பரிபாடல்

பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

பரிபாடல் இலக்கணம்

  • தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப்பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.
  • நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
  • வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
  • வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
  • கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.
  • சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.
  • 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
  • பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • இந்நுால் 'பாிபாட்டு' எனவும் வழங்கப்படும்.

பரிபாடல் நூல் தொகுப்பு

பரிபாடலில் அமைந்த பாடல்களின் தொகுப்பை,

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்

தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்யபரி பாடற் றிறம்.

மேற்கண்ட வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்.

வெண்பாவின் விளக்கம்:

பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)

ஆனால் இன்று, திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்களே உள்ளன.

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்."

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

Tags:

பரிபாடல் இலக்கணம்பரிபாடல் நூல் தொகுப்புபரிபாடல் பதிப்பு வரலாறுபரிபாடல் வெளியிணைப்புகள்பரிபாடல் அடிக்குறிப்புபரிபாடல்எட்டுத்தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேதம்வேலு நாச்சியார்ஏற்காடுவாக்குரிமைசுற்றுலாபகவத் கீதைஇந்திய தேசிய சின்னங்கள்இதழ்மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில்இலக்கியம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்முகலாயப் பேரரசுஐம்பெருங் காப்பியங்கள்நாலடியார்நல்லெண்ணெய்தமிழ்ப் புத்தாண்டுஆழ்வார்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருப்பதிஇதயம்மதுரை வீரன்கினோவாதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சிட்டுக்குருவி2019 இந்தியப் பொதுத் தேர்தல்சப்ஜா விதைகுரோதி ஆண்டுமூங்கில்நிணநீர்க் குழியம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சிற்பி பாலசுப்ரமணியம்அறுசுவைகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிதினகரன் (இந்தியா)விளம்பரம்திருத்தணி முருகன் கோயில்காளமேகம்இயற்கை வளம்நிர்மலா சீதாராமன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஜெயகாந்தன்ஹர்திக் பாண்டியாபீப்பாய்தமிழ்ஒளிஏப்ரல் 16ஒன்றியப் பகுதி (இந்தியா)காவிரிப்பூம்பட்டினம்பெரும்பாணாற்றுப்படைகரகாட்டம்வயாகராசிவம் துபேநஞ்சுக்கொடி தகர்வுவாழ்த்துகள் (திரைப்படம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பரதநாட்டியம்பாளையக்காரர்பயிர் வகைகள்செந்தாமரை (நடிகர்)சூல்பை நீர்க்கட்டிநீரிழிவு நோய்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இராவணன்மு. கருணாநிதிதீரன் சின்னமலைபஞ்சதந்திரம் (திரைப்படம்)மும்பை இந்தியன்ஸ்மதுரைக் காஞ்சிஇன்னா நாற்பதுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவீரன் சுந்தரலிங்கம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஆனந்த விகடன்பொது உரிமையியல் சட்டம்ஆயுள் தண்டனைகன்னத்தில் முத்தமிட்டால்🡆 More