மல்லை சி.
ஏ. சத்யா (ஆங்கில மொழி: Mallai C.E Sathya, பிறப்பு: டிசம்பர் 11 1963) தமிழ் நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணை பொதுச் செயலாளர் ஆவார். சி. ஏ. சத்யா என்ற இயற்பெயர் உடைய இவர் 10.12.1963 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த குரும்பிறை என்கிற சிற்றூரில் சி. ஏகாம்பரம், நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சியில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டு மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
மல்லை சி. ஏ. சத்யா | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10.12.1963 குரும்பிறை |
அரசியல் கட்சி | ம.தி.மு.க |
துணைவர் | துா்காசினி |
பிள்ளைகள் | கீா்த்திவாசன் (மகன்), கண்ணகி(மகள்) |
கல்வி | சமூகவியலில் முதுகலை பட்டம் |
இணையத்தளம் | https://mallaisathya.in/ |
This article uses material from the Wikipedia தமிழ் article மல்லை சத்யா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.