வைசேஷிகம்: பண்டைய இந்தியத் தத்துவம்

வைசேஷிகம் (Vaiśeṣika, சமக்கிருதம்: वैशेषिक) என்பது இந்திய மெய்யியலில் வேதத்தை ஏற்கும் ஆறு முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும்.

கணாதன் எனப்படும் கணபுஜா என்கின்ற குரு உருவாக்கிய சாத்திரம். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து அடையாளம் கண்டு கொள்வதற்கு அதன் சிறப்புத் தன்மையே இதன் அடிப்படை. அதன் சிறப்புத் தன்மையை ஆராய்வதால் இதற்கு வைசேடிகம் அல்லது வைசேஷிகம் என்று பெயர் பெற்றது. இந்திய தத்துவவியலில் தர்சனம் எனும் சொல் முதன்முதலில் வைசேடிக தத்துவ நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தத்துவ அறிஞர் தாஸ் குப்தா கூறுகிறார்.

கணாதரர், கானடா அல்லது கணபுஜா பற்றிய செய்திகள்

கணபுஜா என்பதற்கு அணுக்களை உண்பவர் என்று பொருள். இப்பெயர் வரக்காரணம், அவரது எளிமையை விளக்குவதாகும். அறுவடை முடிந்த நிலங்களில் சிதறிக்கிடக்கும் நெல், கோதுமை மற்றும் இதர தாணியங்களை பொறுக்கி அதனை சமைத்து உண்பவராம். தற்கால இந்தியத் தத்துவவியல் அறிஞர்களான குப்புசாமி சாத்திரி மற்றும் கார்பே இருவரும், கணாதரர் அல்லது கணபுஜரை நாத்திகவாதி என்று கருதுகின்றனர்.

வைசேடிக தத்துவம்

வைசேடிக தத்துவம் ஆறு ஆத்திகத் தர்சனங்கள் அல்லது வைதிக தர்சனங்களில் ஒன்று, மற்றைய ஆத்திக தர்சனங்கள் அல்லது வைதிக தர்சனங்கள் 1 சாங்கியம், 2 யோகம், 3 நியாயம், 4 பூர்வ மீமாம்சை , 5 வேதாந்தம். வைசேடிக தத்துவத்தில் ஒரு பொருளை நன்கு அறியும் அறிவுக்கு (பிரமா) பிரமாணம் எனப்பட்டது. வைசேடிகம் ஒரு பொருளை நான்கு வழிகளில் அறிய முடியும் எனக்கூறுகிறது. 1 உணர்தல் (பிரத்தியட்சம்) (நேரில் பார்த்து உணர்தல்), 2 ஊகம் (அனுமானம்) 3. உவமை, 4 வாய்ச்சொல் (சப்தம்) ஆகிய நான்கு முறைகளில் ஒரு பொருளைப் பற்றி விளக்கம் முடியும் என்றனர்.அதிர்ஷ்டம் எனும் தத்துவம் வைசேசிகம் கூறுகிறது.

வைசேடிகத்தின் காலம்

வைசேடிக சூத்திரத்தின் தொகுப்பு இன்று நம்மிடையே இல்லை. இருப்பினும் பௌத்த சமயம் மற்றும் சமண சமய நூல்களிலிருந்து மட்டுமே, வைசேடிக சூத்திரத்தின் சில விளக்கங்கள் அறிய இயலுகிறது. கி. பி., 4 - 5 நூற்றாண்டுகளுக்கு முன்னரே வைசேடிக தத்துவார்த்த சிந்தனைகள் பாரத நாட்டில் விளங்கி வந்தது.

வைசேடிகத்தின் உரைநூல்கள்

இராவண பாஷ்யம் எனும் உரைநூல் வைசேடிக தத்துவத்திற்கு இருப்பதாக தெரிகிறது. கி. பி. 5ஆம் நூற்றாண்டில், `பிரசஸ்பாதர்` என்பவர் எழுதிய `பதார்த்த-தர்ம-சங்கிரகம்` என்ற நூல் வைசேடிக தத்துவத்தை விளக்குவதாக உள்ளது. இதனை `பிரசஸ்பாத பாஷ்யம்` என்பர். இந்த பிரசஸ்பாத பாஷ்ய நூலைப் பற்றி பின்னர் பலர் எழுதிய நூல்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது. `வயோமசிவன்` என்பவர் எழுதிய (கி.பி.,8ஆம் நூற்றாண்டு) `வயோம சதி` , சீதரா எழுதிய கந்தலி என்ற நூல் (கி. பி. 10ஆம் நூற்றாண்டு), உதயணர் எழுதிய கிரணாவளி (கி. பி.,10ஆம் நூற்றாண்டு), ஆகிய நூல்களில் வைசேடிக தத்துவ விளக்க நூல்கள் பற்றிய விமர்சன குறிப்புகள் உள்ளது. நியாயம் (இந்து தத்துவம்) சூத்திரத்திற்கு வாத்சாயனர் கி. பி.,4ஆம் நூற்றாண்டில் வாத்ஸ்சாயன பாஷ்யம் எனும் நூலில் விமர்சனம் எழுதியுள்ளார்.

நியாயா - வைசேடிக கலப்புத் தத்துவம்

கிபி 200-ஆம் ஆண்டில் கோதமர் இயற்றிய நியாய தத்துவம் மற்றும் கணாதரர் இயற்றிய வைசேடிகமும் இணைந்து `நியாய - வைசேடிக தத்துவம்` உருவானது. நியாய-வைசேசிகம் தத்துவத்தில் கிரேக்க தத்துவ அறிஞர்களின் தாக்கம் உள்ளதாக இந்திய தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேற்கோள்கள்

உசாத் துணை

  • இந்தியத் தத்துவ இயல், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அலைகள் பதிப்பகம், சென்னை
  • இந்தியத் தத்துவக் களஞ்சியம், முனைவர். சோ. ந. கந்தசாமி, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்

வெளி இணைப்புகள்

Tags:

வைசேஷிகம் கணாதரர், கானடா அல்லது கணபுஜா பற்றிய செய்திகள்வைசேஷிகம் வைசேடிக தத்துவம்வைசேஷிகம் வைசேடிகத்தின் காலம்வைசேஷிகம் வைசேடிகத்தின் உரைநூல்கள்வைசேஷிகம் நியாயா - வைசேடிக கலப்புத் தத்துவம்வைசேஷிகம் மேற்கோள்கள்வைசேஷிகம் உசாத் துணைவைசேஷிகம் வெளி இணைப்புகள்வைசேஷிகம்இந்திய மெய்யியல்கணாதன்குருசமக்கிருதம் மொழிவேதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழமுதிர்சோலை முருகன் கோயில்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்வீரப்பன்ஆத்திசூடிபணவீக்கம்வேளாண்மைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சமூகம்சீமான் (அரசியல்வாதி)பிரீதி (யோகம்)திருப்பூர் குமரன்சொல்தமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்நாடு சட்டப் பேரவைஆய்த எழுத்துசூர்யா (நடிகர்)வாதுமைக் கொட்டைவிஷால்கார்த்திக் (தமிழ் நடிகர்)சடுகுடுமரபுச்சொற்கள்தண்டியலங்காரம்பள்ளுபூலித்தேவன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பள்ளிக்கூடம்தமிழ் நீதி நூல்கள்சங்க காலப் புலவர்கள்இல்லுமினாட்டிஜே பேபிசுடலை மாடன்அறிவியல்இந்திய மக்களவைத் தொகுதிகள்இந்தியத் தலைமை நீதிபதிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுத்துலட்சுமி ரெட்டிநீர் மாசுபாடுநிணநீர்க் குழியம்சுந்தரமூர்த்தி நாயனார்கூகுள்மருதம் (திணை)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ரஜினி முருகன்சப்ஜா விதைநீதி இலக்கியம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்உரைநடைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பழமொழி நானூறுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஓரங்க நாடகம்முல்லைக்கலிவன்னியர்சங்ககால மலர்கள்சயாம் மரண இரயில்பாதைஊராட்சி ஒன்றியம்சிவனின் 108 திருநாமங்கள்ரோசுமேரிவெப்பம் குளிர் மழைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அறுபடைவீடுகள்அறுபது ஆண்டுகள்ஆளி (செடி)ஒற்றைத் தலைவலிஅம்பேத்கர்குண்டலகேசிதொல். திருமாவளவன்தட்டம்மைசூரியக் குடும்பம்வைரமுத்துபெயர்ச்சொல்பஞ்சபூதத் தலங்கள்பர்வத மலைமுக்குலத்தோர்விஜயநகரப் பேரரசுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்முதல் மரியாதைஸ்ரீ🡆 More