சங்கரம்குமாரத்து கிருட்டிணன் வக்கீல் (Changaramkumarath Krishnan Vakkeel ) இவர் ஓர் சமூகத் தலைவரும், வங்கியாளரும், சமூக சீர்திருத்தவாதியும், இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஆவார்.
ச. கிருட்டிணன் கேரளாவின் திருச்சூரில் 1867 சூன் 11 அன்று பிறந்தார். மூர்கோத்து குமரன் என்பவரிடமிருந்து மிதவாதி (சீர்திருத்தவாதி) என்ற செய்தித்தாளை இவர் கையகப் படுத்திக் கொண்டார். அந்தக் காலங்களில் மலபாரின் சிறந்த சமூக சீர்திருத்தவாதியான மருத்துவர் அய்யத்தான் கோபாலன் என்பவரின் தூண்டுதல், ஆலோசனையின் காரணமாக கிருஷ்ணன் பத்திரிக்கையை எடுத்து நடத்தினார். மிதவாதி பத்திரிக்கை "சமூகத்தில் மனச்சோர்வடைந்தவர்"களின் பைபிளாகவும், "திய்யாக்களின் இதழ்" என்றும் அழைக்கப்பட்டது.
கொச்சி மெட்ரோ என்ற இதழ் கேரள பத்திரிகைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் ச. கிருட்டிணனை 1907க்கு கீழ் முதன்முதலில் பட்டியலிட்டது. அது கூறுகிறது “மிதவாதி- தலச்சேரியில் இருந்து வந்து கேரள பத்திரிகை வரலாற்றில் அடுத்த முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது. இது முதல் உலகப் போரின்போது யுத்த முன்னணியில் இருந்து சமீபத்திய செய்திகளைக் கொண்ட ஒரு தினசரி செய்திகளை வெளியிட்டது. தனித்தனியாக, கேரள அரசு "சமூக சீர்திருத்தங்களுக்கான இயக்கத்திலும், சமூகத்தின் பலவீனமான பிரிவுகளின் முன்னேற்றத்திலும் மிதவாதி முன்னணியில் இருந்தது" என்று கூறுகிறது.
ச. கிருட்டிணன் நாராயண குருவை பின்பற்றுபவராக இருந்தார். நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவராக இருந்த இவர், கேரளாவின் தனது சொந்தப் பகுதியான வடக்கு மலபார் மாவட்டத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக இருந்தார். இவர் பல நாராயண தர்ம பரிபாலன யோக மாநாடுகளில் பங்கேற்றார். மேலும் சிவகிரியில் நடந்த அதன் 9ஆவது ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். இவர் நாராயண தர்ம பரிபாலன யோகத்திற்கு ஒரு சிறந்த அமைப்பாளராகவும் நிதி திரட்டுபவராகவும் இருந்தார். இவர் அனைத்து ஆசிரம சொத்துக்களுக்கும் தர்மகார்த்தாவாக நியமிக்கப்பட்டார். இவர் வைக்கம் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். 1907 ஆம் ஆண்டில் கிருட்டிணன் (புகழ்பெற்ற கல்லிங்கல் மாடத்தின் இராரிச்சன் மூப்பன்) நாராயண குருவை மலபாருக்கு அழைத்தார். குருவும் இவரது அழைப்பை ஏற்று மலபாரில் பல இடங்களுக்கு வந்து சென்றார்.
ச. கிருட்டிணன் சுதந்திர இயக்கத்தை ஆதரிக்கவில்லை. இந்திய தேசிய காங்கிரசு மற்றும் மகாத்மா காந்திக்கு எதிராக இருந்தார். இவர் பிரிட்டிசு ஆட்சியை ஆதரித்தார். ஏனென்றால் சுதந்திரம் இல்லாமல் ஆட்சிக்கான சுதந்திரம் அர்த்தமற்றது என்று இவர் நம்பினார். மலபார் கிளர்ச்சியைத் தடுக்க தவறியதற்கு காந்திஜியை குற்றம் சாட்டினார். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் வெல்லப்படும் தேசிய சுதந்திரம் குறித்து இவர் சந்தேகப்பட்டார். தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சுதந்திரம் அடையப்பட வேண்டும் என்று இவர் விரும்பினார்.
This article uses material from the Wikipedia தமிழ் article மிதவாதி கிருட்டிணன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.