தாவரவியல் பெயர் :செக்குவாய் டெண்ட்ரான் ஜைகாண்டியா Sequiadendron gigantea
குடும்பம்:டாக்சோடியேசியீ
கலிபோர்னியாவில் சியரா நெவாடா மலைத் தொடரில் வளர்கிறது. இது மற்ற மரங்களோடு வளர்கிறது. இது 200 முதல் 325 அடி உயரம் வளரக்கூடியது. இம்மரம் 275 அடி உயரமும் அடிமரம் 33 அடி விட்டமும், 100 அடி சுற்றளவும் உடையது. தரையிலிருந்து 8 அடி உயரத்திற்கு 30 அடியும், 100 அடி உயரத்தில் 20 அடி விட்டமும் கொண்டுள்ளது. இதன் பட்டை 2 அடி தடிமன் உடையது. 5000 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. இம்மரத்தின் பட்டை சிவப்பு நிறமாக இருக்கும். இலைகள் சிறியவை. விதை முற்றுவதற்கு 2 ஆண்டுகள் ஆகும். விதை முற்றினப் பிறகும் கனி 12 ஆண்டுகள் பச்சையாகவே மரத்தில் இருக்கும்.
இம்மரங்களை அழியாமல் பாதுகாக்க இவை வளரும் காட்டின் ஒரு பகுதியைச் செக்குவாயா பார்க்
என்று பெயரிட்டு பாதுகாத்து வருகின்றனர். மேலும் இம்மரங்களை வெட்ட கனிபோர்னியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே போக்குவரத்திற்கு இடைஞ்சல் உள்ள பகுதிகளில் இம்மரங்களை குடைந்து இதன் உள்பகுதியில் வண்டி செல்ல சாலை போட்டுள்ளனர்.
இம்மரம் 600 டன் எடை கொண்டுள்ளது. இதன் மூலம் 300 அறை கொண்ட வீடு கட்ட முடியும்.
| 1 || சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
This article uses material from the Wikipedia தமிழ் article பெரு மரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.