பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையில் அடிமைகளின் வாழ்வியலை விளக்கும் சிறந்த நூல் முக்கூடற்பள்ளு.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பொருநை ஆற்றங்கரையில் முக்கூடல் என்ற நகரம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அழகர் பெருமானை இந்த நூல் போற்றி எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி. 1680 ஆண்டு நாயக்க மன்னர்கள் ஆட்சி காலம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இதனை சொல் நயத்தோடும், ஓசை நயத்தோடும், சிலேடை நயத்தோடும் எழுதிய புலவன் யார் என்றே தெரியவில்லை.
குடும்பன் என்னும் பொதுப்பெயரால் குறிப்பிடப்படும் உழவன் இந்த நூலின் பாட்டுடைத் தலைவன். முக்கூடற் பள்ளியாகிய மூத்த பள்ளி குடும்பனின் முதல் மனைவி. மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி குடும்பனின் இரண்டாவது மனைவி. இவர்கள் அழகர் கோயிலுக்கு உரிய பண்ணை நிலத்தைப் பயிரிட்டு வாழ்பவர்கள். பண்ணைக்காரன் என்பவர் கோயில் நிலத்தைக் கண்காணிக்கும் நிலக்கிழார்.
இவர்களின் உரையாடலாக இந்த நூல் நாடக வடிவத்தில் அமைந்துள்ளது.
இந்த நூல் உழவுத் தொழிலின் மேன்மையைப் புலப்படுத்தி அக்கால உழவுத் தொழிலை விளக்குகிறது. வித்து-வகை, மாடு-வகை, ஏர்-வகை முதலானவற்றைக் கூறும் பள்ளி (அடிமை ) அக்கால வேளாண்மை முறைமையைக் காட்டுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article முக்கூடற் பள்ளு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.