அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறப்பு: 1942 ஆம் ஆண்டு சூலை மாதம் 3ம் தேதி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்.
1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
அடூர் கோபாலகிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 3 சூலை 1941 (அகவை 82) |
பணி | இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் |
பாணி | Parallel Cinema |
விருதுகள் | Knight of the Legion of Honour, Commandeur des Arts et des Lettres |
இணையம் | http://www.adoorgopalakrishnan.com/profile.htm |
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டன.
This article uses material from the Wikipedia தமிழ் article அடூர் கோபாலகிருஷ்ணன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.