுநோய்en:benign tumorஇழையம்உயிரணுகட்டி (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிர்மலா சீதாராமன்கொன்றை வேந்தன்தமிழ் இலக்கணம்இந்தியப் பிரதமர்திருவள்ளுவர் ஆண்டுபரணி (இலக்கியம்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஊராட்சி ஒன்றியம்அண்ணாமலையார் கோயில்தமிழ்ப் புத்தாண்டுஇரட்டைக்கிளவிமுத்துராமலிங்கத் தேவர்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபுற்றுநோய்2019 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் எண் கணித சோதிடம்சித்த மருத்துவம்இஸ்ரேல்மறைமலை அடிகள்அக்கிகே. என். நேருபொன்னியின் செல்வன்இந்தியன் பிரீமியர் லீக்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)வௌவால்இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)பால் கனகராஜ்ஜெயம் ரவிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிதமிழ்ஜெயகாந்தன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இன்னா நாற்பதுதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஅன்னி பெசண்ட்விஷ்ணுதனுஷ் (நடிகர்)அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிவேலுப்பிள்ளை பிரபாகரன்அம்பேத்கர்ஐக்கிய நாடுகள் அவைதைப்பொங்கல்நிணநீர்க்கணுசுனில் நரைன்சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்சிவபுராணம்வாணியர்விஸ்வகர்மா (சாதி)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)புதுமைப்பித்தன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019யாதவர்செயற்கை மழைஎங்கேயும் காதல்மாதவிடாய்பால கங்காதர திலகர்காரைக்கால் அம்மையார்விவேகபாநு (இதழ்)முதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மதுரை வீரன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சோழர்கருக்காலம்அத்தி (தாவரம்)இட்லர்தமிழ் மாதங்கள்கள்ளர் (இனக் குழுமம்)முத்தொள்ளாயிரம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகட்டுரைபதிற்றுப்பத்துகல்லீரல் இழைநார் வளர்ச்சிமொழிதிருநங்கை108 வைணவத் திருத்தலங்கள்மின்னஞ்சல்🡆 More