குட்டிக் கடற்கன்னி (The Little Mermaid, டேனிய மொழி: Den lille havfrue) என்பது டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய கதையாகும்.
இந்தக் கதை ஒரு இளம் கடற்கன்னியினைப் பற்றியதாகும். குழந்தைகளுக்கான விசித்திரக் கதைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த கதை முதன்முதலில் 1837 இல் வெளியிடப்பட்டது.
"தி லிட்டில் மெர்மெய்ட்" | |
---|---|
ஆசிரியர் | ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் |
தொடக்கத் தலைப்பு | "Den lille havfrue" |
நாடு | டென் |
மொழி | டேனிய மொழி |
வகை(கள்) | விசித்திரக் கதைகள் |
வெளியீட்டாளர் | சி.ஏ. ரீட்ஸல் |
வெளியிட்ட நாள் | 7 ஏப்ரல் 1837 |
ஒரு இளம் கடற்கன்னி கடலில் மேற்பரப்பிற்குள் உலாவும் போது இளவரசன் ஒருவனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனுக்காக மனித உருவம் பெற முயற்சி செய்து வெற்றி காண்கிறாள்.
இந்தக் கதையின் நினைவாக கோப்பென்ஹேகன் துறைமுகத்தில் பாறையின் மீது கடற்கன்னி அமர்ந்திருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
"தி லிட்டில் மெர்மெய்ட்" கதை 1836 இல் எழுதப்பட்டது. ஏப்ரல் 7, 1837 அன்று டென்மார்க்கின் கோபனாவன் எனுமிடத்தில் சி. ஏ. ரீட்ஸல் என்பவரால் பேரி டெயில்ஸ் டோல்ட் பார் சில்ரலன் (Fairy Tales Told for Children) புத்தகத்தின் முதல் தொகுப்பில் வெளியிடப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article குட்டிக் கடற்கன்னி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.