செந்நெறிக் காலம் அல்லது பாரம்பரியக் காலம் (Classical antiquity or classical era, classical period or classical age) என்பது கிமு 800 முதல் கிபி 600 வரையிலான பண்பாட்டு வரலாற்றுக் காலம் ஆகும். இக்காலத்தில் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பண்டைய கிரேக்கம், பண்டைய எகிப்து, பண்டைய அண்மை கிழக்கு, பாரசீகம் மற்றும் பரத கண்டப் பிரதேசங்களில் அரசியல், சட்டம், கலை, நுண்கலைகள், இலக்கியம், சமயம், கல்வி, தத்துவம், போர்க்கலை மற்றும் கட்டிடக்கலைகள் செழிப்புடன் வளர்ந்தது.
செந்நெறிக் காலத்தில் கிமு எட்டாம்-ஏழாம் நூற்றாண்டுகளில் பண்டைய கிரேக்க கவிஞர் ஓமர் எழுதிய இலியட் மற்றும் ஒடிசி இலக்கிய நயம் மிகுந்த இதிகாசக் காப்பியங்கள் தோன்றியது. செந்நெறிக் காலத்தின் துவக்கத்தில் கிமு நான்காம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் செழித்தோங்கியது. செந்நெறிக் காலத்தின் கிபி நான்காம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு ஆட்சியில் கிறித்தவ சமயம் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் செழித்தோங்கியது. தமிழ்நாட்டில் சங்க காலத்திய இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் படைக்கப்பட்டது. குப்தப் பேரரசின் காலத்தில் சமஸ்கிருத மொழியில் இதிகாச, புராண இலக்கியங்கள் இயற்றப்பட்டது. வான சாத்திரம், மருத்துவம் வளர்ந்தது.
செந்நெறிக் காலத்தில் சிறந்து விளங்கிய பேரரசுகளில் சில:
This article uses material from the Wikipedia தமிழ் article பாரம்பரியக் காலம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.