செஞ்சேரிமலை என்பது தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில், சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும்.
இங்கு மலைமேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு நல்ல தோற்றத்துடன் காணப்படுகிறது. இப்பகுதியானது தென்னை விவசாயத்திற்குப் பெயர் பெற்று விளங்குகின்றது.
செஞ்சேரிமலை | |||
— சிற்றூராட்சி — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப | ||
ஊராட்சித் தலைவர் | முத்துமாணிக்கம் | ||
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் | ||
மக்களவை உறுப்பினர் | |||
சட்டமன்றத் தொகுதி | சூலூர் | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை | 2,458 | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
தன்னை அடைந்தார்க்கு மட்டும் இன்றி மனதில் நினைத்தார்க்கும் இன்பங்களையும் நல்வாழ்வையும் அளிக்கும் பொருட்டு அருள்மிகு மந்திரகிரிவேலாயுத சுவாமி என்னும் திருப்பெயருடன் ஆறுமுகப்பெருமானாய் எழில்மிகு மேனி தாங்கி அருளும் தலம் தென்சேரிமலை என்பதாகும். இத்தலம் கொங்கு வள நாட்டில் கோவை மாவட்டம்,சூலூர் வட்டம்,சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இத்தலம் குன்றுதோறடல் என்ற சிறப்பின் படியும் ஆதிபடைவீடு என்றும் சிறப்பாக வழங்கப்படுகிறது.
தேவர்களைத் துன்புறுத்தும் அசுர மன்னன் சூரபத்மனை அழிக்க முருகன் படைக்கப்பட்டான். முருகன் போருக்குப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், பார்வதி சிவபெருமானால் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசிக்க விரும்பினார். முருகன் தந்தையை அணுகியபோது, கடும் தவம் செய்த பிறகுதான் முடியும் என்றும், கடம்ப மரம், கங்கை நீர், தர்பை, மகாவிஷ்ணுவுக்கு சிவ தீக்ஷை பெற்ற சந்நிதி என நான்கு வேதங்கள் இருக்கும் இடத்தில்தான் செய்ய வேண்டும் என்றும் கூறினார்
முருகப்பெருமான் பூமிக்கு வந்து இத்தனை குணாதிசயங்கள் கொண்ட இடத்தைத் தேடத் தொடங்கினார். செஞ்சேரிமலையில் - கடம்ப மரம், தர்பை, ஞான தீர்த்த சுனை வடிவில் கங்கை நீர் மற்றும் மகாவிஷ்ணு சிவ தீக்ஷை பெற்ற சின்னமலை ஆகிய இடங்களில் எல்லாம் நேர்கோட்டில், அருகருகே அமைந்துள்ளன. அவர் இங்கே தவம் செய்தார், முழு திருப்தியடைந்த பிறகு, சிவன் மந்திரத்தை உபதேசித்தார் மற்றும் வெல்ல முடியாத சக்திகளையும் வழங்கினார். மந்திரம் இங்கு பரிபாலனம் செய்யப்பட்டதால், அது மந்திரகிரி ஆனது.
இந்த கோவில் முதலில் கரிகால சோழனால் கட்டப்பட்டது மற்றும் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் வீர பல்லாலனால் புதுப்பிக்கப்பட்டது
இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மூலவர் மந்திராசலமூர்த்தி / தண்டாயுதபாணி / வேலாயுத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். வேலாயுதம் தனது 12 கைகளுடன், சேவல் சின்னம் கொண்ட கொடியையும், இடது கையில் சேவலையும் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார். உற்சவர் முத்துக்குமாரர். விஷ்ணு பகவான் வலது கையில் சிவலிங்கத்துடன் அருள்பாலிப்பது இக்கோயிலின் சிறப்பு. நவகிரக சன்னதியில் சூரிய பகவான் மேற்கு நோக்கிய நிலையில் மற்ற கிரகங்கள் அவருக்கு எதிராக உள்ளன.
சாயிலோக தீர்த்தம், ஞான தீர்த்த சுனை, சரஸ்வதி தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கனர் சுனை மற்றும் வள்ளி தீர்த்தம் ஆகியவை இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தங்களாகும். கோடையில் கூட வறண்டு போகாத வற்றாத நீரூற்று இந்த மலையில் உள்ளது. ஸ்தல விருட்சம் என்பது கடம்ப மரம் (நியோலமார்க்கியா கடம்ப).
இங்கிருந்து மாவட்ட தலைநகரான கோயமுத்தூருக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் பல்லடம், காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, சூலூர், உடுமலைப்பேட்டை, பெதம்பம்பட்டி என அருகாமை நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இங்கு 1,765 பேர் வசிக்கின்றனர். இவற்றில் 49.02% பேர் ஆண்களும் 50.98% பேர் பெண்களும் வசிக்கின்றனர்.[சான்று தேவை]
இங்கு மலைமேல் அமைந்துள்ள மந்தரகிரி வேலாயுத சுவாமிக்கு வருடாவருடம் தேர்த் திருவிழா மிகவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 2 தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. முதல் தேர் செஞ்சேரிப்புத்தூர் தேர் இழுக்கப்படும். பிறகு இரண்டாவது தேர் செஞ்சேரிமலை தேர் இழுப்பர். இவ்விரு தேர்களையும் புதுப்பிக்க வருடாவருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்தும் தேர்த் திருவிழாவிற்கு பக்தர்கள் வருவதுண்டு.
செஞ்சேரிமலைக்கு அருகாமையில் அமைந்துள்ள மற்றொரு கோவில் சின்ன மலை பெருமாள் கோவில் ஆகும். இங்கு புரட்டாசி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறும். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இந்து அறநிலையத்துறை கீழ் கொண்டுவரப்பட்டது. இக்கோவில் மலைமேல் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article செஞ்சேரிமலை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.