திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி (திருவுறந்தைப் பதிற்றுப்பத்தந்தாதி) ஒரு சிற்றிலக்கியம்.
இதனை இயற்றியவர் சி. வாஞ்சைலிங்க வைத்தியநாத செட்டியார். இது உறையூரிலுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்டுள்ளது இதனைத் திருத்தவத்துறை நிலக்கிழார் தம்பாச்சியாபிள்ளை தம் பொருட்செலவில் பதிப்பித்துள்ளார்.
"பதிற்றுப்பத்து" என்னும் தொடர் நூறு என்னும் எண்ணிக்கையைக் குறிக்கும். சேரர்களைப் போற்றும் சங்க கால நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. இந்த நூலுக்கு பூவை. கலியாணசுந்தர முதலியார், நாராயண சரவணர், சாமிநாத பிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் பாடிய சிற்றப்புப் பாயிரப் பாடல்கள் உள்ளன. அவை அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.
வண்ணமா மறையோன் முன்னா வானவர்க்கு அரசே போற்றி
வண்ணம் ஆர் அணங்கை ஏந்தும் மாதவன் போல் வருந்தா
வண்ணமா உறந்தை தன்னில் வந்து அடி காட்டி ஆண்ட
வண்ணம் ஓர் ஐந்தும் கொண்ட வள்ளலே போற்றி போற்றி
This article uses material from the Wikipedia தமிழ் article திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.