உலக அமைதி மாநாடு என்றும் அழைக்கப்படும் பாரிசு அமைதி மாநாடு, 1919 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளில் பாரிசில் நடந்தது.
இதன் நோக்கம் அமைதியை முதலாம் உலகப் போரின் நட்பு நாடுகளுக்கும் முதல் உலகப் போரில் தொல்வியடைந்த மத்திய சக்திகள் நாடுகளுக்கும் இடையில் உருவாக்குவது.
இந்த மாநாட்டில் பங்கேற்பாளர்களின் பட்டியல் 32 நாடுகள் மற்றும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அதன் முக்கிய முடிவுகள் உலக நாடுகள் சங்கம் மற்றும் தோற்கடிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஐந்து சமாதான ஒப்பந்தங்களை உருவாக்குவது; முக்கியமாக பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு, செர்மனி மீது இழப்பீடு விதித்தல் மற்றும் புதிய தேசிய எல்லைகளை உருவாக்குவது மிக முக்கியமானவை ஆகும்.
ஆத்திரேலிய அரசாங்கங்களுக்கு முதலில் மாநாட்டிற்கு தனி அழைப்புகள் வழங்கப்படவில்லை, ஆனால் பிரித்தானிய தூதுக்குழுவின் ஒரு பகுதியாக பிரதிநிதிகளை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சப்பான் "இன சமத்துவ விதி" யை சேர்க்ள 13 பிப்ரவரி அன்று நாடுகளின் உடன்படிக்கையில் சப்பான் முன்மொழிந்தது. :
சீனக் குழுவுக்கு வெலிங்டன் கூ மற்றும் காவ் ருலின் ஆகியோருடன் லூ செங்-சியாங் தலைமை தாங்கினார். மேற்கத்திய சக்திகளுக்கு முன்னர், சாண்டோங்கிற்கு ஜெர்மனியின் சலுகைகளை சீனாவுக்கு திருப்பித் தருமாறு கோரினார். மாநாட்டில் சீனக் குழு மட்டுமே கையெழுத்திடும் விழாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
மூன்று பேர் கொண்ட தூதுக்குழுவை பாரிசுக்கு அனுப்ப கொரிய தேசிய சங்கம் மேற்கொண்டது, ஆனால் அனுப்ப முடியவில்லை. சீனா மற்றும் ஹவாயில் இருந்து கொரியர்களின் தூதுக்குழு அங்கு சென்றது. அதில் சாங்காயில் உள்ள கொரிய தற்காலிக அரசாங்கத்தின் பிரதிநிதி கிம் கியூ-சிக் இருந்தார் . சர்வதேச மன்றத்தில் சப்பானை கேள்விக்கு உட்படுத்தும் வாய்ப்பிற்காக ஆவலுடன் இருந்த சீனர்கள் அவர்களுக்கு உதவினார்கள். அந்த நேரத்தில் சீன தலைவர்கள், சுன் இ சியன் உட்பட, அமெரிக்க தூதர்களிடம், மாநாடு கொரிய சுதந்திரம் குறித்த கேள்வியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள். சீனாவைத் தவிர, எந்தவொரு நாடும் கொரியர்களை மாநாட்டில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனெனில் அது ஏற்கனவே சப்பானிய காலனியின் நிலையை கொண்டிருந்தது. கொரிய தேசியவாதிகள் மாநாட்டிலிருந்து ஆதரவைப் பெறத் தவறியது வெளிநாட்டு ஆதரவு குறித்த அவர்களின் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது.
மாநாட்டில் பெண்கள் குழுவால் பெண்களின் அடிப்படை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளான வாக்குரிமை போன்றவற்றை அமைதி கட்டமைப்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரைத்தது, ஆனால் அவர்களை மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அதனால் மகளிர் வாக்குரிமைக்கான பிரெஞ்சு ஒன்றியத்தின் தலைவரான மார்குரைட் டி விட்-ஸ்க்லம்பெர்கரின் தலைமையில் ஒரு கூட்டணி மகளிர் மாநாட்டை (IAWC) 10 பிப்ரவரி முதல் 10 ஏப்ரல் 1919 வரை மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து உலக நாடுகள் சங்கம் (League of Nations) உடன்படிக்கையின் பிரிவு 7 ல் பெண்கள் பிரச்சனைகள் மற்றும் உரிமைகள் சார்ந்த அறிக்கைகள் சேர்க்கப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article பாரிசு அமைதி மாநாடு, 1919-1920, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.