தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலம் தமிழ்ப் புலவர்கள் நிறைந்து வழிந்த காலம்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
அக்காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைதனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பதை இலக்கியங்களை ஆராயும்போது தெளிவாகிறது.
பிற்காலத்தில் பெண்பாற் புலவர்களின் பெயர் எவ்வாறு சுட்டப்பட்டதெனின், அவர்கள் எழுதிய இலக்கியங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்தே அவர்களுக்கு பெயர் வைக்கப்பட்டது என்பதே உண்மை.எடுத்துக்காட்டாக செம்புலம் பற்றி ஒரு புலவர் பாடுகிறார். அவர் பெயர் ஆய்வாளர்களால் அறியப்படவில்லை. ஆயினும் கவிதை இரசம் கொட்டுகிறது. எனவே அப்புலவருக்கு செம்புலப்பெயனீரார் என்று பெயர் சூட்டினர்.
சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர்களை சங்ககாலப் புலவர்கள் என்கிறார்கள். இதில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர்.[சான்று தேவை] இந்தப் பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநர் ஆற்றுப்படை, நற்றிணை என்கிற பிரிவில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
எண் | பெண் புலவர் பெயர் | அகநானூறு | புறநானூறு | குறுந்தொகை | பதிற்றுப்பத்து | பொருநர் ஆற்றுப்படை | நற்றிணை | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ஔவையார் | 5 | 33 | 15 | ... | ... | 7 | 60 |
2 | அஞ்சில் அஞ்சியார் | ... | ... | ... | ... | ... | 1 | 1 |
3 | அஞ்சியத்தை மகள் நாகையார் | 1 | ... | ... | ... | ... | ... | 1 |
4 | அள்ளூர் நன்முல்லையார் | 1 | 1 | 9 | ... | ... | ... | 11 |
5 | அணிலாடு முன்றிலார் | ... | ... | 1 | ... | ... | ... | 1 |
6 | ஆதிமந்தி | ... | ... | 1 | ... | ... | ... | 1 |
7 | ஒக்கூர் மாசாத்தியார் | 2 | 1 | 5 | ... | ... | ... | 8 |
8 | ஓரிற் பிச்சையார் | ... | ... | 1 | ... | ... | ... | 1 |
9 | கச்சிப்பேட்டு நன்னாகையார் | ... | ... | 8 | ... | ... | ... | 8 |
10 | கழார்க்கீரன் எயிற்றியார் | 4 | ... | 3 | ... | ... | 2 | 9 |
11 | காக்கைப்பாடினி நச்செள்ளையார் | ... | 1 | 1 | 10 | ... | ... | 12 |
12 | காவற்பெண்டு | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
13 | காமக்கணி நப்பசலையார் | 2 | 2 | ... | ... | ... | 1 | 5 |
14 | குமுழி ஞாழல் நப்பசையார் | 1 | ... | ... | ... | ... | ... | 1 |
15 | குற மகள் இளவெயினியார் | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
16 | குறமகள் குறிஎயினி | ... | ... | ... | ... | ... | 1 | 1 |
17 | தாயங்கண்ணியார் | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
18 | நக்கண்ணையார் | 1 | 3 | ... | ... | ... | 2 | 6 |
19 | நல்வெள்ளியார் | 1 | ... | 1 | ... | ... | 2 | 4 |
20 | பாரிமகளிர் | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
21 | பூங்கனுத்திரையார் | ... | 1 | 2 | ... | ... | ... | 3 |
22 | பெருங்கோப்பெண்டு | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
23 | இளவெயினி | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
24 | பொன்முடியார் | ... | 3 | ... | ... | ... | ... | 3 |
25 | பொதும்பில் புல்லளங்கண்ணியார் | 1 | ... | ... | ... | ... | ... | 1 |
26 | மாற்பத்தி | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
27 | மாறோகத்து நப்பசலையார் | ... | 7 | ... | ... | ... | 1 | 8 |
28 | முடத்தாமக் கண்ணியார் | ... | ... | ... | ... | 1 | ... | 1 |
29 | முள்ளியூர் பூதியார் | 1 | ... | ... | ... | ... | ... | 1 |
30 | வெள்ளி வீதியார் | 2 | ... | 8 | ... | ... | 3 | 13 |
31 | வெண்ணிக் குயத்தியார் | ... | ... | 1 | ... | ... | ... | 1 |
32 | மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் | ... | ... | ... | ... | ... | 2 | 2 |
This article uses material from the Wikipedia தமிழ் article சங்க காலப் பெண்பாற் புலவர்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.