ஹங்கேரியப் புரட்சி, 1956 (Hungarian Revolution of 1956) என்பது அன்றைய ஹங்கேரியின் ஸ்டாலின் சார்பு கம்யூனிச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்த எழுச்சியைக் குறிக்கும்.
இது 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 23 இல் ஆரம்பித்து நவம்பர் 10 ஆம் நாள் முடிவுக்கு வந்தது.
ஹங்கேரியப் புரட்சி, 1956 Hungarian Revolution of 1956 | |||||||
---|---|---|---|---|---|---|---|
பனிப்போர் பகுதி | |||||||
ஜங்கேரிய கொடியுடன் சோவியத் கவச வாகனம் | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
சோவியத் ஒன்றியம் ஹங்கேரி | உள்ளூர் ஹங்கேரிய துணை இராணுவத்தினர் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இவான் கோனெவ் | பல்வேறு துணை இராணுவத் தலைவர்கள் | ||||||
பலம் | |||||||
150,000 படையினர், 6,000 தாங்கிகள் | எண்ணிக்கை இல்லை | ||||||
இழப்புகள் | |||||||
(சோவியத் இழப்புகள் மட்டும்) 722 இறப்பு 1,251 காயம் | 2,500 இறப்பு(அண்.) 13,000 காயம் (அண்.) |
ஹங்கேரியர்களின் எழுச்சி ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எழுச்சி ஊர்வலமாக தலைநகர் புடாபெஸ்ட்டின் மையப் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஆரம்பமானது. தமது கோரிக்கைகளைத் தரவென ஹங்கேரிய வானொலிக் கட்டிடத்தினுள் புகுந்த மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதனை அடுத்து தலைநகரில் கலவரம் மூண்டது.
புரட்சி நாடெங்கும் பரவியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் இராணுவக் குழுக்களாக ஒன்றிணைந்து காவற்துறையினருடனும் சோவியத் படைகளுடனும் போரிட்டனர். சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகள் மற்றும் காவற்துறையினர் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். அரசு கவிழ்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்த பல உள்ளூராட்சி அமைப்புகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றி அரசியல் மாற்றத்தைக் கோரினர். புதிய அரசு வார்சா உடன்படிக்கையில் இருந்து விலாகுவதாக அறிவித்து சுதந்திரமான தேர்தல்களை நடத்தவிருப்பதாக அறிவித்தது. அக்டோபர் இறுதியில் போர் ஓரளவு ஓய்ந்து நாடு அமைதியானது.
சோவியத் படைகளைத் திரும்ப அழைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு புரட்சியை அடக்குவதற்கு அது முடிவெடுத்தது. இதன்படி, நவம்பர் 4 ஆம் நாள் சோவியத்தின் பெரும் எண்ணிக்கையிலான படையினர் புடாபெஸ் நகரையும் நாட்டின் ஏனைய நகரங்களையும் முற்றுகையிட்டனர். போர் மீண்டும் வெடித்தது. ஹங்கேரியர்களின் எதிர்ப்பு நவம்பர் 10 ஆம் நாள் வரை நீடித்தது. இச்சண்டைகளின் போது 2,500 இற்கும் அதிகமான ஹங்கேரியர்களும், 700 சோவியத் படையினரும் கொல்லப்பட்டனர். 200,000 ஹங்கேரியர்கள் அகதிகளாக வெளியேறினர். பெருந்தொகையானோர் அடுத்தடுத்த மாதங்களில் கைது செய்யப்பட்டனர். 1957 ஜனவரிக்குள் புதிய சோவியத்-சார்பு அரசு அனைத்து பொது ம்க்கள் எதிர்ப்புகளையும் அடக்கியது.
இப்புரட்சி பற்றிய மக்களின் கருத்துக்கள் அடுத்த 30 ஆண்டு காலத்துக்கு தடை விதிக்கப்பட்டன. பனிப்போரின் முடிவில் 1989 ஆம் ஆண்டில் அக்டோபர் 23 ஆம் நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article அங்கேரியப் புரட்சி, 1956, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.