ரோக்சானா

ரோக்சானா (Roxana) என்பவர் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் நடு ஆசியப் பகுதியில் உள்ள சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் ஆளுநர் ஆக்சியாதெஸ் மகள் ஆவார்.

ரோக்சானா
ரோக்சானா
பேரரசர் அலெக்சாந்தர் - ரோக்ஸானா திருமணம்
பிறப்புகிமு 340
சோக்தியானா அல்லது பாக்திரியா
இறப்புகிமு 310
மாசிடோனியா, பண்டைய கிரேக்கம் [
துணைவர்பேரரசர் அலெக்சாந்தர்
குழந்தைகளின்
பெயர்கள்
நான்காம் அலெக்சாண்டர்
தந்தைஆக்சியாதெஸ்
மதம்சொராட்டிரிய நெறி

பாரசீகத்தின் இறுதி அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் தாராவை வென்ற அலெக்சாந்தர் அவரது மகளான ரோக்சானாவை மணந்தார். இவர் பிறந்த தேதி சரியாகத் தெரியவில்லை, ஆனால் பேரரசர் அலெக்சாந்தர் உடனான திருமணத்தின் போது இவர் பதின்ம வயதின் பிற்பகுதியில் அல்லது இருபதுகளின் துவக்கத்தில் இருந்திருக்கலாம். ரோக்சானா கிமு 310-இல் நான்காம் அலெக்சாந்தரைப் பெற்றெடுத்தார்.

ரோக்சானா
அலெக்சாந்தரும், ரோக்சானாவும், சித்திரம், ஆண்டு, 1756
ரோக்சானா
அலெக்சாந்தர்-ரோக்சானா திருமண விழா சித்திரம்

வரலாறு

பாரசீக இளவரசி ரோக்சானா கிமு 340-இல் சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் மாகாண ஆளுநரான ஆக்சியாதெஸ் எனும் பிரபுவிற்கு பிறந்தார். ஆக்சியாதெஸ் பாரசீகத்தின் இறுதி அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் தாராவைக் கொன்று, தன்னை சோக்தியானா-பாக்திரியா பகுதிகளின் மன்னராக அறிவித்துக் கொண்டார். அலெக்சாந்தர் சோக்தியானா-பாக்திரியா பகுதிகளை வென்ற பின்னர். ரோக்சானா மீது அலெக்சாந்தர் கண்டவுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது. பின் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை பாரசீக மற்றும் கிரேக்கப் படைத்தலைவர்கள் முழுமனதாக ஏற்கவில்லை. எனவே ரோக்சானாவை பாபிலோன் அருகே உள்ள சூசா நகரத்தில் பத்திரமாக வைத்து காத்தார். அலெக்சாந்தர் சூசா நகரத்திற்கு திரும்பிய போது ரோக்சானாவின் சகோதரரை ஒரு குதிரைப்படைத் தலைவராக நியமித்தார். இந்தியாவை கைப்பற்றுவதற்கு ஏதுவாக ரோக்சானாவின் தந்தையான ஆக்சியாதெசை இந்து குஷ் பகுதிகளின் ஆளுநராக அலெக்சாந்தர் நியமித்தார். பாரசீகர்கள் தனது அரசாங்கத்தை நன்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், அலெக்சாந்தர்ர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாரசீக மன்னர் மூன்றாம் தாராவின்ன் மகளான ஸ்டேடிரா என்பவரையும் மணந்தார்.

கிமு 323-இல் அலெக்சாந்தர் பாபிலோனில் நோய்வாய்ப்பட்டு திடீரென்று இறந்தார். அலெக்சாந்தரின் இறப்பிறகுப் பின் ரோக்சானா அலெக்சாந்தரின் மற்ற விதவை மனைவிகளான ஸ்டேடிரா மற்றும் ஸ்டேடிராவின் சகோதரி ட்ரைபெடிஸ் மற்றும் அவரது உறவினரான இரண்டாம் பாரிசாடிஸ் (அலெக்ஸாண்டரின் மூன்றாவது மனைவி) ஆகியோரைக் கொன்றதாக நம்பப்படுகிறது. 317 வாக்கில், நான்காம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்ட ரோக்சானாவின் குழந்தை, பிலிப் அர்ஹிடேயஸின் மனைவி இரண்டாம் யூரிடிசால் செய்யப்பட்ட சூழ்ச்சிகளால் அரசனாகும் உரிமையை இழந்தான். பின்னர் ரோக்சனாவும் அவரது மகனும் மாசிடோனியாவில் அலெக்சாந்தரின் தாயார் ஒலிம்பியாசால் பாதுகாக்கப்பட்டனர். கிமு 316 இல் ஒலிம்பியாஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரோக்ஸானா மற்றும் அலெக்சாண்டர் IV ஆம்பிபோலிஸ் கோட்டையில் கசாண்டர் சிறையில் அடைக்கப்பட்டார். கிமு 315 இல் மாசிடோனிய தளபதி ஆன்டிகோன்னாஸ் இவர்கள் சிறை வைக்கப்பட்டதைக் கண்டித்தார். கிமு 311 இல் ஆன்டிகோனசுக்கும் கசாண்டருக்கும் இடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை நான்காம் அலெக்சாந்தரின் அரசாட்சியை உறுதிப்படுத்தியது. ஆனால் கசாண்டரே அவனது பாதுகாவலனாக இருந்தார். அதைத் தொடர்ந்து மாசிடோனியர்கள் அவரை விடுவிக்கக் கோரினர். இருப்பினும், அலெக்சாந்தரையும் ரோக்சானாவையும் கொல்லுமாறு கசாண்டர் கிளாசியாசுக்கு உத்தரவிட்டார். கி.மு. 310 வசந்த காலத்தில் இவர்கள் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது, ஆனால் இவர்களின் மரணம் கோடை காலம் வரை மறைக்கப்பட்டது.

கொரவங்கள்

சிறுகோளான 317 ரோக்சானா என்ற பெயர் இவரது நினைவாக இடப்பட்டது.

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

ரோக்சானா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரோக்சானா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ரோக்சானா வரலாறுரோக்சானா கொரவங்கள்ரோக்சானா மேற்கோள்கள்ரோக்சானா உசாத்துணைரோக்சானா வெளி இணைப்புகள்ரோக்சானாஅகாமனிசியப் பேரரசுசோக்தியானாநடு ஆசியாபாக்திரியாபாரசீகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விருந்தோம்பல்ஆழ்வார்கள்இராவணன்முத்துலட்சுமி ரெட்டிஉஹத் யுத்தம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அன்புசிறுபாணாற்றுப்படைமலைபடுகடாம்புதன் (கோள்)போதைப்பொருள்சகுந்தலாபாரிதிரௌபதி முர்முகாப்பியம்உடனுறை துணைஇளங்கோ கிருஷ்ணன்கர்ணன் (மகாபாரதம்)நிணநீர்க்கணுஅய்யா வைகுண்டர்பாலை (திணை)வாதுமைக் கொட்டைநீரிழிவு நோய்கண்டேன் காதலைசினைப்பை நோய்க்குறிகும்பம் (இராசி)வெ. இராமலிங்கம் பிள்ளைசுரதாகண்டம்மீனா (நடிகை)மருந்துப்போலிகுருத்து ஞாயிறுஇந்திய நாடாளுமன்றம்உயர் இரத்த அழுத்தம்பெண்தியாகராஜா மகேஸ்வரன்கல்லீரல்ஆறுமுக நாவலர்மஞ்சள் காமாலைஇரா. பிரியா (அரசியலர்)மயங்கொலிச் சொற்கள்இளங்கோவடிகள்குண்டலகேசிஇலங்கையாதவர்திருக்கோயிலூர்திருவள்ளுவர் ஆண்டுகணியன் பூங்குன்றனார்கருக்கலைப்புபெ. சுந்தரம் பிள்ளைவிநாயக் தாமோதர் சாவர்க்கர்கருக்காலம்வாழைப்பழம்பதினெண்மேற்கணக்குதேசிக விநாயகம் பிள்ளைகே. என். நேருசைவத் திருமுறைகள்செயற்கை அறிவுத்திறன்பார்த்திபன் கனவு (புதினம்)புரோஜெஸ்டிரோன்முதலாம் கர்நாடகப் போர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்காப்சாசப்ஜா விதைவன்னியர்நற்றிணைஐம்பெருங் காப்பியங்கள்விநாயகர் அகவல்வைணவ சமயம்மலக்குகள்குமரகுருபரர்கருத்தரிப்புயாப்பகூவாஎச்.ஐ.விஇந்தியப் பிரதமர்வளைகாப்புவிடுதலை பகுதி 1சிப்பாய்க் கிளர்ச்சி, 1857🡆 More