போரஸ், பர்வதேசுவரர் அல்லது புருவேந்தன், புருசோத்தமன் (Porus), பண்டைய இந்தியாவின் பஞ்சாப் பகுதிகளை ஆண்டவர் ஆவார்.
மாமன்னர் யயாதியின் மகன் புருவின் வழித்தோன்றலான பௌரவ ( பாண்டவ மற்றும் கௌரவர்கள்) அரச மரபினர் ஆவார்.இவருக்கு பிறகு இவரது மகன் மலயகேது அரசரானார்.
போரஸ் | |
---|---|
மன்னர் போரஸ் | |
அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865 | |
பௌரவ மன்னர்கள் | |
ஆட்சி | கி மு 340–317 |
முன்னிருந்தவர் | பமினி |
பின்வந்தவர் | மலயகேது |
மரபு | பௌரவ அரசமரபு |
தந்தை | பமினி |
தாய் | அனுசுயா |
பிறப்பு | பஞ்சாப் |
இறப்பு | கி மு அண். 321 – அண். 315 பஞ்சாப் |
சமயம் | பிற்கால வேதகால சமயம் |
ஜீலம் ஆற்றாங்கரையில் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸ்சின் வீரத்தை கண்டு வியந்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
அலெக்சாண்டர் கி மு 326இல் படகுப்பாலம் அமைத்து சிந்து ஆற்றை கடந்தார். அங்கு தக்சசீலா மன்னரும், போரசின் எதிரியுமான அம்பியை எதிர்கொண்டார். அப்போது ஜீலம் ஆற்றை கடந்து பஞ்சாபின் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்தார். இந்திய மன்னர் போரசின் யானைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என அலெக்சாண்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி தந்திரமாக மன்னர் போரஸ்சின் யானைப் படைகளை வென்றார்.
This article uses material from the Wikipedia தமிழ் article போரஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.