தனுஷ்கோடி (Dhanushkodi) இந்தியாவின், தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும்.
இது பாம்பனுக்கு தென் கிழக்கே, இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.
தனுஷ்கோடி | |||||||
அமைவிடம் | 9°10′49″N 79°24′54″E / 9.1802276°N 79.4150162°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் | • 2 மீட்டர்கள் (6.6 அடி) | ||||||
குறியீடுகள்
|
இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். இங்குள்ள கோதண்டராமர் கோயில் இராமேஸ்வரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது இராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது.
புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டிடங்களும் மட்டுமே. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியின் தொடருந்து நிலையத்தை கடல் கொண்டது. தொடருந்து தண்டவாளம், பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.
9.5 கி.மீ நீளமுள்ள சாலையில் தேசிய நெடுஞ்சாலை - முகுந்தாரையர் சாதிரமிலிருந்து தனுஷ்கோடி வரையான 5 கி.மீ. மற்றும் தனுஷ்கோடிக்கு அரிச்சமுனைக்கு 4.5 கி.மீ. சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனம் மூலம் செல்லலாம். அது அசோகாவின் தூண்களில் முடிவடையும். இந்தியாவின் பிரதான மண்டபத்தை தனுஷ்கோடிக்கு இணைக்கும் ஒரு குறுகிய இருப்புப் பாதை இருந்தது. 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட சூறாவளியில் பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை குறுகிய இருப்புப் பாதை கிளை கோடு அழிக்கப்பட்டபோது, சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை போட் மெயில் விரைவுத் தொடருந்து ஓடியது. 2003 ஆம் ஆண்டில், இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 16 கிலோமீட்டர் (9.9 மைல்) தொடருந்து பாதையை மீண்டும் அமைப்பதற்கு இரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு ரெயில்வே திட்டம் ஒன்றை அனுப்பியது. 2010 இல் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய இரயில் பாதை சாத்தியமாவதற்கு திட்டமிடல் கமிஷன் முயன்றது. 2016 வரை, தனுஷ்கோடி கடற்கரை செல்வதற்கு கடற்கரை ஓரம் நடந்தோ அல்லது ஜீப்பிலோ செல்வார்கள் . 2016 ஆம் ஆண்டில், முகுந்தாராயர் சாதிராம் கிராமத்திலிருந்து தனுஷ்கோடி கடற்கரை ஒரு சாலை அமைக்கப்பட்டது.
iராமேஸ்வரம் தீவையும் இந்தியாவையும் இணைக்கும் பாம்பன் பாலம் இந்தியாவில் ஒரு பொறியியல் அதிசயமாக இருக்கிறது. மும்பையில் முடிக்கப்பட்ட பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்புக்குப் பிறகு, இது இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட கடல்-பாலம் ஆகும். இந்த பாலத்தின் குறுக்கே உள்ள தொடருந்து பயணம் வியப்பூட்டும் காட்சிகளை அளிக்கிறது. மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இழிவான சூறாவளியில் சேதமடைந்த பாலம் 48 நாட்களுக்குள் மறுகட்டமைக்கப்பட்டது ஒரு சாதனை என்று கருதப்படுகிறது.
தற்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், முகுந்தராயர்சத்திரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து தினமும் நாட்டுப்படகு, சிறிய வத்தைகளில் சென்று மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரிச்சல்முனை கடற்கரை வரை வந்து செல்கின்றனர். இராமேஸ்வரம் கோயிலில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன, 45 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பெருமளவில் தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றனர்.
தனுஷ்கோடி கடற்கரை (முகுந்தா ரயர் சாத்ரம் @ மூண்டிரம் சத்திரம்) கடற்கரை 15 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முகுந்தர்யார் சத்திரம் என்றழைக்கப்படும், உயர் அலை கடல்கரை விளையாடுவதற்கு பாதுகாப்பான பகுதி. கடல் அலைகள் மிக அதிகமாக இருப்பதால் (அதிகபட்ச உயரம் 12 அடி என பதிவு செய்யப்பட்டுள்ளது) இது நீச்சல் தெரியாதவர்களுக்கு ஏற்றது அல்ல. இந்த கடற்கரையில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது, பரபரப்பான அனுபவமாக உள்ளது.
அரிச்சல் முனை இரண்டு கடல்களின் (வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல்) ஒன்றிணைவு மற்றும் இராமேசுவரம் முடிவடைவிடமே ஆகும், தனுஷ்கோடியில் உள்ள இந்த இடம் இந்தியா மற்றும் இலங்கையின் நில எல்லை ஆகும், இங்கிருந்து இலங்கை சுமார் 15 கி.மீ. இரு கடல்களின் இணைப்புப் புள்ளி அரிச்சல் முனை நீச்சல் அல்லது குளிப்பதற்கு ஆபத்து என்று கருதப்படுகிறது.
இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் கோதண்டராமர் கோயில் உள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article தனுஷ்கோடி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.