மானிப்பாய் இந்துக் கல்லூரி (Manipay Hindu College) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயர் பாடசாலை ஆகும்.
Manipay Hindu College மானிப்பாய் இந்துக் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
சங்கரப்பிள்ளை வீதி, மானிப்பாய், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை | |
அமைவிடம் | 9°42′53.10″N 79°59′44.40″E / 9.7147500°N 79.9956667°E |
தகவல் | |
வகை | பொதுப் பாடசாலை 1AB |
குறிக்கோள் | For God and Country (கடவுளுக்காகவும் நாட்டுக்காகவும்) |
நிறுவல் | சூலை 4, 1910 |
பள்ளி மாவட்டம் | வலிகாமம் கல்வி வலயம் |
ஆணையம் | வட மாகாண சபை |
பள்ளி இலக்கம் | 1012020 |
ஆசிரியர் குழு | 33 |
தரங்கள் | 1-13 |
பால் | ஆண்கள் |
வயது வீச்சு | 5-18 |
மாணவர்கள் | 914 |
கற்பித்தல் மொழி | தமிழ் |
இணையம் | manipayhinducollege.lk |
1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் கருத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் மானிப்பாயைச் சேர்ந்த செல்வந்தர் வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் 1910, சூலை 4 ஆம் நாள் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதல் கட்டிடமாக சங்கரப்பிள்ளை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்காக அவர் இடத்தையும் பணத்தையும் கொடுத்தார்.
பின்பு 1923 ம் ஆண்டு வாகீசர் பிராத்தனை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 1954 சூன் 2 இல் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களால் பெரிய நூலகம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. பின் 1955 இல் செல்லமுத்து கட்டிடமும், வீரசிங்கம் கட்டிடமும் அமைக்கப்பட்டன. 1965 இல் முத்துவேற்பிள்ளை கட்டிடமும் இரசாயன, பௌதீக ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. அடுத்து 1970ல் பேராயிரவர் கட்டிடமும் 1973 ல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டிடமும் அமைக்கப்பட்டன. பின்பு 1980 ல் வீரசிங்கம் நிர்வாகக் கட்டிடமும் 1982 ல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கட்டிடமும் 1983ல் 3 மாடி கட்டிடமான சாரி மண்டபமும் அமைக்கப்பட்டன.
கடவுளுக்காகவும், நாட்டுக்காகவும்
சமூகப் பொருத்தப்பாடும் பல்துறை ஆற்றல்களும் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்
மாணவர்களின் உடல், உள, சமூக, ஆன்மீக செயற்பாடுகளில் அர்ப்பணிப்புமிக்க உத்தம நிலையை எய்துவதற்கு, வளங்களையும் வாய்ப்புக்களையும் சிறப்பாக ஒழுங்கமைத்தல்
1910 – 1911 | திரு S.வீரசுவாமிப்பிள்ளை |
1911 – 1913 | திரு P.சபாபதிப்பிள்ளை |
1913 – 1914 | திரு G.A.ஷிவா ராவ் |
1914 – 1915 | திரு ஆ.சபாரட்ணசிங்கம் |
1915 – 1917 | திரு T.P.ஹட்சன் பரமசாமி |
1917 – 1920 | திரு J.H.குரோஸ்டே |
1920 – 1921 | திரு S.சிவபாதசுந்தரம் |
1921 – 1922 | திரு.சின்னத்தம்பி மயில்வாகனம் (சுவாமி விபுலானந்தர்) |
1922 – 1952 | திரு வி.வீரசிங்கம் |
1952 – 1955 | திரு S.நவரட்ணம் |
1956 – 1972 | திரு R.முத்துவேற்பிள்ளை |
1972 – 1979 | திரு M.பேராயிரவர் |
1979 – 1983 | திரு S.T.சாறி |
1983 | திரு P.சுந்தரலிங்கம் (பதிலதிபர்) |
1983 – 1989 | திரு S.V.மகேசவேலு |
1989 – 1998 | திரு C.கேசவராயர் |
1998 – 2004 | திரு மு.சண்முகநாதன் |
2004 – 2005 | திரு ஆ.ஜெகநாதன் (பதிலதிபர்) |
2005 – 2015 | திரு Capt.S.சிவநேஸ்வரன் |
2015 – 2018 | திரு M.இந்திரபாலா (பதிலதிபர்) |
2018 – 2020 | திரு S.இந்திரகுமார் (பதிலதிபர்) |
2020 - இன்றுவரை | திரு.S.இளங்கோ |
மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவர்கள் சுந்தரர், சம்பந்தர், மானிக்கர், வாகீசர் என நான்கு இல்லங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். வருடந்தோரும் முதலாம் தவணையின் நடுப்பகுதியில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்றன.
1924ம் ஆண்டு அமரர் திரு.V.வீரசிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றிய காலத்தில் நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டு முதன் முதலாக இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
சைவ சமயத்தில் நால்வர் அல்லது நால்வர் பெருமக்கள் அல்லது சமயகுரவர் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (வாகீசர்), சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்), மாணிக்கவாசகர் ஆகியோரது பெயர்கள் இல்லங்களிற்கு சூட்டப்பட்டன.
இல்லம் | நிறம் |
---|---|
சுந்தரர் | 🟩 பச்சை |
சம்பந்தர் | 🟥 சிவப்பு |
மாணிக்கர் | 🟦 நீலம் |
வாகீசர் | 🟨 மஞ்சள் |
This article uses material from the Wikipedia தமிழ் article மானிப்பாய் இந்துக் கல்லூரி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.