மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, ஜனவரி 12, 1917 - பெப்ரவரி 5 2008), ஆழ்நிலை தியானத்தை (transcendental meditation) இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர்.
ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, ஐக்கிய இராச்சியம், சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.
மகரிஷி மகேஷ் யோகி Maharishi Mahesh Yogi | |
---|---|
பிறப்பு | ஜனவரி 12, 1917 ஜபல்பூர், இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 5, 2008 விலோட்ராப், நெதர்லாந்து | (அகவை 91)
பெற்றோர் | தந்தை: சிறீராம் பிரசாத் |
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி, 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார்.
மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார். 1960களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.
1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்.
This article uses material from the Wikipedia தமிழ் article மகேஷ் யோகி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.