காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926 – ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர்.
இவர் 1952 ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 1996 ஆண்டு லியாண்டர் பயஸ் டென்னிசில் வெண்கலப் பதக்கத்தைப் பெறும் வரை இதுவே இந்தியர்களின் ஒரே தனிநபர் பதக்கம் ஆகும்.இவர் ஒரு விளையாட்டு வீரர் ஆக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தாலும், இவரின் இறுதிக் காலம் வறுமையிலே முடிந்தது.
காசாபா தாதாசாகேப் சாதவ் Khashaba Jadhav | |
---|---|
பிறப்பு | ஜனவரி 15, 1926 |
இறப்பு | ஆகஸ்ட் 14, 1984 |
இருப்பிடம் | கராத், சதாரா மாவட்டம், மகாராஷ்டிரா,இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | மற்போர் வீரர் |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
ஆண்களுக்கான மற்போர் | ||
1952 ஹெல்சிங்கி | Bantamweight |
இவரது வாழ்க்கையை ’பாக்கெட் டைனமோ' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article காசாபா தாதாசாகேப் சாதவ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.