நாம்பு ஓச்சிரோ (Nambu Yōichirō, 南部 陽一郎; சனவரி 18, 1921 - சூலை 5, 2015) சப்பானில் பிறந்து வளர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இயற்பியல் அறிஞர்.
கருத்திய இயற்பியல் துறையில், அணுவின் உட்கூறுகள் பற்றி ஆழமான ஆய்வுகள் செய்து புகழ் பெற்றவர். அணுவின் உட்கூறுகளாகிய அணுத்துகள்களின் இயக்கத்தில், தற்செயலாய் கலையும் அல்லது இழக்கும் சீரொற்றுமை பற்றி இவர் செய்த ஆய்வுக்காக, 2008 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடன் கோபயாசி மக்கொட்டோ, மசுக்காவா தொசிடே ஆகிய இரண்டு சப்பானியரும் 2008 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்தனர்.
நாம்பு ஓச்சிரோ Yoichiro Nambu | |
---|---|
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தற்செயலாய் சீரொற்றுமை இழத்தல் |
விருதுகள் | வுல்ஃவு பரிசு டிராக் பதக்கம் சக்குராய் பரிசு நோபல் பரிசு (2008) |
This article uses material from the Wikipedia தமிழ் article நாம்பு ஓச்சிரோ, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.