அலெக்சேய் அனத்தோலியெவிச் நவால்னி அல்லது அலெக்சி நவால்னி (Alexei Anatolievich Navalny; உருசியம்: Алексе́й Анато́льевич Нава́льный; 4 சூன் 1976 – 16 பெப்ரவரி 2024) உருசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், வழக்கறிஞரும், ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளரும், வலைத்தளப் பதிவரும் ஆவார்.
இவர் உருசியாவின் எதிர்காலம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறார். நவால்னியின் யூடியூப் சானலுக்கு 6 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களும், டுவிட்டர் கணக்கை 2 மில்லியன் பயனர்களும் பின்பற்றுகிறார்கள். மேற்படி ஊடகங்கள் வழியாக உருசியாவில் விளாதிமிர் பூட்டின் அரசு செய்து வரும் ஊழல்களை வெளிப்படுத்தி இடித்துரைக்கிறார். மேலும் ஊழல்களுக்கு எதிரான அமைப்புகளைத் திரட்டி, ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறார். சூலை 2013-இல் அலெக்செ நவால்னி மோசடி குற்றத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை பெற்றார். 2013-இல் நவால்னி மாஸ்கோ நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டு 27% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
அலெக்சேய் நவால்னி Alexei Navalny | |
---|---|
Алексей Навальный | |
2011 இல் நவால்னி | |
எதிர்கால உருசியா கட்சியின் தலைவர் | |
பதவியில் 28 மார்ச் 2019 – 17 சனவரி 2021 | |
Deputy | லியொனீது வோல்க்கொவ் |
முன்னையவர் | இவான் சுதானொவ் |
பின்னவர் | லியொனீது வோல்க்கொவ் (பதில்) |
பதவியில் 17 நவம்பர் 2013 – 19 மே 2018 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | இவான் சுதானொவ் |
உருசிய எதிர்க்கட்சி ஒருங்கிணைப்புப் பேரவைத் தலைவர் | |
பதவியில் 27 அக்டோபர் – 24 நவம்பர் 2012 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | காரி காஸ்பரொவ் |
கீரொவ் மாகாண ஆளுநரின் ஆலோசகர் | |
பதவியில் 4 மே – 11 செப்டம்பர் 2009 | |
ஆளுநர் | நிக்கித்தா பெலிக் |
மாஸ்கோ, யாப்லக்கா தலைமை அதிகாரி | |
பதவியில் 12 ஏப்ரல் 2004 – 22 பெப்ரவரி 2007 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புத்தின், மாசுக்கோ மாகாணம், உருசியா, சோவியத் ஒன்றியம் | 4 சூன் 1976
இறப்பு | 16 பெப்ரவரி 2024 கார்ப், யமலோ-நெனெத்து, உருசியா | (அகவை 47)
தேசியம் | உருசியர் |
அரசியல் கட்சி |
|
துணைவர் | யூலியா நவால்னயா (தி. 2000) |
பிள்ளைகள் | 2 |
கல்வி |
|
வேலை |
|
அறியப்படுவது | ஊழலுக்கு எதிரான போராட்டம் |
விருதுகள் | சாகரவ் பரிசு (2021) |
கையெழுத்து | |
இணையத்தளம் | navalny |
நவால்னி உருசிய, உக்ரைனிய மரபுகளைச் சேர்ந்தவர். 1998 இல் உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துப் பட்டம் பெற்றார். 2010-இல் புலமைப்பரிசில் பெற்று யேல் பல்கலைக்கழகம் சென்றார்.
2020 ஆகத்து மாதத்தில், நஞ்சூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன உருசிய மூத்த அதிகாரிகளின் மீது பயணத் தடைகளை அறிவித்தன. இதற்கிடையில், பூட்டினின் ஊழல்களை விளக்கி நவால்னி பூட்டினின் அரண்மனை என்ற ஆவணம் ஒன்றை வெளியிட்டதை அடுத்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 2021 பெப்ரவரியில் இவரது ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்குப் பதிலாக இரண்டரை ஆண்டுகள் தொழிலாளர் சீர்திருத்தக் குடியேற்றத்தில் வைக்கப்பட்டார். பன்னாட்டு மன்னிப்பு அவை இவரை மனச்சாட்சியின் கைதிகளின் பட்டியலில் வகைப்படுத்தியது. 2021 அக்டோபரில், இவரது மனித உரிமைச் செயற்பாடுகளுக்காக சாகரவ் பரிசு வழங்கப்பட்டது.
திசம்பர் 2023 இல், நவால்னி சிறையில் இருந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் காணாமல் போனார், பின்னர் யமலோ-நேனெத்தில் உள்ள புதிய ஆர்க்டிக் வட்ட சிறையில் மீண்டும் தோன்றினார். 2024 பிப்ரவரி 16 அன்று, நவால்னி தனது 47-வது அகவையில் இறந்துவிட்டதாக உருசிய சிறைத்துறை தெரிவித்தது.
20 ஆகஸ்டு 2020 அன்று தென்மத்திய உருசியாவின் தோம்ஸ்க் நகரத்திலிருந்து மாஸ்கோ நகரத்திற்கு வானூர்தியில் சென்று கொண்டிருந்த நவால்னிக்கு தீடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வழியில் உள்ள ஓம்ஸ்க் நகரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவால்னி மருத்துவமனையில் கத்திக்கொண்டே தாம் இறந்து கொண்டிருப்பதாக மருத்துவர்களிடம் கூறினார். காலையில் நவால்னி வானூர்தியில் ஏறுவதற்கு முன்னர் வானூர்தி நிலையத்தில் தேனீர் மட்டும் அருந்தினார் என்றும் அப்போது தேனீரில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாம் என அவருடைய உதவியாளர் கூறினார். மருத்துவர்களும் நவால்னி குருதியில் நஞ்சு இருந்த தடயத்தை இரத்தப் பரிசோதனையில் கண்டறிந்தனர். ஜெர்மனியால் அனுப்பபட்ட வானூர்தியில் ந்வால்னியை ஏற்றி பெர்லின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 24 ஆகஸ்டு 2020 அன்று பெர்லின் மருத்துவர்கள் நவால்னி உடலில் நஞ்சு ஏற்றப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தினர்.
ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சையில் உடல் நலம் தேறிய நவால்னி, 17 சனவரி 2021 அன்று மாஸ்கோ திரும்பினார். பிப்ரவரி 2021-இல் நவால்னி மீது நிலுவையில் பழைய குற்றச்சாட்டுகளுக்காக உருசியாவின் காவல்துறையினர் நவால்னியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். உருசியாவை ஆளும் விளாதிமிர் பூட்டின் அரசின் மனிதாபிமானமற்ற செயல்களை கண்டித்து, நவால்னி 31 மார்ச் 2021 முதல் சிறையில் உண்ணாநோன்பு இருந்து வருகிறார். இதனால் நவால்னியின் சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய ரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரித்தார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட நவால்னிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும், சிறையிலிருந்து விடுவிக்கவும் 20 ஏப்ரல் 2021 அன்று ருசியா முழுவதும் போராட்டம் நடத்திய நவால்னியின் ஆதரவாளர்களில் 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்சேய் நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என உருசியாவை அமெரிக்கா எச்சரித்தது.
அலெக்சி நவால்னி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அலெக்ஸி சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். தற்போதைய விளாடிமிர் புடின் அரசு, அலெக்ஸி மீது வேறு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 13 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 2021-ஆம் ஆண்டிற்கான சாகரவ் பரிசு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சேய் நவால்னிக்கு வழங்கப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article அலெக்சேய் நவால்னி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.