ந. வீரமணி

ந.

வீரமணி ஐயர் (15 அக்டோபர் 1931 – 8 அக்டோபர் 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.

ந. வீரமணி ஐயர்
ந. வீரமணி
பிறப்பு(1931-10-15)அக்டோபர் 15, 1931
இணுவில், யாழ்ப்பாணம்
இறப்புஅக்டோபர் 8, 2003(2003-10-08) (அகவை 71)
கல்விஆசிரியர்

மானிப்பாய் இந்துக் கல்லூரி

இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயம்
பணிஅரசுப்பணி
வாழ்க்கைத்
துணை
ருக்மணி அம்மையார்

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.

கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.

ந. வீரமணி 
சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயர்

பாடல்கள் இயற்றல்

தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள்மீதான பாடல்களையும் இயற்றினார்.

`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

இயற்றிய உருப்படிகள்

72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.

கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார். சமற்கிருதத்திலும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில் சிவகாமி அம்மன்,மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் மலேசியா வாசுதேவன், நித்தியஸ்ரீ, மகாநதி ஷோபனா]] ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப்பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.

இறுதி நாட்கள்

கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music) தகைமைகளைக் கொண்டிருந்த வீரமணிஐயர் அவர்கள் தனது அரச பணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.

யாழ்ப்பாணத்தில் கொழும்புஸ்டூடியோ உரிமையாளர் திரு.அ. குகதாசன் அவர்களின் உதவியோடு இவர் பல புத்தங்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் கலைத்துறைக்கும், அவற்றைப் புத்தகமாக அச்சிட உதவும் புளொகுகளை அமைத்து வந்த கொழும்பு ஸ்ரூடியோ, இவருக்குப் பேருதவிகள் புரிந்துள்ளது. அத்தோடு இவர் திரு அ.குகதாசன் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

விருதுகளும் பட்டங்களும்

  • கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இவருக்கு நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் சாகித்ய சாகரம்' என்ற சிறப்புப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  • 1982 ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீத சபை பொன்விழாவில் கவிமாமணி என்ற சிறப்பு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  • இயல் இசையில் இவருக்கு இருந்த மேன்மையால் இயலிசை வாரிதி, மஹா வித்துவான் என்ற சிறப்பு விருதுகள் வழங்கப்படன.
  • 1999 அக்டோபர் 6 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கௌரவ முதுமாணி (எம்.ஏ.) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இயற்றிய பாடல்கள்

இயற்றிய சாகித்யங்கள்

  • கற்பகவல்லி நின் பொற்பதங்கள் (ராகமாலிகை)- பாடியவர்: டி. எம். செளந்தரராஜன்
  • சின்ன வயதினிலே (சாகித்யம்) - பாடியவர்: சுதா ரகுநாதன்
  • சரஸ்வதி வீணை (ராகமாலிகை) - பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்
  • தசாவதாரம் ( ராகமாலிகை)
  • என் முகம் பாராயோ சண்முகனே (விருத்தம்)- பாடியவர்: மகாராஜபுரம் சந்தானம்
  • ஏனடா முருகா
  • என்னடி பேச்சு சகியே
  • கஜமுகா
  • குஞ்சரன் சோதரா
  • குழல் ஊதி விளையாடி
  • மட்டுநகர்
  • நவரச நாயகி
  • சாரங்கன் மருகனே
  • வண்ண வண்ண
  • கற்பக விநாயகனே
  • தாமரை இதழிலே நாதம் கேட்குதடி
  • நயினையம்பதி

வெளி இணைப்புகள்

Tags:

ந. வீரமணி வாழ்க்கைக் குறிப்புந. வீரமணி பாடல்கள் இயற்றல்ந. வீரமணி இயற்றிய உருப்படிகள்ந. வீரமணி இறுதி நாட்கள்ந. வீரமணி விருதுகளும் பட்டங்களும்ந. வீரமணி இயற்றிய பாடல்கள்ந. வீரமணி இயற்றிய சாகித்யங்கள்ந. வீரமணி வெளி இணைப்புகள்ந. வீரமணிஈழம்பாபநாசம் சிவன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கோயம்புத்தூர்பாரதி பாஸ்கர்முதலாம் உலகப் போர்தமிழர் நிலத்திணைகள்அம்மனின் பெயர்களின் பட்டியல்மீன் வகைகள் பட்டியல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மகாபாரதம்ஜெ. ஜெயலலிதாசீவக சிந்தாமணிதெலுங்கு மொழிகுகேஷ்உத்தரகோசமங்கைதிருவருட்பாமாதவிடாய்பரிவர்த்தனை (திரைப்படம்)மு. க. ஸ்டாலின்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நிலாஆண்டு வட்டம் அட்டவணைஇந்திய புவிசார் குறியீடுபரிதிமாற் கலைஞர்திருச்சிராப்பள்ளிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்விஜய் (நடிகர்)குற்றியலுகரம்ஆப்பிள்அருந்ததியர்செங்குந்தர்சுகன்யா (நடிகை)புலிமுருகன்மயங்கொலிச் சொற்கள்வேர்க்குருஇந்திய மக்களவைத் தொகுதிகள்கீழடி அகழாய்வு மையம்திருமணம்அன்னை தெரேசாதைப்பொங்கல்தங்கராசு நடராசன்தமிழ் மாதங்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுநவரத்தினங்கள்தமிழ் எண்கள்பள்ளிக்கரணைமண்ணீரல்சுய இன்பம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்வேலைக்காரி (திரைப்படம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பால கங்காதர திலகர்கலித்தொகைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கினோவாசுடலை மாடன்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்மஞ்சள் காமாலைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இல்லுமினாட்டிமியா காலிஃபாசுபாஷ் சந்திர போஸ்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திய தேசிய காங்கிரசுவெண்பாகொடைக்கானல்பட்டினப் பாலைமோகன்தாசு கரம்சந்த் காந்திபள்ளுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கல்விக்கோட்பாடுமூவேந்தர்மனித வள மேலாண்மைமயக்கம் என்ன🡆 More