நேபாள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்ட் (Communist Party of Nepal - Maoist Centre) என அழைக்கப்படும் இக்கட்சியானது அரசியல் இராணுவ அமைப்பாகும்.
இக்கட்சியே நேபாள மக்கள் புரட்சியினைத் தலைமைதாங்கி நடத்தி வருகிறது. 1994 ம் ஆண்டு பிரசந்தா எனும் புஷ்ப கமால் தகால் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து புதிய ஜனநாயக சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன.
இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது. 1996 இல் நேபாள மக்கள் புரட்சி என்ற பெயரிலான மக்கள் போராட்டத்தினை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) பிரகடனப்படுத்தியது. தொடர்ச்சியான மாவோவாத மக்கள் போராட்டக் கரந்தடி உத்திப் போர்முறையின் மூலம் நாட்டின் பெரும்பாலான பாகங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் கொண்டுவந்துள்ளனர். நேபாள கம்யுனிஸ்ட் கட்சியானது, புரட்சிகரமான பன்னாட்டு இயக்கம் (Revolutionary Internationalist Movement), தெற்காசிய மாவோயிஸ்டு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றில் (Coordination Committee of Maoist Parties and Organizations of South Asia) ஆகிய அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.