மித்தானி இராச்சியம் (கிமு 1475 - 1275) (Mitanni) (/mɪˈtæni/; தற்கால வடக்கு சிரியா, மற்றும் தென்கிழக்கு அனதோலியாவின் பிரதேசங்களை கிமு 1475 முதல் கிமு 1275 முடிய ஆண்ட, இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான உரியன் மொழி பேசியவர்கள் ஆவார்.
மித்தானி இராச்சியத்தின் தலைநகரம் வாசுகன்னி ஆகும்.
மித்தானி இராசியம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1475–கிமு 1275 | |||||||||||
தலைநகரம் | வாசுகன்னி | ||||||||||
பேசப்படும் மொழிகள் | உரியன் மொழி | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
மன்னர் | |||||||||||
• கிமு 1475 | கிர்தா (முதல்) | ||||||||||
• கிமு 1275 | இரண்டாம் சத்துவரா (இறுதி) | ||||||||||
வரலாற்று சகாப்தம் | செப்புக் காலம் | ||||||||||
• தொடக்கம் | கிமு 1475 | ||||||||||
• முடிவு | கிமு 1275 | ||||||||||
|
மித்தானியர்கள் இட்டைட்டு பேரரசின் அமோரிட்டு நகரத்தை வீழ்த்தி, மெசொப்பொத்தேமியாவில் மித்தானி இராச்சியத்தை கிமு 1475ல் நிறுவினர்.
மெசொப்பொத்தேமியாவில் மித்தானியர்கள் பழைய அசிரியப் பேரரசுக்கும், மத்திய அசிரியப் பேரரசுக்கும் இடையே பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி தங்கள் இராச்சியத்தை நிறுவியவர்கள்.
துவக்கத்தில் எகிப்தின் 18வது வம்ச ஆட்சிக்கும், மித்தானியர்களுக்கும் கடும் பகை இருந்தது. இட்டைட்டுப் பேரரசின் ஆதிக்கத்தால், தங்களை காத்துக் கொள்ள மித்தானியர்களும், எகிப்தியர்களும் உடன்படிக்கை செய்துகொண்டனர்.
மித்தானியர்கள் யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகளுக்கு மேற்புறப் பகுதிகளை கிமு 1475 முதல் 1275 முடிய ஆண்டனர். 1275ல் மித்தானி இராச்சியம் இட்டைடுகள் மற்றும் அசிரியர்களின் தொடர் தாக்குதல்களால் 1275ல் மித்தானி இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. பின்னர் மத்திய அசிரியப் பேரரசில் மித்தானி ஒரு மாகாணமாக விளங்கியது.
ஆட்சியாளர்கள் | ஆட்சிக் காலம் | குறிப்புகள் |
---|---|---|
கீர்த்தர் | கிமு 1500 | |
முதலாம் சுத்தர்னா | கீர்தரின் மகன் | |
பரசாதாதர் | கீர்த்தரின் | |
சௌசதத்தர் | அசூர் நகரத்தை வெற்றி கொண்டவன் | |
முதலாம் ஆர்ததமன் | எகிப்திய பார்வோன்களுடன் உடன்படிக்கை செய்தல் | |
இரண்டாம் சௌசதத்தர் | தன் மகள் எகிப்திய பார்வோனுக்கு மணமுடித்தல் | |
அர்தசுமாரன் | இரண்டாம் சௌசதத்தரின் மகன் | |
துஷ்ராத்தன் | கிமு 1350 | |
இரண்டாம் அர்தசுமாரன் | இட்டைட்டுக்களுடன் போர் ஒப்பந்தம் செய்தல் | |
மூன்றாம் சுத்தார்னன் | ||
சட்டிவாசன் அல்லது குருதிவாசன் | மித்தானி இராச்சியம், இட்டைட்டு பேரரசின் கீழ் சிற்றரசு ஆதல் | |
சத்துவாரன் | அசிரியப் பேரரசில் மித்தானி சிற்றரசு ஆதல் | |
வாசசத்தன் | சத்துவாரனின் மகன் | |
இரண்டாம் சத்துவாரன் | அசிரியர்கள் மித்தானி இராச்சியத்தை கைப்பற்றும் போது இருந்த இறுதி அரசன் |
This article uses material from the Wikipedia தமிழ் article மித்தானி இராச்சியம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.