மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி (Maha Shivaratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.

இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

மகா சிவராத்திரி
புனே கோவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

சிவராத்திரி விரத வகைகள்

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

  1. நித்திய சிவராத்திரி
  2. மாத சிவராத்திரி
  3. பட்ச சிவராத்திரி
  4. யோக சிவராத்திரி
  5. மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

முதல் யாமம்

இரண்டாம் யாமம்

மூன்றாம் யாமம்

  • வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
  • அபிஷேகம் - தேன், பாலோதகம்
  • அலங்காரம் - கிளுவை, விளா
  • அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
  • நிவேதனம் - எள்அன்னம்
  • பழம் - மாதுளம்
  • பட்டு - வெண் பட்டு
  • தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
  • மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
  • புகை - மேகம், கருங் குங்கிலியம்
  • ஒளி- ஐதுமுக தீபம்

நான்காம் யாமம்

  • வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
  • அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
  • அலங்காரம் - கரு நொச்சி
  • அர்ச்சனை - நந்தியாவட்டை
  • நிவேதனம் - வெண்சாதம்
  • பழம் - நானாவித பழங்கள்
  • பட்டு - நீலப் பட்டு
  • தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
  • மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
  • புகை - கர்ப்பூரம், இலவங்கம்
  • ஒளி- மூன்று முக தீபம்

இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.

விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்

  • திருக்கேதீச்சரப் பதிகங்கள்
  • திருவண்ணாமலைப் பதிகங்கள்

உசாத்துணைகள்

பலன் தரும் பரிகாரங்கள்

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

மகா சிவராத்திரி சிவராத்திரி விரத வகைகள்மகா சிவராத்திரி நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்மகா சிவராத்திரி இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்மகா சிவராத்திரி விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்மகா சிவராத்திரி உசாத்துணைகள்மகா சிவராத்திரி பலன் தரும் பரிகாரங்கள்மகா சிவராத்திரி இவற்றையும் காண்கமகா சிவராத்திரி மேற்கோள்கள்மகா சிவராத்திரிஇந்துமகா சிவராத்திரி கற்பம்மாசி

🔥 Trending searches on Wiki தமிழ்:

போதைப்பொருள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்திருவோணம் (பஞ்சாங்கம்)இந்திய தேசிய காங்கிரசுசீறாப் புராணம்இராவண காவியம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்முத்தொள்ளாயிரம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்ஜி. யு. போப்உடன்கட்டை ஏறல்அழகர் கோவில்இந்திய நிதி ஆணையம்மறவர் (இனக் குழுமம்)குறுந்தொகைபவன் கல்யாண்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இலங்கைவிஜய் (நடிகர்)ஆசாரக்கோவைஅழகிய தமிழ்மகன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழில் சிற்றிலக்கியங்கள்சீமையகத்திதிருக்குறள்பர்வத மலைகேள்விதர்மா (1998 திரைப்படம்)நீர் பாதுகாப்புமார்கஸ் ஸ்டோய்னிஸ்தாராபாரதிமுன்னின்பம்உயர் இரத்த அழுத்தம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சென்னை சூப்பர் கிங்ஸ்சப்தகன்னியர்தினமலர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மழைநீர் சேகரிப்புகாதல் தேசம்மாமல்லபுரம்வாட்சப்ஜீரோ (2016 திரைப்படம்)பெயர்திருக்குர்ஆன்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்ஆங்கிலம்தமிழர் அளவை முறைகள்விசாகம் (பஞ்சாங்கம்)புறப்பொருள்ஆனைக்கொய்யாஇந்தியக் குடியரசுத் தலைவர்மீனா (நடிகை)இளையராஜாசெயற்கை நுண்ணறிவுதமிழ் மன்னர்களின் பட்டியல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்தியாமங்கலதேவி கண்ணகி கோவில்பொருநராற்றுப்படைசிட்டுக்குருவிபள்ளர்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்மதீச பத்திரனகொடைக்கானல்முல்லை (திணை)கண்ணகிபெயர்ச்சொல்தொழினுட்பம்நான்மணிக்கடிகைபத்துப்பாட்டுஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019குடலிறக்கம்கன்னத்தில் முத்தமிட்டால்🡆 More