மீன்பிடி தொழில் என்பது, மீன் பிடித்தல்,மீன் வளர்த்தல், மீன் அல்லது மீன் பொருட்கள் விற்பது, பதப்படுத்துவது,பாதுகாப்பது, சேமித்து வைப்பது, ஒரு இடத்தில் இருந்து மற்ற ஒரு இடத்திற்கு கொண்டு செல்லுவது, அல்லது இவை சம்பந்தபட்ட எந்த தொழிலையும் அடக்கியது ஆகும்.
இத்துறையின் வணிக செயல்பாடானது, மீன் மற்றும் இதர கடல் உணவு பொருட்களை, மனித நுகர்வு அல்லது பிற தொழில் செயல்முறைகளுக்கு உள்ளீடாக விநியோகம் செய்வது ஆகியவற்றை இலக்காக கொண்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வளரும் நாடுகளில் உள்ள 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பை சார்ந்து உள்ளது.
மூன்று பிரதான தொழில் துறைகள் உள்ளன:
மீன்பிடி தொழிலின் வணிக துறை கீழே உள்ளவற்றை அடக்கியது:
மீன்கள், வணிக மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு மூலம் அறுவடை செய்யப்படுகின்றன. உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) படி, 2005 ஆம் ஆண்டு உலக அறுவடை,வணிக மீன்பிடியால் கடலில் 93.3 மில்லியன் டன்,மற்றும் மீன் பண்ணைகள் உற்பத்தி 48.1 மில்லியன் டன்கள் ஆகும். கூடுதலாக, நீர் தாவரங்கள் (கடற்பாசி முதலியன) 1.3 மில்லியன் டன்கள் கடலில் கைப்பற்றப்பட்டன. மற்றும் 14.8 மில்லியன் டன்கள் மீன்வளர்ப்பில் தயாரிக்கப்பட்டன. கடலில் பிடித்த தனிப்பட்ட மீன் எண்ணிக்கை வருடத்திற்கு 0.97-2.7 டிரில்லியன் (மீன் பண்ணைகள் அல்லது கடல் முதுகெலும்பில்லாதவற்றின் எண்ணிக்கை அல்ல) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கீழே உள்ளது, 2011ல் உலக மீன்பிடி தொழிலில் ,பிடிப்பு மற்றும் மீன்வளர்ப்பு மூலம் அறுவடையான டன்களின் ஒரு அட்டவணை.
பிடிப்பு (டன்) | நீர் வேளாண்மை(டன்) | மொத்தம் (டன்) | |
---|---|---|---|
மொத்தம் | 94,574,113 | 83,729,313 | 178,303,426 |
நீர்வாழ் தாவரம் | 1,085,143 | 20,975,361 | 22,060,504 |
நீர்வாழ் விலங்கு | 93,488,970 | 62,753,952 | 156,202,922 |
உலகிலேயே அதிக உற்பத்தி செய்யும் நாடுகள், வரிசையில், சீன மக்கள் குடியரசு (ஹாங்காங் மற்றும் தைவான் நீங்கலாக),பெரு,ஜப்பான்,அமெரிக்கா,சிலி,இந்தோனேசியா,ரஷ்யா,இந்தியா,தாய்லாந்து,நார்வே, ஐஸ்லாந்து இருந்தன. அந்த நாடுகளின் உற்பத்தி கணக்கு, உலகின் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டது ; சீனாவின் கணக்கு மட்டும் உலகின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் வேளாண்மை(மீன் வளர்ப்பு) என்பது நீர்வாழ் உயிரினங்களை விவசாயம் செய்வது. மீன்பிடி போலல்லாமல், மேலும் மீன்பண்ணை எனவும் அழைக்கப்படும் மீன்வளர்ப்பு, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நீர்வாழ் உயிரனங்களை சாகுபடி செய்வது. கடலில் மீன் வளர்ப்பு, கடல்சார் சூழல்களில் மீன்வளர்ப்பு பயிற்சி செய்வதைக் குறிக்கிறது. குறிப்பிட்ட வகையான மீன் வளர்ப்பில் ஆல்காவளர்ப்பு(கெல்ப் /கடற்பாசி மற்றும் பிற பாசிகள் உற்பத்தி) மீன்வளர்ப்பு, இறால் பண்ணை,மட்டி மற்றும் பண்பட்ட முத்துவளர்ப்பு ஆகியவை அடங்கும்.
மீன் வளர்ப்பு, பொதுவாக, உணவுக்காக, தொட்டிகள் அல்லது உள்ளிட்ட குளங்களில் வணிக ரீதியாக மீன் வள்ர்ப்பது ஆகும். மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன் இனங்கள் கெண்டை,டிலேபியா,சால்மன்,பன்னா மற்றும் கெளுத்திமீன் ஆகியவை அடங்கும். கடலில் மீன்பிடிக்க அதிகரிக்கும் தேவையால்,வணிக மீன்பிடி நடவடிக்கைகள் அளவுக்கு அதிகபடியான மீன்பிடித்தலை விளைவிக்கின்றன. மீன் பண்ணை வளர்ப்பு, அதிகரிக்கும் மீன் மற்றும் மீன் புரதத்திற்கான சந்தை தேவைக்கு ஒரு மாற்று தீர்வு வழங்குகிறது.
வர்த்தக மீன் பிடித்தல் மற்றும் மீன் பண்ணைகள் மூலம் வழங்கப்படும் மீன்களை பதப்படுத்துதலே மீன் பதப்படுத்துதல் ஆகும். பெரிய, மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள் தாங்கள் மீன்பிடிக்க சொந்த கப்பல்கள் மற்றும் பிறரை சாராத மீன்பிடி தளங்களை வைத்துள்ளனர். தொழில் தயாரிப்புகள், வழக்கமாக, ஒட்டுமொத்தமாக,மளிகை சங்கிலிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு விற்கப்படுகின்றன.
மீன் பதப்படுத்துதலை, இரண்டு வகைகளாக பிரிக்கலாம். மீன்களை கையாளுதல்(பச்சை மீன்களை ஆரம்ப செயலாக்கம்) மற்றும் மீன் பொருட்கள் உற்பத்தி: மீன் பதப்படுத்துதலின் அம்சங்கள், மீன் பதப்படுத்தும் கப்பல், மீன் பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் மீன்பிடி கப்பல்களில் ஏற்படுகிறது.
மற்றொரு இயற்கையான உட்பிரிவு,புதிய மீன் சில்லறை வணிகம் மற்றும் கேட்டரிங் கடைகளுக்கு புதிய மீன்களை தகரத்தில் அடைத்தல் மற்றும் உறையவைத்தல் முதலிய முக்கிய முதல் விநியோகத்திலும்,குளிர்வித்த,சில்லறை வணிகம் மற்றும் கேட்டரிங் கடைகளுக்கு விநியோகத்திற்காகவும் உறைந்த மற்றும் தகர அடைப்புகளில் பாதுகாக்கப்பட்டபொருட்கள் உற்பத்தி செய்யும்இரண்டாவது செயலாக்கங்களிலும் உள்ளது.
மீன்பிடித்தலினால் தற்போது உலக மக்கள் தொகையின் 16%க்கு புரதம் வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல மீன்களின் சதை, பிரதானமாக, உணவு ஆதாரமாக மதிப்பிடப்படுகிறது; மீன்களில் பல சமைக்ககூடிய இனங்கள் உள்ளன. உணவாக எடுத்துக் கொள்ளும் மற்ற கடல் உயிர்கள் மட்டி,கடல் வெள்ளரி,பெண்மான் மற்றும் கிரஸ்ட் ஏசியன்ஸ் ஆகியவை அடங்கும்.
மீன் மற்றும் பிற கடல் வாழ்உயிரினங்களும் பல பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன: முத்துகள் மற்றும் முத்து சிப்பி, (சில கிளிஞ்சல்களின் உட்புற பரப்பிலுள்ள வெண்மையான பளபளப்புள்ள பூச்சு) சுறாவின் தோல் மற்றும் ரேவின்தோல். கடல் குதிரைகள், நட்சத்திர மீன்,கடல் முள்ளெலி கள், (அர்சின்ஸ்) மற்றும் கடல் வெள்ளரி பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. டைரியன் ஊதா கடல் நத்தைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு நிறமி ஆகும், செபியா, கணவாய் மீனின் இன்கி சுரப்பியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு நிறமி ஆகும். மீன் பசை,எல்லா வகையான பொருட்களிலும் அதன் பயன்பாட்டிற்காக நீண்ட நாட்கள் மதிப்பிடப்படுகிறது. மீன்பசைக்கூழ்,மது மற்றும் பீர் தெளிவுப்படுத்துதலுக்காக பயன்படுத்தப்படுகிறது. மீன் பால் அல்லது குழம்பு(போன்ற திரவம்), மீன் எண்ணெய்,மீன் உணவுக்காக, பதப்படுத்தப்பட்டபின், எஞ்சியுள்ள திரவத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உரகுழம்பு ஆகும்.
மீன்பிடி தொழிலில் "கடல் உணவு பொருட்கள் " என்ற சொற்கூறு பெரும்பாலும் "மீன்பொருட்கள்" என்பதற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.
மீன் சந்தைகள், மற்றும் மீன் மற்றும் பிற கடல் உணவுகளை வாங்கி விற்பனை செய்யும் வர்த்தக இடங்களாகும். அவைகள், மீனவர்களுக்கும் மீன் வியாபாரிகள் இடையேயும் நடக்கும் மொத்த வர்த்தகம், அல்லது தனிப்பட்ட நுகர்வோருக்கு கடல் உண்வு விற்பனை, அல்லது இரண்டுக்கும் அர்ப்பணிக்கப்பட்டவைகளாக இருக்கலாம். சில்லறை மீன் சந்தைகளில், ஒருவகை ஈரமான சந்தை, பெரும்பாலும் தெருவில் மீன்உணவு விற்பனை செய்கின்றன.
பெரும்பாலான இறால், உறைந்த நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் பல்வேறு பிரிவுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. உயிர் உணவு மீன் வர்த்தகம், மீனவ சமூகங்களை இணைக்கும் ஒரு உலகளாவிய முறை ஆகும்.
பாரம்பரிய மீன்பிடி தொழில், அல்லது கைவினைஞர் மீன்பிடி என்பவை, சிறிய அளவிலான வணிக அல்லது பிழைப்பு மீன்பிடி நடைமுறைகளை விவரிக்க பயன்படுத்தும் சொற்கூறுகள் ஆகும். குறிப்பாக கம்பி மற்றும் பாரம் இழுக்கும் கயிறு, அம்புகள் மற்றும் தூண்டில்கள், விசுறும் வலைகள் மற்றும் இழுவை வலைகள் போன்ற பாரம்பரிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பிடிப்பது ஆகும்.பெரிய அளவிலான நவீன வணிக நடைமுறைகள் மற்றும் பாரம்பரிய மீன்பிடி நடைமுறைகளுக்கு இடையேயான அழுத்தங்கள் பற்றி பேசும் போது, இந்த சொற்கூறுகள் பயன்படுத்தபட வேண்டும் அல்லது குறிப்பாக உதவி திட்டங்கள் அருகாமை பிழைப்பு மட்டங்களில் மீன்பிடித்தலை இலக்கு ஆக்கும்போது இந்த சொற்கூறுகள் பயன்படுத்தபட வேண்டும்.
பொழுதுபோக்கு மீன்பிடி தொழில்,மீன்பிடி ஆடை மற்றும் பாரம் இழுக்கும் கயிறு உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை, கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம், உரிமத்திற்கான கட்டணம் செலுத்துவது, மீன்பிடி புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வெளியிடுவது, பொழுதுபோக்கு மீன்பிடி படகுகள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம்,இடவசதி அளிப்பது, மற்றும் விடுதி, அதிகாரப்பத்திரம்களுக்கு மீன்பிடி படகுகள் ஏற்பாடு மற்றும் மீன்பிடி சாகசங்களை வழிகாட்டுதல் போன்ற வணிக நடுவங்களை கொண்டிருக்கிறது.
பூமியின் பரப்பில் 71% கடல் ஆகும் மற்றும் சுரண்டப்படும் கடல் ஆதாரஙகளின் மதிப்பில் 80%க்கு காரணம் மீன்பிடி தொழில் ஆகும். மீன்பிடி தொழில்,கடல் மீன் பிடிப்பு போன்ற பல்வேறு சர்வதேச மோதல்களை தூண்டியுள்ளது,(நுற்றாண்டின் தொடகத்தில் உச்சத்தை தொட்ட கடல் மீன் பிடிப்பு மோதல் மற்றும் அதுமுதல் படிப்படியாக சரிய தொடங்கியது. ஐஸ்லாந்து, ஜப்பான் மற்றும் போர்ச்சுக்கல் உலகிலேயே தனிநபருக்கான மிக அதிக கடல் உணவு நுகர்வாக இருக்கின்றன.
சிலி மற்றும் பெரு உயர் மீன் நுகர்வு நாடுகள் ஆகும், எனவே மீன் தொழில் தொடர்பான பிரச்சனைகள் இருந்தது. 1947 இல், சிலி மற்றும் பெரு முதலில் தங்கள் கரைக்காக 200 கடல் மைல்கள் தனி பொருளாதார மண்டலத்தை ஏற்றுகொண்டன. 1982 ல், ஐக்கிய நாடுகள் சபை முறையாக இந்த சொற்கூற்றை ஏற்றுக்கொண்டது. 2000 ஆம் ஆண்டுகளில், சிலி மற்றும் பெரு, அதிகப்படியான மீன்பிடி மற்றும் முறையான விதிமுறைகள் இல்லாததால் தீவிர மீன் நெருக்கடியை சந்தித்தன. இப்போது அப்பகுதியில் அரசியல் சக்தி விளையாட்டு மீண்டும் எழுந்து உள்ளது. 1950 களின் பிற்பகுதியில் இருந்து, கடல் ஆழமான பகுதியில் அடி மீன்பிடி படகுகள் சுரண்ட தொடங்கின.இதனால் பெரியஅளவில் மீன்கள் பிடிபட்டன. ஒரு வலுவான அடிப்படை உயிரினத்தொகுதி வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, 1990 களின் ஆரம்பத்தில் இருப்பு மிக குறைந்த அளவிற்கு சரிந்தது. இது ஒரு நன்கு அறியப்பட்ட சேர்வதற்கு அல்லாத அல்லாத போட்டிக்கு அல்லாத {பொருளாதார பொது நன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும், இதனால் தடையற்ற சவாரி பிரச்சினைகள் விளைந்தன.
ஐஸ்லாந்து உலகின் மிக பெரிய நுகர்வோரில் ஒருவர். மற்றும் 1972 ல், அதிக மீன்பிடிப்பைக் குறைக்க செய்யப்பட்ட ஐஸ்லாந்தின் பிரத்தியேக பொருளாதார மண்டல அறிவிப்பால் ஐஸ்லாந்து மற்றும் இங்கிலாந்து இடையே ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை, ஐஸ்லாந்தியம் ரோந்து கப்பல்கள் மற்றும் பிரித்தானிய போர் கப்பல்கள் இடையே நேரடி மோதல்கள், மீன் போர் என்று அழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம் பொதுவாக ஐரோப்பாவில், நாடுகள் மீன்பிடி தொழிலை மீட்க ஒரு வழி தேடி கொண்டிருக்கின்றனர். ஒரு அறிக்கையின் படி, ஐரோப்பிய ஒன்றியத்தின்அதிக மீன்பிடித்தல்,ஒரு ஆண்டில் 3.2 பில்லியன் யூரோக்கள் மற்றும் 100,000 வேலைகள் செலவில் முடிகிறது. எனவே ஐரோப்பா தொடர்ந்து அளவுக்கு அதிக மீன் பிடித்தலை தடுக்க சில கூட்டு நடவடிக்கைகளை தேடிக் கொண்டு இருக்கிறது.
ஜப்பான்,சீனா,மற்றும் கொரியா மிக பெரிய மீன் நுகர்வோர்களில் சில. மற்றும் தனிப்பட்ட பொருளாதார மண்டலம் பற்றி சில சர்ச்சைகள் அவைகளிடம் உள்ளன. 2011 இல், தீவிர நிலநடுக்கத்தால், புகுஷிமா அணு சக்தி வசதி சேதமடைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு, பெரிய அளவு அசுத்தமான நீர் கசிந்தது மற்றும் சமுத்திரத்தில் கலக்கிறது. டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) சுமார் 300 டன் அதிக கதிரியக்க நீர் கம்பெனி தளத்தில் ஒரு சேமிப்பு தொட்டியில் இருந்து கசிந்தது என்று ஒப்பு கொண்டது. குரொஷியா கரண்ட்டில், புகுஷிமா அருகே உள்ள கடல்,சுமார் 11 நாடுகள் மீன் பிடிக்கின்றன.. ஜப்பான், கொரியா, சீனா போன்ற சுற்றியுள்ள நாடுகள், அல்லாமல்,உக்ரைன்,ஸ்பெயின் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட குரோஷியா கரண்ட்டில் படகுகள் வைத்து இருக்கின்றன. செப்டம்பர் 2013 இல், தென் கொரியா புகுஷிமா அணு ஆலையில் இருந்து கதிரியக்க நீர் கசிவு காரணம் குறித்து, எட்டு ஜப்பானிய காவலில் (உள்ளூராட்சி) இருந்து அனைத்து மீன் இறக்குமதியையும் தடை செய்தது. [23] குறிப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article மீன்பிடி தொழில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.