சங்க நூலான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன.
இந்தத் தொகுப்பில் உள்ள 10 பாடல்களைப் பாடிய புலவர் பாலைக் கௌதமனார் (பாலை = பாலக்காடு)
பாடப்பட்ட அரசன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். | பல்யானைச் செல் | குட்டுவன். இவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி.
இந்த அரசன் தன்னைப் பாடிய புலவரிடம் வேண்டியதைக் கேட்டுப் பரிசிலாகப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். புலவரோ தானும் தன் பார்ப்பனியும் சுவர்க்கம் புக ஆவன செய்யவேண்டும் என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக்கொண்டு அதற்காக வேள்வி செய்தான். 10-ஆவது வேள்வியின் முடிவில் புலவர் பார்ப்பானும், அவர் மனைவி பார்ப்பனியும் மக்களின் பார்வையிலிருந்து மறைந்தனர்.
கொங்கரை வென்றான். அகப்பா நகரின் கோட்டையைக் கைப்பற்றினான். கொங்கர் தம் நாட்டில் பாறைகளை உடைத்து ஆழமாகக் கிணறு தோண்டி, கயிற்றில் 'பத்தல்' (வாளி) கட்டி நீர் இறைக்கும்போது பாட்டுப் பாடிக்கொண்டே நீர் இறைப்பார்களாம். இந்தப் பாட்டுதான் 'கயிறுகுறு முகவை'
வளமுடன் விளங்கிய பகைநாடு இவன் தாக்குதலுக்குப் பின் வளம் குன்றிப்போன காட்சி இப் பாடலில் சொல்லப்படுகிறது. 'பொலந்தார்க் குட்டுவன்' என்று இவன் சிறப்பிக்கப்படுகிறான். வயிரியர் பாடல் இவனுக்குச் சிறிதளவே மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும் இவன் அவர்களுக்குப் 'பெருங்கலம் வீசி' மகிழ்பவன்.
நாட்டில் நல்லமழை பெய்யவும், மனைவி, மக்கள், மறவர் நலமுடன் வாழவும் வகைசெய்து நல்லாட்சி நடத்தினான்.
தோட்டிமலைக் கோட்டையை அழித்தான். தோட்டி = பார்க்க; தொட்டபெட்டா \ தோட்டி மலை
'பெரும்பல் யானைக் குட்டுவன்' என்று இவன் குறிப்பிடப்படுகிறான். இரும்பில் கூற்றம் என்னும் நாட்டுப்பகுதியை வென்றான். அதன் அழிநிலையைச் சுட்டிக் காட்டிப் புலவர் அந்நாட்டுக்கு உதவுமாறு குறிப்பால் அறிவுறுத்துகிறார்.
குட்டுவன் நாட்டில் மக்கள் பூசலிடும் ஒலி கேட்கும். எருது சாகாட்டை (வண்டியை) இழுத்துக்கொண்டு நெய்தல் வயல்களில் செல்லும்போது அதன் உருளி சேற்றில் மாட்டிக்கொள்ளும். அப்போது சாகாட்டாளர் (வண்டிக்காரர்) சக்கரத்தைத் தூக்கிக்கொண்டே எருதுகளை ஓட்டும் ஓசையை எழுப்புவர். இந்த ஓசைதான் அவன் நாட்டில் கேட்கும் பூசல்.
குட்டுவன் நாட்டில் ஒரே ஒரு பூசல். அது மக்கள் பூசல் அன்று. உவலைப் பூக்கள் மிதக்கப் பேரியாற்றில் பெருகிவரும் வெள்ளத்தின் பூசல். (பூசல் = போரிடும் ஓசை)
'பெரும்பல் யானைக் குட்டுவன்' என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளதால் இவனது யானைப்படையின் பெருக்கத்தை உணரமுடிகிறது.
வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து குட்டுவனைத் தாக்கினர். குட்டுவன் கடவுள் பேணிப் பெருஞ்சோற்றுப் பிண்டம் கொடுக்கப்போவதாக் கூறிக்கொண்டு முரசை முழக்கினான். அதனைக் கேட்ட வேந்தரும் வேளிரும் தமக்கு அரண்களைக் கடலில் அமைத்துக்கொள்ளலாமா, காட்டில் அமைத்துக்கொள்ளலாமா என்று எண்ணிப் பார்த்துக்கொண்டு நடுங்கலாயினர்.
காண்க; ஐந்திணை வளம் பாடல் 30
This article uses material from the Wikipedia தமிழ் article மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.