பாலச்சந்திர நெமதே

பாலச்சந்திர நெமதே (மே 27, 1938) என்பவர் மராட்டியப் புதின ஆசிரியர், கவிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது (2014) இவருக்கு வழங்க முடிவு செய்து பாரதிய ஞானப் பீட விருதுத் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

பாலச்சந்திர நெமதே
பாலச்சந்திர நெமதே
பிறப்பு1938
சங்கவி, ரேவர், மகாராட்டிரம்
தொழில்மராத்திய எழுத்தாளர்
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க விருதுகள்ஞானபீட விருது, பத்மசிறீ (2011), சாகித்திய அகாதமி விருது

பிறப்பும் கல்வியும்

மராட்டிய மாநிலத்தில் சங்கவி என்னும் சிற்றுரில் பிறந்தார். புனேயில் பெர்குசன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். டெக்கான் கல்லூரியில் மொழி நூலில் முதுவர் பட்டமும், மும்பைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துப் பட்டமும், வட மகாராட்டிரப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டமும் இலக்கிய ஆய்வுப் பட்டமும் பெற்றார்.

பணி

அகமது நகர், துலே, அவுரங்கபாது ஆகிய பல்கலைக் கழகங்களில் ஆங்கிலம் மராத்தி மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியராகப் பாலச்சந்திர நெமதே பணி புரிந்தார். ஒப்பீட்டு இலக்கியங்களையும் கற்பித்தார்.

படைப்புகள்

1963 இல் பாலசந்திர நேமதே கோசலா (கூட்டுப் புழு) என்னும் புதினம் எழுதி புகழ் பெற்றார். இந்தப் புதினம் மராட்டிய உலகிற்குப் புதிய வடிவம் கொடுத்தது. ஹூல், சரிலா, பிதார், சூல் ஆகியவை இவர் எழுதிய பிற புதினங்கள் ஆகும். இவையன்றி கவிதைத் தொகுப்புகளும் திறனாய்வுக் கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டன.

விருதுகள்

1991இல் சாகித்திய அகாதமி விருது தீகஸ்வயம்வர என்னும் விமர்சன நூலுக்காக வழங்கப்பட்டது. 2011 இல் பத்மசிறீ விருதைப் பெற்றார். 2014 ஆம் ஆண்டுக்குரிய ஞானப் பீட விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருது வரும் ஏப்ரல் மாதம் எழுத்தாளருக்கு வழங்கப்பெறும். இதற்குமுன் மராத்தியில் இவ்விருதினை 1974ல் வி. ச. காண்டேகர், 1988ல் ஷிர்வாத்கர் (எ) குஸ்மகராஜ் மற்றும் 2003ல் கோவிந்த் கராண்டிகார் (எ) விந்தா கராண்டிகார் ஆகியோர் பெற்றுள்ளனர்.

உசாத்துணை

Tags:

பாலச்சந்திர நெமதே பிறப்பும் கல்வியும்பாலச்சந்திர நெமதே பணிபாலச்சந்திர நெமதே படைப்புகள்பாலச்சந்திர நெமதே விருதுகள்பாலச்சந்திர நெமதே உசாத்துணைபாலச்சந்திர நெமதேஇந்தியாஞானபீட விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருதநாயகம்விபுலாநந்தர்முகலாயப் பேரரசுஆழ்வார்கள்பெண்களின் உரிமைகள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சூரைதமிழர்தமிழ் இலக்கியப் பட்டியல்சினேகாஇடிமழைவிஜய் வர்மாதிருட்டுப்பயலே 2தங்க மகன் (1983 திரைப்படம்)இட்லர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)பணவீக்கம்மனித உரிமைவிண்ணைத்தாண்டி வருவாயாதமிழ் எழுத்து முறைசொல்இராமலிங்க அடிகள்பறவைக் காய்ச்சல்சாத்துகுடிசென்னைபயில்வான் ரங்கநாதன்ஆதிமந்திரச்சித்தா மகாலட்சுமிதிருமலை (திரைப்படம்)திருப்பதிகட்டபொம்மன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெரியாழ்வார்ஏப்ரல் 26நந்திக் கலம்பகம்அட்சய திருதியைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்காடுஆகு பெயர்சச்சின் (திரைப்படம்)அகத்திணைசங்ககாலத் தமிழக நாணயவியல்நெல்ம. கோ. இராமச்சந்திரன்சேலம்சுரதாஅகத்தியம்மீனம்மனித மூளைசெண்டிமீட்டர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருவண்ணாமலைவெந்து தணிந்தது காடுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருவள்ளுவர்விஸ்வகர்மா (சாதி)போக்கிரி (திரைப்படம்)கிராம்புகுலசேகர ஆழ்வார்புவியிடங்காட்டிதமிழர் கட்டிடக்கலைஅறுசுவைவிராட் கோலிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)சைவ சமயம்இல்லுமினாட்டிநெடுநல்வாடைமணிமேகலை (காப்பியம்)மாதவிடாய்சார்பெழுத்துபாடாண் திணைஇந்தியன் பிரீமியர் லீக்இந்திய உச்ச நீதிமன்றம்எயிட்சுதிருநங்கைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஐந்திணைகளும் உரிப்பொருளும்தேஜஸ்வி சூர்யா🡆 More