பிரேந்திரா

பிரேந்திரா பீர் விக்ரம் சாஹ் தேவ் (Birendra Bir Bikram Shah Dev, वीरेन्द्र वीर विक्रम शाहदेव) (டிசம்பர் 28, 1945 – ஜூன் 1, 2001) என்பவர் 1972 முதல் 2001 இல் இறக்கும் வரை நேபாளத்தின் மன்னராக இருந்தவர்.

இவருக்கும் முதல் இவரது தந்தையார் மகேந்திரா மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1, 2001 இல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிழழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் திபெந்திரா சுட்டுக் கொன்றார்.

பிரேந்திரா
वीरेन्द्र वीर विक्रम शाहदेव
நேபாள மன்னர்
பிரேந்திரா
ஆட்சிஜனவரி 31, 1972 - ஜூன் 1, 2001
முன்னிருந்தவர்மகேந்திரா
Heir-Apparentதீபேந்திரா
மரபுஷா பரம்பரை
தந்தைமகேந்திரா

வாழ்க்கைக் குறிப்பு

இளவரசர் (1955 இல் இருந்து மன்னர்) மகேந்திரா, இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். இந்தியாவில் டார்ஜீலிங், புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் நாட்டின் ஈடன் கல்லூரி (1959-64), டோக்கியோ பல்கலைக்கழகம் (1967), மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1967-68) ஆகியவற்றில் உயர்கல்வியையும் கற்றார்.

பிரேந்திரா ராணா குடும்பத்தைச் சேர்ந்த ஐஷ்வர்யா என்பவரை பெப்ரவரி 27 1970 இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.

மன்னர் பதவி

தந்தை மகேந்திரா 1960 இல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்து நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார். பிரேந்திராவும் தனது தந்தையின் அடிச்சுவட்டிலேயே நாட்டை அரசாண்டார். சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றின் தலையீடுகளை முறியடித்து நேபாளத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டார்.

பின்னர், பிரேந்திரா நாடாளுமன்ற மக்காளாட்சி முறைக்கு ஆதாராவாளரானார். 1990 இல் நாட்டில் கிளர்ந்த மக்கள் எழுச்சியை அடுத்து ஏப்ரல் 8 இல் அரசியல் கட்சிகளின் மீதான தடைகளை நீக்கினார். நவம்பர் 9 இல் அரசியல் அமைப்புக்கு திருத்தங்களை அறிவித்தார். அதன்படி, மன்னராட்சியின் கீழ் பலகட்சி அரசியலுக்கு இடமளித்தார். மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனாலும், பல கட்சிகளுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நாட்டில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. 1996 முதல் 2006 வரையில் மாவோயிஸ்டுகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் இப்போர் இடம்பெற்றது.

படுகொலைகள்

ஜூன் 1, 2001 இல் நாராயணன்ஹிட்டி அரண்மனையில் நடைபெற்ற அரச விருந்து ஒன்றின் போது, மன்னர் பிரேந்திராவும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் திபெந்திராவினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேபாளத்தின் உறுதிநிலை கேள்விக்குள்ளானது. இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே சுட்டுப் படுகாயமுற்றார். இப்படுகொலைகளுக்கு பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் ஞானேந்திராவே காரணம் என நேபாள பொதுமக்கள் நம்புகின்றனர்,,. இக்கொலைக்கான முழுக்காரணமும் இதுவரையில் அறியப்படவில்லை என்றாலும் இளவரசர் தீபேந்திரா தனது காதலியான தேவயானி ராணாவை திருமணம் புரிவதில் அவரது தாயாருடன் ஏற்பட்ட பிணக்கே காரணம் என நம்பப்படுகிறது. அத்துடன் தீபேந்திரா மதுவுக்கு அடிமையாகியிருதார் எனவும் அதனால் மன அழுத்தம் அதிகம் கொண்டவராகவும் இருந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேந்திராவின் இறப்புக்குப் பின்னர் திபெந்திரா நேபாள மன்னராக அறிவிக்கப்பட்டாலும் இவரும் 4 நாட்களின் பின்னர் ஜூன் 4, 2001 இல் தன்னைத்தானே சுட்டதினால் ஏற்பட்ட காயங்களின் பின்னர் இறந்தார். பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் ஞானேந்திரா நேபாள மன்னரானார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

பிரேந்திரா வாழ்க்கைக் குறிப்புபிரேந்திரா மன்னர் பதவிபிரேந்திரா படுகொலைகள்பிரேந்திரா இதனையும் காண்கபிரேந்திரா மேற்கோள்கள்பிரேந்திரா194519722001ஜூன் 1டிசம்பர் 28திபெந்திராநேபாளம்மகேந்திரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயிர்மெய் எழுத்துகள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கலைஸ்டார் (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழர் பண்பாடுகடையெழு வள்ளல்கள்பரிபாடல்வாகமண்இந்தியாசுற்றுச்சூழல் பாதுகாப்புஇரசினிகாந்துதொல். திருமாவளவன்திருக்குறள்சாக்கிரட்டீசுபள்ளுஇராமாயணம்எயிட்சுதலைவி (திரைப்படம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்குலுக்கல் பரிசுச் சீட்டுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கொல்லி மலைகடல்செண்டிமீட்டர்சுபாஷ் சந்திர போஸ்ஐம்பெருங் காப்பியங்கள்சூளாமணிசுந்தரமூர்த்தி நாயனார்விந்துசுற்றுச்சூழல்மருதம் (திணை)இந்தியன் பிரீமியர் லீக்கில்லி (திரைப்படம்)ஜெ. ஜெயலலிதாசிறுநீரகம்பூக்கள் பட்டியல்தொலெமிபால் (இலக்கணம்)ஆட்கொணர்வு மனுகருத்தரிப்புபனைகள்ளுநான்மணிக்கடிகைவறட்சிஅண்ணாமலையார் கோயில்மார்பகப் புற்றுநோய்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கரிகால் சோழன்தமிழில் சிற்றிலக்கியங்கள்ஐந்திணைகளும் உரிப்பொருளும்வாரன் பபெட்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்மண் பானைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்திராவிடர்சிவன்கீழடி அகழாய்வு மையம்திருவாசகம்தமிழிசை சௌந்தரராஜன்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்அம்பேத்கர்கள்ளழகர் கோயில், மதுரைவிசயகாந்துபில் சோல்ட்நெடுநல்வாடைசேரன் செங்குட்டுவன்தமிழ் எழுத்து முறைஈரோடு தமிழன்பன்காற்று வெளியிடைசுக்கிரீவன்நந்தா என் நிலாஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்அவதாரம்போயர்பிலிருபின்பீப்பாய்நெசவுத் தொழில்நுட்பம்🡆 More