திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் (annexation of Tibet by the People's Republic of China), இந்நிகழ்வை திபெத்தின் அமைதியான விடுதலை என சீனப் பொதுவுடமைக் கட்சியும் மற்றும் திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு என திபெத்தியர்களின் மைய நிர்வாகம் மற்றும் திபெத்திய மக்களும் அழைக்கின்றனர்.சீனாவிற்கும், திபெத்திற்கும் 6 அக்டோபர் 1950 முதல் 23 மே 1951 முடிய நடைப்பெற்ற பனிப்போர் முடிவில், 1951-இல் செய்து கொள்ளப்பட்ட ஏழு அம்ச ஒப்பந்தம் மூலம் திபெத் நாடு, சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பனிப்போர் பகுதி | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
திபெத் (1912–1951) | People's Republic of China | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வாங் சன்கிராப் தூடோப் கபோய் கவாங் ஜிக்மே (கைதி) லாலு சேவாங் தோர்ஜி \ | மா சே துங் சோ என்லாய் சான் குவாஹூவா பான் மிங் | ||||||
படைப் பிரிவுகள் | |||||||
திபெத்திய இராணுவம் | சீன மக்கள் விடுதலை இராணுவம் |
சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் திபெத்திய அரசாங்கம் மற்றும் திபெத்திய சமூக அமைப்புகள் செயல்பட்டது. 1959 திபெத்தியக் கிளர்ச்சியின் போது, திபெத்திய பௌத்த மத குருவாக இருந்த 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்திலிருந்து நாடு கடந்து, இந்தியாவில் 28 ஏப்ரல் 1959 அன்று நாடு கடந்த திபெத்திய அரசை நிறுவினார். எனவே திபெத்தில் இருந்த திபெத்திய அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் கலைக்கப்பட்டது.
1950-இல் திபெத்தின் எல்லைப்புற பகுதியான குவாம்தோவை சீன இராணுவத்தினர் கைப்பற்றும் வரை, தலாய் லாமா டென்சின் கியாட்சோ தலைமையிலான அரசாங்கம் திபெத் (1912–1951) ஆட்சி செய்து கொண்டிருந்தது.
1956-இல் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு கிழக்கில் இருந்த காம் பகுதியில் சீன அரசு, நிலச்சீர்திருத்த சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்ததை அடுத்து, உள்ளூர் திபெத்திய மக்களுக்கும், சீன இராணுவத்திற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் உள்ளூர் திபெத்திய மக்கள், சீனா அரசுக்கு எதிராக 1959-இல் கிளர்ச்சிகள் நடத்தினர். 17 மார்ச் 1959 அன்று இக்கிளர்ச்சி திபெத்தின் தலைநகரான லாசா வரை பரவிய போது, 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ திபெத்தை விட்டு, இந்தியாவில் அடைக்கலம் அடைந்து, நாடு கடந்த திபெத்திய அரசை நிறுவினார். 1959 திபெத்திய கிளர்ச்சியின் போது 2,000 திபெத்தியர்கள், சீன இராணுவத்தால் கொல்லப்பட்டனர். திபெத்தில் தலாய் லாமா தலைமையிலான ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது.
எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து 29 மே 1951-இல் எவரெசுட்டு சிகரத்தில் முதன்முதலில் ஏறி சாதனை படைத்த டென்சிங் நோர்கே என்ற திபெத்திய செர்ப்பா இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார்.
The Tibet issue: Tibetan view, BBC, The Tibet issue: China's view, BBC
This article uses material from the Wikipedia தமிழ் article திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.