யூவால் நுவா அராரி (Yuval Noah Harari ; பிற.
24 பிப்ரவரி 1976) என்பவர் ஒரு இசுரேலிய வரலாற்றாசிரியர் ஆவார். இவர் செருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவருடைய வரலாற்று நூல்கள் அண்மையக் காலத்தில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
யூவால் நுவா அராரி | |
---|---|
2017-இல் ஹராரி | |
பிறப்பு | 24 பெப்ரவரி 1976 கீரியத் அடா, கைஃபா மாவட்டம், இஸ்ரேல் |
குடியுரிமை | இசுரேலியர் |
துறை | பெரும் வரலாறு, சமூகத் தத்துவம் |
பணியிடங்கள் | எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் (இளங்கலை இயேசு கல்லூரி, ஆக்சுபோர்டு (முனைவர்) |
ஆய்வேடு | வரலாறும் நானும்: மறுமலர்ச்சி இராணுவ நினைவுகளில் வரலாறு மற்றும் தனிப்பட்ட அடையாளங்களுக்கு இடையிலான போரும் உறவுகளும், அண் . 1450–1600 (2002) |
ஆய்வு நெறியாளர் | ஸ்டீவன் ஜே. கன் |
அறியப்படுவது | சேபியன்ஸ்--மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு ஹோமோ டியூஸ்: நாளையைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கம் 21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்' தடுக்கமுடியாத நாம்: தொகுதி 1 |
துணைவர் | இட்சிக் யாஹவ் |
கையொப்பம் |
இசுரேலின் கைஃபா மாவட்டத்தைச் ந்சேர்ந்த ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த யூவால் நுவா அராரி, செருசலம் எபிரேய பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தார். ஆக்சுபோர்ட்டில் ஆய்வுப் பட்டம் பெற்றார். இவர் ஒரு தீவிர காய்கறி உணவினர். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் தியானம் செய்கிறார். விபசான்னா முறை தியானம் இவர் வாழ்க்கையை மாற்றியது என்று கூறியிருக்கிறார். இவர் ஒரு ஒருபாலினச் சேர்க்கையர் ஆவார்.
சேபியன்ஸ்--மனிதகுல வரலாறு என்ற நூல் 2014 இல் இவர் எழுதி வெளிவந்த நூல் ஆகும். ஹோமோ டியூஸ்--நாளைய வரலாறு என்ற மற்றொரு நூல் 2015 இல் இவர் எழுதி எபிரேய மொழியில் வெளிவந்தது. பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பெற்றது. இந்த இரண்டு நூல்களும் உலக அளவில் அதிகளவு விற்பனை ஆகி உள்ளன. மனித குல வரலாறு குறித்து யூ டியூபில் இவர் ஆற்றிய பேச்சை பல்லாயிரம் இசுரேலியர்கள் காணவும் கேட்கவும் செய்தனர்.
மனித இனத்தின் இற்றைக் கால வளர்ச்சி, இனி வரும் காலத்தில் மனிதர்களின் நிலை, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்களா போன்றவற்றை எழுதி வருகிறார். செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் தளம் விரிவடைந்து வருவதால் 2050 ஆம் ஆண்டு வாக்கில் எதற்கும் பயன்படாத ஒரு வகையான மனிதர்கள் இருப்பார்கள் என்பது இவரது கணிப்பு.
வேலையில்லாதவர்கள் தொகையை விட எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாமல் இருப்பவர்கள் மிகுதியாக இருப்பார்கள் என்று கருத்துக் கொண்டுள்ளார்.
அளவுக்கு அதிகமாக உண்பதாலும் உடல் பருமனாக இருப்பதாலும் மக்கள் இறப்பது அதிகமாக உள்ளது. இந்த வகையில் செத்துப் போகிறவர்கள் பயங்கரவாத வன்முறைகளில் இறப்பவர்களைவிட மிகுதி.
விலங்குகளைப் பாதுகாக்கவேண்டும்; விவசாயத்தைப் பேணவேண்டும் என்று கருதுகிறார்.
This article uses material from the Wikipedia தமிழ் article யூவால் நுவா அராரி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.