பட்டனார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார்.
பட்டனாரை ஸ்ரீ பட்டனார் எனச் சிறப்பித்துக் கூறுவது வழக்கம். இவர் வேப்பத்தூரில் பிறந்தவர். பகவத் கீதை நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து விருத்தப் பாக்களால் பாடியவர். இவரது தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு இவர் பரமார்த்த தரிசனம் எனப் பெயர் சூட்டினார். எனினும் பகவத் கீதை என்றே இந்த நூல் ஏடுகளில் காணப்படுகிறது.
பட்டனார் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. எனினும் பட்டாகரன், வேதப் பட்டாகரன் என்னும் பெயர்கள் இவருக்கு வழங்கப்பட்டதாகச் சில பாடல்களால் அறியமுடிகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article பட்டனார், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.