ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும்.
ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹாலைடை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. வணிகம், பொழுதுபோக்கு, விளம்பரம், கல்வி, பதிவுத்துறை அலுவலகங்கள், பத்திரிகைத் துறை, பல் ஊடக கருத்துத் தொகுப்புகள், திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒளிப்படவியலின் பயன்பாடு பெரிதும் உணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.
ஒளிப்படவியல் | |
---|---|
பெரிய வடிவ நிழற்படக்கருவி, வில்லைகள் | |
பிற பெயர்கள் | நிலையான படிமங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் கலை |
வகைகள் | ஒளி மற்றும் மின்காந்தக் கதிர்வீச்சை பதிவுசெய்தல் |
கண்டுபிடித்தவர் | தோமஸ் வெஜ்வூட் (1800) |
தொடர்புள்ளவை | முப்பரிமாண படிமம், முழு-நிறமாலை, ஒளிக் களம், மின்நிழற்படக்கலை, ஒளி உருப்படிமம், மின்வருடி (Scanner) |
ஒளிப்படவியல் எனும் ஆங்கிலப் பதம் கிரேக்கச் சொல்லான φωτός (phōtos), φῶς இன் ஆறாம் வேற்றுமை (phōs), "ஒளி" மற்றும் γραφή (graphé) "கோடுகளால் சுட்டிக்காட்டல்" அல்லது "வரைதல்", ஆகியவற்றின் கருத்தைக் கொண்ட "ஒளியினால் வரைதல்" என்பதிலிருந்து உருவாகியது.
பிரேசில் (Brazil) நாட்டின், கேம்பினாஸ் (Campinas) பகுதியில் வசித்த ஹெர்குலஸ் புளோரன்ஸ் (Hercules Florence) ஒரு பிரஞ்சு ஓவியரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் பிரஞ்சு மொழி வடிவச் சொல், போட்டோகிராபி (photographie) என்பதைத் தன் தனிக்குறிப்பேட்டில் பயன்படுத்திருந்தார். இது 1834ல் எழுதப்பட்டதாக பிரேசிலிய வரலாற்றாசிரியர் உறுதிப்படுத்துகிறார். ஜோஹன் வோன் மேட்லர் (Johann von Maedler), பெர்லின் (Berlin) நாட்டின் வானியலாளர். இவர் 1839ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் வோஸ்ஸிசே ஸீய்டங் (Vossische Zeitung) எனும் ஜெர்மன் செய்தித்தாளில் ஒளிப்படவியல் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்காக இவர் 1932ல் நடைபெற்ற ஜெர்மன் புகைப்பட வரலாற்றரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டார்.
புகைப்படக்கலை என்பது பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் தொகுப்பு விளைவாகும்.
சுமார் 1800 ஆண்டுகளில் பிரித்தானிய கண்டுபிடிப்பாளர், தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவி மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளைத் தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி புகைப்படம் தயாரித்தார்.
நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார். இம்முறையில் கண்ணாடியின் மீது நிழல் பிரதி ஓவியங்களைப் பதிவு செய்தார். இது 1802 இல் உலகிற்கு முழுமையாகவும், தெளிவாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர், நிழல் படங்கள் குறிப்பிட்ட காலம் கழித்து இறுதியில் முழுமையாகக் கருமையடைந்தது அறியப்பட்டது. நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழியாக இயற்கைச் சூழலைப் புகைப்படமாக்கினார். இதுவே தற்போது இருக்கும் முற்கால புகைப்படம் ஆகும். இதில் இயற்கைக் காட்சியானது அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவியின் லென்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டது.
டால்போட், ஒளிகசியும் எதிர்மறையை உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன புகைப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகளை அச்சிட காட்சியை மீள்புகைப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும். 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் ஒளிப்படக் கருவி மூலம் பல புகைப்படங்களைப் பதிவு செய்தார். இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில் (Lacock Abbey) ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளின் எதிர்மறைகளில், இது மிகப்பழமையான ஒளிப்படக் கருவியின் எதிர்மறையாக இருக்கலாம்.
ஒளிப்படத்திற்கான காட்சிகளைப் பதிவு செய்வதில் பல்வேறு வகையான ஒளிப்பட நுட்பங்களும், ஊடகங்களும், படப்பதிவு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒளிப்படக் காட்சிகளைப் பதிவு செய்வதில் பங்கேற்கும் பல்வேறு கூறுகள்:
ஒரே வண்ணம் அல்லது பல வண்ண புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்டு, பிரதியிட்ட படங்களைப் பக்கம், பக்கமாக வைத்துப் பார்க்கும்போது, பிரதியிடப்பட்ட ஒரே மாதிரியான இரண்டு படங்களின் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று ஈடாகப் போட்டியிட்டு மனிதப் பார்வைக்கு முப்பரிமாண வடிவம் போலத் தோற்றமளிக்கும். இம்முப்பரிமாணப் படிம ஒளிப்படப் பதிவானது, பிற்காலத்தில் இயக்கத்துடன் கூடிய சலனப் படங்கள் பதிவு செய்வதற்கு முன்னோடியாக அமைந்தது. இது பேச்சுவழக்கில் "3-டி" ஒளிப்படம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மிகவும் துல்லியமான பெயர் முப்பரிமாண ஒளிப்படம் அல்லது ஸ்டீரியோஸ்கோபி (stereoscopy) என்பதாகும். இத்தகைய ஒளிப்படக் கருவிகள் நீண்ட காலங்களாக நழுவச் சுருள்களையே பயன்படுத்தி வந்தன. மிகச் சமீபகாலமாக முப்பரிமாணப் படிம படப் பதிவில் எணினி மின்னணுவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துடித்திறப் பேசி ஒளிப்படமிகள் மூலமும் இதைச் செய்ய முடியும்.
ஒரே நேரத்தில், நேர் எதிர்த் திசைகளில், இரண்டு ஒளிப்படக் கருவிகளைக் கொண்டு இருபுறத்தில் இருந்தும் ஒரே காட்சியை படப்பதிவு செய்வது இரட்டை ஒளிப்படத் தயாரிப்பு எனப்படும். இரட்டை ஒளிப்படத் தயாரிப்பு முறையில், ஒரே நேரத்தில் காட்சிப் பொருள் மற்றும் ஒளிப்பதிவாளர் என இரு திசைகளிலும் அல்லது ஒரே நேரத்தில் ஒரு புவியியல் அமைப்பில் இருபுறமும் இரட்டை ஒளிப்பதிவு செய்ய இயலும். இதனால் ஒரு தனிப் படத்தில் மற்றொரு துணை கதை அடுக்கு சேர்த்து காட்சியை முழுமைப்படுத்த முடியும்.
This article uses material from the Wikipedia தமிழ் article ஒளிப்படவியல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.