மை தீட்டிக் கண்ணை அழகுபடுத்துவது போலப் பாட்டுக்கு ஒலி-வண்ணம் (tonal colour) கொடுத்துப் பாடலை அழகு படுத்துவது வண்ணம்.
இதனை வடநூலார் சந்தம் என்பர். தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34-இல், வண்ணமும் ஒன்று. அது 20 வகை.
இது இருபது வகைப்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வண்ணங்களுள்,
இவை மூன்றும், குறில், நெடில் எழுத்துகள் பாடல்களின் இடம்பெறும் நிலையை வைத்துப் பெயரிடப்படுகின்றன.
குறில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருவதனைத் தொல்காப்பியம் குறுஞ்சீர் வண்ணம் என்கிறது.
குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும் (தொல். பொருள் 213)
(எடுத்துக்காட்டு)
பொழில் தரு நறுமலரே புதுமணம் விரிமணலே (சிலம்பு 7:14)
நெடில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வரும் நிலையில் அமைவதனை நெடுஞ்சீர் வண்ணம் என்கிறது.
நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும் (தொ.பொ.212)
(எடுத்துக்காட்டு)
வாராயோ தாயே - பாதம்
தாராயோ நீயே - (கீர்த்தனை)
நெட்டெழுத்தும், குற்றெழுத்தும் சார்ந்து வருவதனைச் சித்திர வண்ணம் என்று குறிப்பிடுகின்றது.
(எடுத்துக்காட்டு)
பாதி மதிநதி போது மணிசடை - (திருப்புகழ்)
ஒரு பாட்டில் வல்லெழுத்துகள் மிக்கு வருவதனை 'வல்லிசை வண்ணம்' என்பர்.
வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே (தொல்காப்பியம்.பொ.208)
(எடுத்துக்காட்டு)
புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண்
ஒற்றை விடையன் (சம்பந்தர் தேவாரம். 3:68:2)
ஒரு பாட்டில் மெல்லெழுத்துகள் மிக்கு வருவதனை 'மெல்லிசை வண்ணம்' என்பர்.
மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே” (தொல்காப்பியம்.பொ.209)
(எடுத்துக்காட்டு)
ஒரு பாட்டில் இடையினயெழுத்துகள் மிக்கு வருவதனை 'இயைபு வண்ணம்' என்பர்.
இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே ” (தொல்காப்பியம்.பொ.210)
(எடுத்துக்காட்டு)
This article uses material from the Wikipedia தமிழ் article வண்ணம் (யாப்பு), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.