பிரம்மன் கோயில்அல்லது இறைவன் கோவில் (Erawan Shrine) அல்லது ஐராவதம் கோயில் (Airavata Shrine அல்லது Shrine of Lord Brahma the Great), தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரத்தில் அமைந்த இந்து சமயக் கடவுளர்களில் திருமூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
இறைவன் கோவில் Erawan Shrine தாவோ மகா புரொம் கோவில் Thao Maha Phrom Shrine | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 13°26′38″N 100°19′21″E / 13.44397°N 100.32256°E |
சமயம் | பௌத்தம் |
மாகாணம் | பேங்காக் |
மாவட்டம் | பத்தும் வான் மாவட்டம் |
17 ஆகத்து 2015இல் இக்கோயிலின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 125 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் பதும் மாவட்டத்தின், இரட்சதர்மி சாலையின், இரட்சபிரசாங் சந்திப்பில் அமைந்த கிராண்ட் அயத் எரவான் விடுதி அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் பல வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. திருமூர்த்தி, இலக்குமி, விநாயகர், இந்திரன், திருமால் மற்றும் கருடனுக்கான கோயில்கள் இதனருகே அமைந்துள்ளது.
எராவான் பிரம்மன் கோயில், 1956இல் தாய்லாந்து அரசின் எரவான் விடுதி அருகே, இத்தாலி நாட்டின் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article பிரம்மன் கோயில், தாய்லாந்து, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.