சீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்டமாக, 1880 களின் மத்தியில் நிகழ்ந்த இரண்டு போர்கள், அபினிப் போர்கள் அல்லது ஆங்கிலோ-சீனப் போர்கள் என அழைக்கப்படுகின்றன.
இரண்டாவது போரில் பிரான்சும், பிரித்தானியாவுக்குச் சார்பாகப் போரில் கலந்து கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது, பிரித்தானிய இந்தியாவிலிருந்து அதிகரித்துவந்த அளவில் அபினி சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டமையாகும். சீனச் சமுதாயத்தில், உடல்நலம் மற்றும் சமுதாய வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தீங்கான பாதிப்புக்கள் காரணமாக, கிங் பேரரசர் (Qing Emperor) அபினியைச் சீனாவில் தடை செய்தார். தனது நாட்டு எல்லைக்குள் அபினியைத் தடை செய்த பிரித்தானியப் பேரரசு, சீனாவுக்குள் அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்தது. அந்த தடையையும் பொருற்படுத்தாது பிரித்தானியக் களங்கள் சீனாவுக்கும் அபினி வணிகத்தைத் தொடர்ந்தது. அதனால் அப்போது குவாங்தொவ் மாகாணத்தில் பணிபுரிந்த ஆளுநர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதுவே பிரித்தானியாவுக்கும் சீனப்பேரசுக்கும் இடையிலான போராகியது. அதனையே அபினிப் போர்கள் எனப்படுகின்றன.
அபினிப் போர்கள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
குவாங்தோவ் (கண்டன்) துறைமுகப்பகுதியில் போர் | |||||||||
| |||||||||
பிரிவினர் | |||||||||
பிரித்தானியப் பேரரசு பிரான்சு பேரரசு (1856–1860) ஐக்கிய அமெரிக்கா (1856 and 1859) | சிங் அரசமரபு |
முதலாம் அபின் போர் 1839 முதல் 1842 வரை நடந்தது. இந்த போரிலேயே பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவைக் கைப்பற்றிக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, பிரித்தானியா ஹொங்கொங்கை பிரித்தானியாவின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டது.
அதன் பிறகு மீண்டும் அபினி வணிகம் தொடர்பான, இரண்டாம் அபினிப் போர் 1856 முதல் 1860 வரை நடந்தது. இந்த போரின் முடிவில் பிரித்தானியப் படைகள் மேலும் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டது.
இந்த போர்களில் சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், அதனைத் தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட சமநிலையற்ற ஒப்பந்தங்களும் சிங் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாகின.
ஒல்லாந்தரின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிரித்தானியரும், அக்பர் ஆட்சிக் காலத்திலிருந்தே (1556-1605) இந்தியாவிலிருந்து அபினியை வாங்கிவந்தனர். 1757 இல், வங்காளத்தைக் கைப்பற்றிய பின்னர், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அபினியின் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும், தனியுரிமையை நிலைநாட்டியிருந்தது. வேறு பயிர்களுக்கு இல்லாதவகையில், முன்பணம் கொடுத்து அபினி உற்பத்தியாளர்களை ஊக்குவித்தும் வந்தனர். இந்த உற்பத்தி, கொல்கத்தாவில், பொதுவாக 400 விழுக்காடு இலாபத்துடன், ஏல விற்பனை மூலம் விற்கப்பட்டது.
1773 இல், வங்காளத்தின் ஆளுனர்-நாயகம் அபினி விற்பனையில் கம்பனியின் தனியுரிமையை மேலும் உறுதி செய்துகொள்ள, பாட்னாவிலிருந்த அபினிக் கூட்டமைப்பைக் (opium syndicate) கலைத்தார். பின்னர் வந்த ஐம்பது ஆண்டுகளாக, அபினியே கிழக்கிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் முக்கியமாக இருந்தது. சீனாவில் அபினி சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்ததால், கிழக்கிந்தியக் கம்பனி, அபினிக்காக மாற்றீடு செய்யமுடியாமல், தேயிலையைச் சீனாவிடமிருந்து கடனுக்கு வாங்கியது. ஆனால், அபினியைக் கொல்கத்தாவில் ஏலத்தில் விற்று, அது சீனாவுக்குள் கடத்திச் செல்லப்படுவதை அனுமதித்தது. 1797 ஆம் ஆண்டில், வங்காளத்துத்து அபினித் முகவர்களின் பங்கை இல்லாமல் செய்து, அபினிப் பயிர்ச் செய்கையாளர் நேரடியாகவே கம்பனிக்கு அபினியை விற்கும்படி ஏற்பாடு செய்து கொண்டது.
சீனாவுக்கான பிரித்தானியரின் அபினி ஏற்றுமதி, 1730 ஆம் ஆண்டில் 15 தொன் (ton) அளவாக இருந்தது, 1773 ஆம் ஆண்டில் 75 தொன்களாக உயர்ந்தது. ஒவ்வொன்றும் 64 கிலோகிராம் நிறையுள்ள அபினியைக்கொண்ட 2000 பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
1799 இல், சீனப் பேரரசு அபினி இறக்குமதி மீதான அதனது தடையை மீளவும் உறுதி செய்தது. 1810 ஆம் ஆண்டில் பின்வரும் ஆணை வெளியிடப்பட்டது:
இந்த ஆணை மிகக் குறைவான தாக்கத்தையே விளைவித்தது. சீன அரசாங்கம் பெய்ஜிங்கில் இருந்தது. தெற்கிலிருந்து, வடக்கில் மிகத்தொலைவில் நடைபெற்றுவந்த அபினிக் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசின் செயற்பாடின்மை, அபினியின் அடிமையாக்கும் தன்மை, கிழக்கிந்தியக் கம்பனியினதும், வணிகர்களினதும் அதிக இலாபம் பெறுவதற்கான பேராசை, பிரித்தானிய அரசின் வெள்ளிக்கான தாகம் என்பனவறின் கூட்டுவிளைவாக அபினி வணிகம் மேலும் வளர்ந்தது. 1820 ஆம் ஆண்டில், வங்காளத்திலிருந்து, சீனாவுக்கான அபினி வணிகம், சராசரியாக ஆண்டொன்றுக்கு, 900 தொன்களை எட்டியது.
This article uses material from the Wikipedia தமிழ் article அபினிப் போர்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.