எஸ்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
பி. வேலுமணி (இயற்பெயர்: சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி, பிறப்பு: 10 மே 1969) தமிழக அரசியல்வாதி ஆவார். 2006, 2011, 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகவும், பணியாற்றினார்.
S.P.Velumani சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி | |
---|---|
தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் | |
பதவியில் மே 2016 – ஏப்ரல் 2021 | |
முதன்மை அமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அமைச்சர் | |
பதவியில் மே 2014 – ஏப்ரல் 2016 | |
முதன்மை அமைச்சர் | ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி க. பழனிசாமி |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2011 | |
தொகுதி | தொண்டாமுத்தூர் |
பதவியில் 2006–2011 | |
தொகுதி | பேரூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 அக்டோபர் 1969 சுகுணாபுரம், குனியமுத்தூர், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | வித்யாதேவி |
பிள்ளைகள் | மகன் விகாஷ், மகள் சாரங்கி |
பெற்றோர்(s) | பழனிசாமி, மயிலாத்தாள் |
வாழிடம்(s) | கதவு எண்.07/1C, சுகுணாபுரம் கிழக்கு, குனியமுத்தூர் அஞ்சல், கோயம்புத்தூர் மாவட்டம் -641 008 |
வேலை | விவசாயம் |
இணையத்தளம் | நமக்காக எஸ்.பி.வி |
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ். பி. வேலுமணி கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் 05.10.1969 அன்று E. A. பழனிசாமி – மயிலாத்தாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கும் திருமதி வித்யாதேவிக்கும் கடந்த 11.03.1998-ல் திருமணம் நடைபெற்றது. எஸ். பி. வேலுமணி-வித்யாதேவி தம்பதிக்கு விகாஷ் என்ற மகனும், சாரங்கி என்ற மகளும் உள்ளனர். இவருக்கு எஸ். பி. அன்பரசன் என்ற மூத்த சகோதரரும், எஸ். பி. செந்தில்குமார் என்ற இளைய சகோதரரும் உள்ளனர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் முதுகலை பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் (MPhil) பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். தமிழக அரசியல்வாதியான இவர் 2006, 2011, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ல் முதன் முதலாக தமிழக அமைச்சராக பதவியேற்ற இவர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார்.
ஆரம்பம் முதலே அதிமுகவில் இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி, மறைந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. குனியமுத்தூர் நகர் மன்றத் தலைவராக இருந்தவர். 2006-ம் ஆண்டு பேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதேபோல், 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும் எஸ். பி. வேலுமணி பதவி வகித்து வருகிறார்.
கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து களப்பணியாற்றும் எஸ்.பி.வேலுமணி, தொண்டர்களோடு தொண்டர்களாக பழகுவதால் அவரை தொண்டாமுத்தூரின் தொண்டர் என அதிமுகவினர் அன்போடு அழைக்கின்றனர். 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தனித்தனி அணியாக இருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓரணியாக இணைய எஸ்.பி.வேலுமணி முக்கிய பங்காற்றியவர். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் அதிமுகவின் வெற்றிக்காக பம்பரமாக களப்பணியாற்றுபவர்.
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ்.பி.வேலுமணி, ஊராட்சி முதல் மாநகராட்சி வரை பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இல்லந்தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமைச்சராக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் இவரது பங்கு முக்கியமானது. 2,500 சதுர அடிக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி இணையதளம் வாயிலாக வழங்கப்படும் என அறிவித்து நடுத்தர மக்களின் பாராட்டுகளை பெற்றவர். சென்னையில் 2019-ம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு சென்னை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர். ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். கோவை வளர்ச்சிக்காக பில்லூர் மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டமும், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் அமைக்க வித்திட்டவர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து, செயலாக்கத்திற்கு கொண்டு வந்தவர். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் இந்தியாவிலேயே முதல்முறையாக கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தார்.
This article uses material from the Wikipedia தமிழ் article எஸ். பி. வேலுமணி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.