இரண்டாம் அர்தசெராக்சஸ் (Artaxerxes II) பாரசீகத்தின் (தற்கால ஈரான்) அகாமனிசியப் பேரரசை கிமு 405 முதல் கிமு 358 முடிய ஆண்ட பேரரசர் ஆவார்.
இவர் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் டேரியசின் மகன் ஆவார். இவருக்குப் பின்னர் அகாமனிசியப் பேரரசை ஆண்டவர் மூன்றாம் அர்தசெராக்சஸ் ஆவார். இவர் சொரோஷ்டிரிய சமயத்தை பின்பற்றினார். இவரது கல்லறை தற்கால ஈரானின் பெர்சேபோலிஸ் நகரத்தில் உள்ளது.
இரண்டாம் அர்தசெராக்சஸ் 𐎠𐎼𐎫𐎧𐏁𐏂 | |
---|---|
பாரசீகப் பேரரசர் | |
மன்னர்களின் மன்னர் அகாமனிசியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கிமு 405/358 |
முன்னையவர் | இரண்டாம் டேரியஸ் |
பின்னையவர் | மூன்றாம் அர்தசெராக்சஸ் |
பிறப்பு | கிமு 453/445 |
இறப்பு | கிமு 358 (வயது 86 அல்லது 94) |
புதைத்த இடம் | |
இராணி | ஸ்டேடிரா |
குழந்தைகளின் பெயர்கள் | மூன்றாம் அர்தசெராக்சஸ் டேரியஸ் |
அரசமரபு | அகாமனிசிய வம்சம் |
தந்தை | இரண்டாம் டேரியஸ் |
தாய் | பரிசதிஸ் |
மதம் | சொரோஷ்டிரிய சமயம் |
இரண்டாம் அர்தசெராக்சஸ் பதவியேற்ற சிறிது காலத்திலேயே, அவரது தம்பி இளைய சைரஸ் கிரேக்கர்களுடன் கூட்டு சேர்ந்து தனிப்படை அமைத்து, அகாமனிசியப் பேரரசின் அரியணை ஏற கிமு 401-இல் போரிட்டார். போரில் இளைய சைரஸ் மாண்டார். இதனால் இரண்டாம் அர்தசெராக்சசிற்கு எதிராக கிமு 391-380களில் சைப்பிரஸ் மற்றும் போனீசியாவில் (கிமு 380) கிளர்ச்சிகள் ஏற்பட்டது. மேலும் மேற்கு சத்திரபதிகளும் இரண்டாம் அர்தசெராக்சசிற்கு எதிராக கிளர்ச்சிகள் செய்தனர். பார்த்தியப் பேரரசினர் இரண்டாம் அர்தசெராகசை தங்கள் முன்னோடியாக கருதினர்.
கிரேக்க ஸ்பார்ட்டன் மன்னர் அஜிசிலேயஸ் படைகள் கிமு 396-395களில் அகாமனிசியப் பேரரசின் மேற்கு பகுதியான ஆசிய மைனரை தாக்கின. இரண்டாம் அர்தசெராக்சஸ் தங்கள் முன்னாள் எதிரிகளான கிரேக்க ஸ்பார்ட்டன்களுடன் கிமு 395-387களில் மோதினார். மேலும் ஸ்பார்ட்டன்களின் கவனத்தை திசை திருப்ப ஏதன்ஸ், கொரிந்து நாட்டவர்களுக்கு பத்தாயிரம் பாரசீக நாணயங்கள் லஞ்சப் பணமாக வழங்கினார்.
ஏதன்ஸ் நாட்டவர்களுடன் கூட்டு சேர்ந்த இரண்டாம் அர்தசெராக்சஸ், கிமு 394-இல் ஸ்பார்ட்டன்களின் கப்பற்படையை முழுவதும் அழித்தார். இருப்பினும் ஏதன்ஸ் நாட்டவர்கள் ஆசிய மைனரில் உள்ள கிரேக்க நகரங்களை கைப்பற்றினர். கிமு 386-இல் தங்கள் கூட்டாளிகளால் ஏமாற்ப்பட்ட இரண்டாம் அர்தசெராக்சஸ், ஸ்பார்ட்டா நாட்டவர்களுடன் ஒரு போர் அமைதி ஒப்ப்ந்தம் செய்து கொண்டார்.
எகிப்தியர்கள் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் அரதசெராக்சசுக்கு எதிராக கிளர்ச்சிகள் துவக்கினர். இதனால் கிமு 373-இல் இரண்டாம் அர்தசெராக்சஸ் எகிப்து மீது படையெடுத்தார். எகிப்தியர்கள், ஸ்பார்ட்டன்களுடன் கூட்டு சேர்ந்து போரிட்டதால் இரண்டாம் அர்தசெராக்சஸ் போரில் பின்வாங்கினார். இருப்பினும் போனீசியாவை எகிப்திய-ஸ்பார்ட்டன் படைகளிடமிருந்து கைப்பற்றினர்.
கிமு 377-இல் இரண்டாம் அர்தசெராக்சஸ் எகிப்து மீது இரண்டு இலட்சம் படைவீரர்கள் மற்றும் 500 போர்க்கப்பல்களுடன் கீழ் எகிப்தை முற்றுகையிட்டார். முற்றுகையின் போது எகிப்திய பார்வோன் முதலாம் நெக்தனெபோவுக்கு கிரேக்கப்படைகள் உதவியதாலும், நைல் நதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்காலும், எகிப்தை கைப்பற்ற முடியாமல் பாரசீகப்படைகள் பின்வாங்கியது.
கிமு 372 முதல் அகாமனிசியப் பேரரசின் மாகாண ஆளுநர்களான மேற்கு சத்ரபதிகள் இரண்டாம் அரதசெராக்சசுக்கு எதிராக கிளர்ச்சிகள் மேற்கொண்டனர். மேலும் எகிப்திய மன்னர் முதலாம் நெக்தனெபோ மேற்கு சத்ரபதிகளுக்கு லஞ்சப் பணம் கொடுத்து, அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக திசை திருப்பினர். மேலும் கிரேக்கர்களுடன் கூட்டு சேர்ந்தார். இறுதியாக கிமு 362-இல் இரண்டாம் அர்தசெராக்சஸ் சத்ரபதிகளின் கிளர்ச்சிகளை அடக்கினார்.
கிரேக்க தீபன் இராச்சியத்தின் மேலாதிக்கத்தின் போது, குறிப்பாக தீபன்-ஸ்பார்டன் போரின் போது, கிரேக்க நகர அரசுகளுக்ககு இடையிலான மோதல்களில் இரண்டாம் அர்தசெராக்சஸ் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய முயன்றார். அவர் அபிதோசின் பிலிஸ்கஸ், ஒரு துணை-அரசப்பிரதிநிதி மற்றும் அகமானிசியப் பேரரசின் சத்ரபதி அரியோபர்சானஸின் இராணுவத் தளபதி, கிரேக்கர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு உதவுவதற்காக டெல்பிக்கு அனுப்பினார். அபிடோஸின் ஃபிலிகஸின் நோக்கம், டெல்பியில் மீண்டும் இணைந்த கிரேக்க போர் வீரர்களுக்கு இடையே ஒரு பொதுவான சமாதானத்தை ஏற்படுத்த உதவுவதாகும். தீப்ஸ் மெசேனியாவை ஸ்பார்டான்களிடம் திருப்பி ஒப்படைக்க மறுத்ததால் பேச்சுவார்த்தை முறிந்தது.
அபிதோஸ்க்கு திரும்புவதற்கு முன், பிலிகஸ் ஸ்பார்டான்களுக்கு ஒரு இராணுவத்திற்கு நிதியளிக்க பாரசீகத்தின் நிதியைப் பயன்படுத்தினார். அவர் ஆரம்பத்திலிருந்தே ஸ்பார்டான்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறினார். ஒரு புதிய இராணுவப் படையை நிறுவ பாரசீகத்தின் நிதியுதவியுடன், ஸ்பார்டா போரைத் தொடர முடிந்தது. பணியமர்த்தப்பட்ட கூலிப்படையில், பிலிஸ்கஸ் ஸ்பார்டான்களுக்கு 2,000 கொடுத்தார். மேலும் செர்சோனியர்களை இராணுவ ரீதியாக மீட்க அவர்களுக்கு உதவ அரசர் சார்பாக அவர்களுக்கு உறுதியளித்தார். பிலிஸ்கஸ் மற்றும் அரியோபர்சானேஸ் இருவரும் ஏதென்ஸின் குடிமக்களாக ஆக்கப்பட்டனர், இது நகர-மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட முக்கிய சேவைகளை பரிந்துரைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கௌரவமாகும்.
கிமு 367-இல் இலையுதிர்காலத்தில், முதலில் ஸ்பார்டான்கள், விரைவில் ஏதெனியர்கள், ஆர்காடியன்கள், அர்கிவ்ஸ், எலியன்ஸ், தீபன்ஸ் மற்றும் பிற கிரேக்க நகர-மாநிலங்கள், அச்செமனிட் அரசர் II அர்டாக்செர்க்ஸின் ஆதரவைப் பெறுவதற்காக சூசாவுக்கு தூதர்களை அனுப்பினர். கிரேக்க மோதலில் பாரசீக மன்னர் ஒரு புதிய சமாதான உடன்படிக்கையை முன்மொழிந்தார், இந்த முறை தீப்ஸுக்கு ஆதரவாக மிகவும் சாய்ந்தார், இது மெசேனியா சுதந்திரமாக இருக்க வேண்டும் மற்றும் ஏதெனியன் கடற்படையை அகற்ற வேண்டும். இந்த சமாதான முன்மொழிவு தீப்ஸைத் தவிர பெரும்பாலான கிரேக்கக் கட்சிகளால் நிராகரிக்கப்பட்டது.
பாரசீக மன்னரின் தீப்ஸின் ஆதரவில் அதிருப்தி அடைந்த ஸ்பார்டா மற்றும் ஏதென்ஸ், பாரசீகப் பேரரசரின் எதிர்ப்பாளர்களுக்கு கவனமாக இராணுவ ஆதரவை வழங்க முடிவு செய்தனர். ஏதென்சும், ஸ்பார்டாவும் கிளர்ச்சி கொண்ட சத்ரபதிகளுக்கு, குறிப்பாக அரியோபர்சேன்களுக்கு ஆதரவை வழங்கின. ஸ்பார்டா ஒரு வயதான ஏஜெசிலாஸ் II இன் கீழ் அரியோபர்சேன்ஸுக்கு ஒரு படையை அனுப்பினார், அதே சமயம் ஏதென்ஸ் டிமோதியஸின் கீழ் ஒரு படையை அனுப்பினார். இருப்பினும் அரியோபர்சேன்ஸ் அச்செமனிட் மன்னருடன் முன்னணி மோதலில் நுழைந்தது தெளிவாகத் தெரிந்தவுடன் அது திசைதிருப்பப்பட்டது. சாப்ரியாஸின் கீழ் ஒரு ஏதெனியன் கூலிப்படை எகிப்திய பார்வோனுக்கு அனுப்பப்பட்டது. பார்வோன் பாரசீகப் பேரரசருக்கு எதிராகவும் போரிட்டார்.
This article uses material from the Wikipedia தமிழ் article இரண்டாம் அர்தசெராக்சஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.