தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர்.
இக் கட்டுரை வாசிப்போருக்கு தெளிவற்று அல்லது குழப்பமாக உள்ளது.(மார்ச் 2016) |
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி கோடல் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
என்னும் மலர்கள் உள்ளன. ஆயின் தோன்றி-மலர் என்பது இருநிறமும் கலந்த மலரோ என எண்ணவேண்டியுள்ளது.[சான்று தேவை]
குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இதனைச் ‘சுடர்பூந் தோன்றி’ எனக் குறிப்பிடுகிறது.
இப்பெயர் ‘நள்ளிருள் நாறி’ என்னும் பெயருக்குத் தரப்பட்டுள்ள விளக்கம் போல் உள்ளது. தோன்றி < தோன்றிப்பூ < சுடர்பூந்தோன்றிப்பூ – என இந்தப் பூவின் விளக்கம் அமைகிறது.
மருதோன்றி, மருத்தோன்றி, மருதாணி, அழகணம் என்றெல்லாம் கூறப்படும் பூவின் பெயரே தோன்றி என வழக்காறு நோக்கிக் கொள்வது பொருத்தமானது.[சான்று தேவை]
(‘தாமரை’ என்னும் சொல்லிலுள்ள ‘தா’ குறைந்து ‘மரை’ என நின்று, ‘மரை’ என்னும் சொல் தாமரை மலரை உணர்த்துகிறது.[சான்று தேவை] இதனை முதற்குறை என்று இலக்கணம் குறிப்பிடுகிறது.)
அதுபோல ‘மருத்தோன்றி’ என்னும் சொல்லிலுள்ள ‘மரு’ என்னும் முதல் மறைந்து ‘தோன்றி’ என நின்று மருதாணிப் பூவை உணர்த்துகிறது எனல் பொருத்தமானது.[சான்று தேவை] இதனை இப்படிப் பார்க்கவேண்டும். தோன்றி என்பது பழந்தமிழ். மரு = மணம். தொலை தூரம் மணக்கும் பூ என விளக்கும் விளக்கப்பெயராக அமைந்துள்ளது ‘மருத்தோன்றி’.[சான்று தேவை]
This article uses material from the Wikipedia தமிழ் article தோன்றி (மலர்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.